Headlines

540 சீனி மூடைகள் மாயம்

25 இலட்சம் ரூபா பெறுமதியான 540 சீனி மூடைகள் மாயமாகியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.களனியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றே இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்து ள்ளது. குறித்த முறைப்பாட்டில், இறக்குமதி  செய்யப்பட்ட 540 சீனி மூடைகளை போக்குவரத்து ஒப்பந்த நிறுவனம் ஒன்றிடம் வழங்கிய போதிலும், அது இன்னும் தமது நிறுவனத்திற்கு வந்து சேரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்த நிறுவனத்திடம் போக்குவரத்து உரிமையை பெற்ற, மற்றுமொரு உப ஒப்பந்த நிறுவனத்தினால் அந்த சீனி மூடை கொள்கலன் எடுத்துச்…

Read More

மஹிந்தவிற்கு வயதாகிவிட்டது – அமைச்சர் ராஜித

70 வயதான மஹிந்த ராஜபக்ச, இன்னும் பல வயதானவர்களை வைத்து க்கொண்டு புதிய கட்சி ஒன்றை அமைக்க முயற்சிப்பது சாத்தியமற்றது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேருவளையில் (29) நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இந்தக் கருத்தை வெளியிட்டார். மஹிந்த தரப்பினர், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை மையப்படுத்தி புதிய கட்சியை அமைக்க திட்டமிடுகின்றனர். எனினும் அது சாத்தியமாகாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மஹிந்தவுக்கும் வயதாகிவிட்ட நிலையில் அவருடன் இணைந்திருப்பவர்களும் அரசியலில் வங்குரோத்து நிலையை…

Read More

ஐஸ்கிறீமுக்கு இரண்டு காலவதி திகதிகள்

–  எம்.றொசாந்த் இரண்டு காலாவதி திகதியிடப்பட்ட ஐஸ்கிறீம்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 4500 ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் திங்கட்கிழமை (29) தீர்ப்பளித்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் இயங்கி வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறு இரண்டு திகதிகள் இடப்பட்டிருந்த ஐஸ்கிறீம்களை, அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர். அதனை விற்பனை செய்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர். வர்த்தகர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Read More

கொலையாளிகள் மாவனல்லையில் தலைமறைவு?

பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல் 8 வர்த்தகர்களின் சாரதிகளிடமும் விசாரணை தொலைபேசி அழைப்புக்கள் குறித்தும் ஆய்வு விசாரணைக்கு 20 பொலிஸ் குழுக்கள் கொழும்பு,பம்­ப­லப்­பிட்டி, கொத்­த­லா­வல எவ­னியூ பகு­தியில் கடத்­தப்­பட்ட கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்­தகர் மொஹமட் சகீப் சுலைமானை படு­கொலை செய்த கொலையாளிகள் மாவ­னெல்லை பகு­தியில் தலை­ம­றை­வா­கி­யி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. இந்நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் விசா­ரணை அதி­கா­ரி­களை உள்­ள­டக்­கிய 20…

Read More

ஜனாதிபதியின் இணையத்தளம் முடக்கம்: மாணவரை நன்னடத்தைக்கு அனுப்ப உத்தரவு!

ஜனாதிபதியின் இணையத்தள முடக்கம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 17 வயது மாணவரை நன்னடத்தைக்கு அனுப்ப கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் கடுகண்ணாவ பகுதியில் வைத்து நேற்று (29) கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில் மொரட்டுவையில் கைதுசெய்யப்பட்ட 27 வயதானவரை செப்டம்பர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இணைத்தளம் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

2050-ம் ஆண்டு உலக மக்கள்தொகை 1000 கோடியை எட்டும்

உலக மக்கள் தொகை தற்போது சுமார் 740 கோடியாக உள்ளது. இதில் சீனா முதல்-இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆண்டுக்கு ஆண்டு உலக மக்கள் தொகை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த நூற்றாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த நூற்றாண்டில் மக்கள் தொகை அதிகரிப்பு பிரமிக்கதக்க வகையில் இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 1000 கோடி எட்டிவிடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அந்த சமயத்தில ஆசிய நாடுகளின் மக்கள்…

