Headlines

புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட நவவி MP

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் அண்மையில் புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். புத்தளம் நகரின் பிரதான வைத்தியசாலையின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கண்டறிவதனை குறிக்கோளாக கொண்டதாக இவ்விஜயம் அமைந்திருந்தது. இவ்வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி டாக்டர் சுமித் ரத்தனாயக்க மற்றும் வைத்தியர்கள் உடனான மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்றும் இங்கு நடைபெற்றதுடன், வைத்தியசாலை வளாகம், கட்டிட வேலைகள் நடைபெறும்…

Read More

மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்துகொண்ட நவவி MP

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் கா.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.எம் தாஹிர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி…

Read More

ஓட்டமாவடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் பிரச்சினைக்கு பிரதியமைச்சர் அமீர் அலி உடனடித்தீர்வு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் அறுவடை செய்யும் நெல் 15.02.2017ம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தும் சபையால் கொள்முதல் செய்யப்படுமென்று கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதிமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். நேற்று முன்தினம்  14.02.2017ம் திகதி மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலயே அவர் தெரிவித்தார். வாழைச்சேனை கமநல சேவைப் பிரிவிலுள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்படும் தங்களது நெல் அரசாங்கத்தின் நிர்ணய விலையில் தனியார் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படவில்லையென்றும் நெல் சந்தைப்படுத்தும் சபை கொள்முதலை இன்னும் ஆரம்பிக்கவில்லையென்றும் ஓட்டமாவடியில் கவனயீர்ப்புப்பேரணியொன்றை…

Read More

நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டி

அ/ நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டார்.

Read More

அல்-நசார் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ்

கொழும்பு 14 அல்-நசார் வித்தியாலயத்தில் 2017 ஆண்டு தரம் ஒன்று பிள்ளைகளின் பெற்றோர்களினால் பாடசாலைக்கு PHOTOCOPY இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்ட நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் கலந்துகொண்டார்.  

Read More

நாச்சியாதீவு அல்-ஹிக்கம் அரபுக் கல்லூரிக்கு விஜயம் செய்த இஸ்ஹாக் ரஹுமான் MP

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அண்மையில் அ/ நாச்சியாதீவு  அல்-ஹிக்கம் அரபுக் கல்லூரிக்கு விஜயம் செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார். இச்சந்திப்பின்போது கல்லூரியின் எதிர்கால வளர்ச்சி பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

Read More

பங்களாதேஸ் செல்லும் வீரர்களுக்கு றிப்கான் பதியுதீன் நிதி உதவி

உலகக்கிண்ண ரோல் பந்து விளையாட்டுப் போட்டிக்காக இலங்கையில் இருந்து செல்லும் 21 வீர வீராங்கனைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் நிதி வழங்கிவைப்பு. நேற்று இரவு (15) உலகக்கிண்ண ரோல் பந்து  விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு இலங்கையில் இருந்து சென்ற 21 வீர வீராங்கனைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினரும் வடமாகாண சபையின்  பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும்  தேசமானிய  றிப்கான் பதியுதீன் அவர்கள்  தன்னால் இயன்ற…

Read More

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட சோளம் விதைகள் 

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட சோளம் விதைகளை பயிரிட்டு அதனை  அறுவடை செய்யும்  நிகழ்வு நேற்று 15.02.2017ஆம் திகதி மேட்டு நில விவசாயிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.   இந்நிகழ்வில் கௌரவ பிரதி அமைச்சர் அமீர்அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு  அறுவடையினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர்கள் கலீல் முஸ்தபா.கண்ணன் மற்றும்  விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட   திருப்பலுகாம   மேட்டுநில  …

Read More

மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

மண்முனை தென் மேற்கு   பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி  பாராளுமன்ற உறுப்பினர் அமல்  ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் திருமதி தினேஷ்   அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் , கிழக்கு  மாகாண சபை விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம்   மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்னம், வெள்ளிமலை, பிரசன்னா ,…

Read More

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

போரதீவுப்பற்று வெல்லாவெளி  பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி  பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் வில்வரெட்னம்  அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் , மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்னம், வெள்ளிமலை, கருணாகரன், மற்றும்  திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட இஸ்ஹாக் ரஹுமான் MP

அநுராதபுரம் , தேவாநம்பியதிஸ்ஸபுரம் அ/ அஸ்ஹர் முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையின் அண்மையில் இடம்பெற்ற  வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டார்.

Read More

கள்ளஞ்சியகாம முஸ்லிம் பாடசாலையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு

கள்ளஞ்சியகாம , காகம அ/ அரபா முஸ்லிம் வித்தியாலயத்தின் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுரம மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் கலந்துகொண்டார்.

Read More