Headlines

கடல்சார் மற்றும் விருந்தோம்பல் கற்கைகள் பாடசாலை – பிரதமருக்குக் நவவி MP கடிதம்

புத்தளம் மாவட்டத்திற்கான கடல் சார் பல்கலைகழகம் (Ocean University) மற்றும் விருந்தோம்பல் கற்கைகள் பாடசாலை (Hotel School) ஆகிய கற்கை நிலையங்களுக்கான நிர்மாண வேலைகளை துரிதமாக மேற்கொள்ள கூறி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி…

Read More

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சுற்றி வளைப்பில் மேலும் 135 வர்த்தகர்கள் அகப்பட்டனர்!!!

அமைச்சின் ஊடகப் பிரிவு வியாபாரச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் அரிசிப்புரளிக்கு முடிவு கட்டும் வகையில் அமைச்சர் ரிஷாட்டின் பணிப்புரைக்கமைய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கையில் மேலும் பல வர்த்தகர்கள் அகப்பட்டுள்ளனர் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி 52 பேர் அரிசியை விலை கூட்டி விற்று அகப்பட்டிருந்தனர். நேற்று (21) ஆம் திகதி நுகர்வோர் பாதுகாப்பு சபை விசாரணை அதிகாரிகள் வர்த்தக…

Read More

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்புப் போராட்டத்தை அ.இ.ம.கா. ஆதரிக்கிறது

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மக்களின் வாழ்வு நிலங்களை பாதுகாப்பு படையினரிடம் இருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் மண் மீட்புப் போராட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரித்து நிற்கிறது. எஸ். சுபைர்தீன் செயலாளர் நாயகம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 

Read More

வில்பத்தில் முஸ்லிம்கள் குடியேறவில்லை: வடமாகாணசபையில் பிரேரணை

-பாறுக் ஷிஹான் வில்பத்து காட்டில் காடழிப்பு செய்து முஸ்லீம் மக்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள் எனும் குற்ற சாட்டில் உண்மை இல்லை என வடமாகாண எதிர்கட்சி உறுப்பினர் அ.ஜெயதிலக சபையில் பிரேரணை ஒன்றினை முன் மொழிந்தார். வடமாகாண சபையின் 85அவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த பிரேரணையை முன் மொழிந்தார். மன்னார் மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தில் வசித்த முஸ்லீம் மக்கள் 1990 ஆம் ஆண்டு விடுதலை புலிகளினால் வெளியேற்றப்பட்டு…

Read More

தொழில் பெறுவதில் உள்ள சவால்களை முறியடிப்போம்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவரும் , புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ M.H.M . நவவி ஹாஜியார் அவர்களின் ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளைஞர் அணி ஏற்பாடு செய்திருந்த சிகரம் தொடு எனும் பட்டதாரிகளின் ஆவணம் திரட்டல் நிகழ்வு கடந்த சனியன்று(18.02.2017) இனிதே நடந்து முடிந்தது . அதற்கு ஒத்துழைப்பு நல்கிய கட்சியின் சொந்தங்கள் / வருகை தந்த பட்டதாரிகள் / ஊடகவியல் நண்பர்கள் / வளவாளராக வருகை தந்த…

Read More

“உணர்ச்சிவசப்பட வேண்டாம்” தம்புள்ளை விவகாரம் தொடர்பில் உலமா சபை

தம்­புள்­ளையின் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் பள்­ளி­வா­ச­லுக்கு கடந்த சில தினங்­க­ளாக விடு­க்­கப்­படும் சவால்கள் தொடர்பில் முஸ்­லிம்கள் உணர்ச்­சி­வ­சப்­பட வேண்­டா­மெ­னவும் அமைதி காக்கும் படியும் அல்­லாஹ்­விடம் துஆ கேட்கும் படியும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. தம்­புள்ளை பள்­ளி­வா­சலை புதிய இட­மொன்­றுக்கு இட­மாற்­றிக்­கொள்­வ­தற்­கான காணி ஒதுக்­கீட்டில் ஏற்­பட்­டுள்ள இழு­ப­றி­நிலை மற்றும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு விடு­க்­கப்­பட்­டுள்ள சவால்கள் தொடர்­பாக நேற்­றுக்­காலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா பிர­தி­நி­தி­க­ளுக்கும் தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் நிர்­வாக…