Read More

இருவருக்கு அமைப்பாளர் பதவி!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பிரதியமைச்சர் அநுராத ஜயரத்ன, கண்டி-உடுதும்புரவுக்கான அமைப்பாளராகவும், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கண்டி- யட்டிநுவரவுக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Read More

சதொச ஊடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் தர நிர்ணயமானது – தென்னகோன்

– இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – சதொச மற்றும் லங்கா சதொச ஊடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் உரிய முறையில் தர நிர்ணயத்துக்குட்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் செயலாளர் டி.எம்.கே.பி.தென்னகோன் அரசாங்கத்தின் கீழுள்ள நிறுவனத்தினை பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்வதிலிலுந்து அதனை பாதுகாத்துக் கொள்வது அரச அதிகாரி என்ற வகையில் தமது பொறுப்பு என்றும் கூறினார். அண்மையில் மின்னேரிய பிரதேச அரிசி ஆலையில் மீள் சுத்திகரிப்புக்கு என கொண்டுவரப்பட்டிருந்து ஒரு தொகை அரிசியினை பொது சுகாதார பரிசோதகர்கள்…

Read More

மும்­மன்ன முஸ்லிம் வித்­தி­யா­ல­ய விவகாரம்: அதிபருக்கு இடமாற்றம்

மும்­மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்­துக்குச் சொந்­த­மான விளை­யாட்டு மைதானம் பெரும்­பான்மை சமூ­கத்­தினால் உரிமை கொண்­டாடப்படும் நிலையில் அதனைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்­காக முன்­னின்று செயற்­பட்டு வந்த வித்­தி­யா­ல­யத்தின் அதிபர் உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் தற்­கா­லி­க­மாக இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ளார். மும்­மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தின் அதிபர் மொஹமட் சனூன் சுஹைப் என்­ப­வரே இவ்­வாறு கிரி/ அதார ஆரம்ப பாட­சா­லைக்கு தற்­கா­லி­க­மாக இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ளார். 2016.08.24 ஆம் திக­தி­யிட்ட இட­மாற்றக் கடிதம் நேற்று திங்­கட்­கி­ழ­மையே அதி­பரைச் சென்­ற­டைந்­துள்­ளது. அதிபர் இடமாற்றம்…

Read More

பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்

இரண்டாம் தவணை விடு­மு­றைக்­காக மூடப்­பட்ட நாட்­டி­லுள்ள தமிழ் – சிங்­கள அர­ச­பா­ட­சா­லைகள் நாளை 31ஆம் திகதி புதன்­கி­ழமை மீண்டும் கல்­விச்­செ­யற்­பா­டு­க­ளுக்­காக திறக்­கப்­ப­டு­கின்­றன. இப்­பா­ட­சா­லை­களில் கடந்­த­த­வணை இறு­திநாள் வரை இரண்டாம் தவ­ணைப்­ப­ரீட்­சைகள் நடை­பெற்­ற­தனால் அத்­த­வ­ணைக்­கான மாணவர் முன்­னேற்­ற­ அ­றிக்­கையை வழங்­க­மு­டி­யாத சூழ்­நி­லைக்கு பாட­சா­லைகள் தள்­ளப்­பட்­டி­ருந்­தன. மூன்றாம் தவ­ணைக்­காக மேற்­படி பாட­சா­லைகள் நாளை 31ஆம் திகதி மீண்டும் திறக்­கப்­படும். இதே­வேளை நாட்­டி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லைகள் நோன்­புப்­பெ­ருநாள் விடு­மு­றைக்­காக கடந்த 06.06.2016முதல் 06.07.2016வரை மூடப்­பட்­டி­ருந்­தன. கல்­விச்­செ­யற்­பா­டு­க­ளுக்­காக கடந்த 11ஆம் திகதி மீண்டும்…

Read More

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவிய இரண்டாவது சந்தேக நபர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோப்பூர்வ இணையத்தளத்தை ஊடுறுவியதாக கூறப்படும் இரண்டாவது சந்தேக நபரை குற்றப்புலனாய்வு பிரிவின் கணிணிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 27 வயதான மொரட்டுவை பகுதியினைச் சேர்ந்தவரென குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நேற்று கடுகண்ணாவை பகுதியைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவன் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்திருந்தனர். குறித்த கைதுசெய்யப்பட்ட இருவரையும் இன்று (30) புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர்  தெரிவித்தனர்.

Read More