Headlines

திஸ்ஸவுக்கு நோட்டீஸ்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை மன்றில் ஆஜராகுமாறு  கொழும்பு மேல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை நீதிமன்றத்தின் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Read More

வெல்கமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். கடந்த அரசாங்கத்தின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு, பிரதி ஆணையாளர்களை நியமித்து சட்டத்துக்கு விரோதமான முறையில் அவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கியமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 32 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று…

Read More

தில்லையடி ம/அன்சாரி முஸ்லிம் பாடசாலையில் கற்றல் விழிப்புணர்வு அமர்வு

தில்லையடி பிரதேசத்தில் உள்ள ம/அன்சாரி முஸ்லிம் பாடசாலையில் கற்றல் விழிப்புணர்வு அமர்வொன்று பெற்றோருக்கு (25.9.2016) இடம் பெற்றது. வளவாளர்களாக ஆசிரியர் அஸ்லம், சமூக ஆர்வலர் முஜாஹித் நிஸார் ஆகியோர் செயற்பட்டனர்.

Read More

மைத்திரி இன்று, நாடு திரும்புகிறார்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ம் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி இன்று நாடு திரும்ப உள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கடந்த 18ம் திகதி அமெரிக்க புறப்பட்டுச் சென்றிருந்தார். ஜனாதிபதி அமெரிக்காவில் தங்கயிருந்த காலத்தில் பல்வேறு உலகத் தலைவர்களுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளதுடன் முதலீட்டு வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை…

Read More

குளவித் தாக்குதலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர், வைத்தியசாலையில் அனுமதி

விடுமுறையைக் களிப்பதற்காக நுவரெலியாவுக்குச் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகிக் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த, நுவரெலியாவுக்கு சென்று விடுதியொன்றில் தங்கியிருந்தார். தனது நண்பர்கள் சிலருடன் விடுதிக்கு முன்பாக இருந்து சனிக்கிழமை மாலை பேசிக்கொண்டிருந்த போதே, விடுதியில் குளவி கூட்டிலிருந்த குளவிகள் திடீரென கலைந்து, கொட்டியுள்ளன.  இதில் காயமடைந்த அந்த எம்.பி  தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

Read More

விமல் வீரவன்ஸ FCID இல் ஆஜர்!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ விசாரணைகளுக்காக இன்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார். கடந்த ஆட்சியில் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக வீரவன்ஸ இன்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த விசாரணைகளுக்காக கடந்த 14ஆம் திகதியும் விமல் வீரவன்ஸ பொலிஸ் நிதி மோசடிப்பிரிவில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

Read More

இருதய நோயாளர்களுடன் விளையாடும் ஊழியர்கள்

இருதய சத்திரசிகிச்சைகளுக்கு உதவும் தெரபிஸ்ட் என்ற சிகிச்சையாளர்கள் நாளை (25) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். சம்பள உயர்வு உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் தமது பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளனர். இதன் காரணமாக இருதய சத்திரசிகிச்சைகள் பிற்போடப்படும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவசர சத்திரகிசிச்சைகளில் தமது தொழில்சங்கத்தினர் ஈடுபடுவர் என்று தெரபிஸ்ட் சிகிச்சையாளர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் சுமார் 10 பேர் இருதய சத்திர சிகிச்சைகளுக்காக தம்மை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

பலமான கடவுச்சீட்டு கொண்ட, நாடாக இலங்கை

பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 8 இடங்கள் முன்னேறி 87வது இடத்தை பெற்றுள்ளதாக 2016ஆம் ஆண்டுக்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 39 நாடுகளுக்கு விசா பெற்றுக்கொள்ளாது இலங்கையர்கள் பயணிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கைக்கு 95வது இடம் வழக்கப்பட்டிருந்தது. அதன் போதும் விசா இன்றி 39 நாடுகளுக்கு பயணிக்க கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த…

Read More

வடகிழக்கில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களை, தமிழர்கள் அரவணைக்க வேண்டும் – றிஷாத்

-சுஐப்.எம்.காசிம்– வட பகுதிக்கும் தென்பகுதிக்கும் இடையே எளிதாகவும், விரைவாகவும், சிக்கனமாகவும், பயணஞ் செய்யக் கூடிய வகையில் எலுவன்குளம் பாதையை நாங்கள் கடந்த அரசில் திறந்த போது அதனை எதிர்த்து இனவாதிகள் நீதிமன்றம் வரை சென்று பாதை திறக்கப்பட்டதை தடுத்ததனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் வேதனை வெளியிட்டார். மன்னார் முசலிப்பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் உரையாற்றிய போது கூறியதாவது, எலுவன்குள பாதையை திறந்து வடமாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், தென்னிலங்கையில்…

Read More

விபத்தில் பல்கலைக்கழக மாணவன் பலி!

பேராதனை கலஹா வீதியில் இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதனை கலஹா வீதியில் பல்கலைக்கழகத்திற்குச் சமீபமான ஹிந்தகல பிரதேசத்தில் மணல் லொறி ஒன்றுடன் இம் மாணவன் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விடத்திற்கு அண்மையில் மாணவர் விடுதி ஒன்று உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மேற்படி மாணவன்…

Read More

பூண்டுலோயாவில் விபத்து : சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

– சுரேன் – பூண்டுலோயா நகரில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 47 வயதுடைய அம்பகஹாவத்த கெதர உதயணி என்ற பெண் சம்பவம் இடத்திலேயே பலியாகியுள்ளார். பூண்டுலோயா நகரிலிருந்து நுவரெலியா செல்வதற்கு பஸ்ஸில் ஏற வீதியை கடக்க முயன்ற போது தலவாக்கலையில் இருந்து வந்த முச்சக்கரவண்டியில் மோதியே குறித்த பெண் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். பெண்ணின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பூண்டுலோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக பூண்டுலோயா பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு…

Read More

தெல்லிப்பளையில் குண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கிணற்றினை புனரமைப்பு செய்ய கிராமவாசிகள் சென்ற வேளையில் குண்டுகளை கண்டு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின் தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விசேட பிரிவு, மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More