வன்னி விளையாட்டு வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொணர அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. நறுவிலிக்குள மைதான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் றிஷாட்.
அமைச்சின் ஊடகப்பிரிவு வன்னி மாவட்;ட விளையாட்டு வீரர்களின் திறமைகளையும், ஆற்றல்களையும் தேசிய, சர்வதேச ரீதியில் வெளிக்கொணரும் வகையிலான அடித்தளத்தை உருவாக்கவதற்காக நாம் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி தற்போது செயலுருப்பெற்று வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் நறுவிலிக்குளத்தில் அமைக்கப்படவுள்ள நவீன விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் சிறப்பு வீருந்தினராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச். எம். ஹரீஸ், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பாராளுமன்ற குழுக்களின்…