Read More

நுகர்வோர் அதிகாரசபையின் வேட்டையில் சிக்கிய 52 வர்த்தகர்கள்

-அமைச்சின் ஊடகப்பிரிவு நுகர்வோர் அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள் 137 வர்த்தக நிலையங்களை நேற்று (20)  சுற்றிவளைத்த போது, அரிசியை அதிக விலையில் விற்ற 52 வியாபாரிகள் சிக்கிக் கொண்டனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 13 வர்த்தகர்களும், கண்டியில் 12 வர்த்தகர்களு, குருநாகலில் 10 வர்த்தகளும், அநுராதபுரம் 8 வர்த்தகர்கள், வவுனியா 7 வர்த்தகர்கள், பொலநறுவை மற்றும் கேகாலையில் 6 வர்த்தகர்களும் இந்த சுற்றிவளைப்பின் போது அகப்பட்டுக் கொண்டனர். நுகர்வோர்கள் வழங்கிய…

Read More

மருதமுனை காரியப்பர் வீதி அமைச்சர் றிசாட்டினால் காபட் வீதியாக புனரமைப்பு

மருதமுனையில் பிரபலம் பெற்ற வீதியான காரியப்பர் வீதி காபட் வீதியாக புனரமைப்பதற்கு பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் அபிவிரித்தித் திட்டமிடல் இணைப்பாளருமான சட்டத்தரணி துல்கர் நயீம் தெரிவித்தார். மேற்படி வீதியானது மிக நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாது பள்ளமும் படுகுழியுமாகக் காட்சியளிக்கின்றது. இதனால் இந்தப்பாதையால் போக்குவரத்தில் ஈடுபடுவோரின் விசனத்துக்கும் உள்ளாகியிருந்தது. ஏற்கனவே துல்கர் நயீம் மாகாணசபை உறுப்பினராக இருந்த காலத்தில் மருதமுனையின் உள்வீதிகளில் முக்கியமான வீதிகள் அனைத்துமே ஜப்பானிய…

Read More

பா.உ. இஸ்ஹாக் ரஹுமானின் கலாவெவ அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் கலாவெவ அலுவலகத்தில் அண்மையில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.

Read More

ஜெயந்தியாய பிரதேசத்தில் இடம்பெற்ற தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

நேற்று முன்தினம் 19.02.2017 ஆம் திகதி பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஜெயந்தியாய அபிவிருத்தி குழு தலைவர் கரீம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்குவதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின்…

Read More

ஒரே வகையான அரிசிக்கு இரண்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டது ஏன்? தகவல் திணைக்கள ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் விளக்கம்!!!

சுஐப் எம் காசிம் அரிசிக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரசாங்கத்தை இக்கட்டான நிலையில் ஆக்குவதற்கு மேற்கொண்ட சதியை முறியடிக்கும் வகையிலேயே அரிசிக்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று 20 மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட வரட்சியை காரணம் காட்டி அரிசிக்கு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதனால் தான் வெளிநாடுகளில் இருந்து அவசரமாக அரிசியை…

Read More

தாஜ் சமுத்திராவில் வேலைப்பட்டறை அங்குரார்ப்பண நிகழ்வை அமைச்சர் றிஷாட் தொடக்கிவைப்பு!!!

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்ட உலக வர்த்தக மைய ஒப்பந்தந்தின் கீழான கழிவற்றல், தாவரக்கழிவகற்றல் அளவீடுகள் மற்றும் வர்த்தகத் துறையுடன் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான தடைகள் தொடர்பிலான வேலைப்பட்டறையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உலக வர்த்தக மையத்தின் பிரதிநிதி எரிக் விஜ் ஸ்டோர்ம், வர்த்தக திணைக்கள பணிப்பாளர் நாயகம் சொனாலி விஜயரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read More