தொழில் அதிகாரிகளின் விடுமுறை ரத்து
தொழில் திணைக்களத்தின் தொழில் அதிகாரிகளது விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொழில் அதிகாரிகள் தற்போது தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இன்றைய தினம் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க அறிவித்துள்ளார். அரச சேவை தொழில் அதிகாரிகளின் சங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான போராட்டத்தினால் உழைக்கும் மக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, விடுமுறை ரத்து செய்யப்பட்டாலும் போராட்டம் தொடரும் என…
