Headlines

ஊழியர்களுக்குப் பதிலாக ரோபோக்கள்

உலகின் முதன் முதலாக ஊழியர்களுக்கு பதிலாக முற்று முழுதாக தன்னியக்க ரோபோக்களை வைத்து தாவர பண்ணையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பானிய தொழிற்சாலையொன்று நேற்று (1) அறிவித்துள்ளது. கயோட்டோ பிராந்தியத்தில் கமியோகா நகரிலுள்ள மேற்படி தொழிற்சாலையானது கீரை வகையான இலைக்கோசு தாவர செய்கையை மேற்கொள்வதற்கான இந்த ரோபோ பண்ணையை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டின் மத்தியில் நிர்மாணிக்கவுள்ளது. 47,300 சதுர அடி பரப்பளவில் செயற்படவுள்ள இந்தப் பண்ணையில் ரோபோக்கள் தாவர விதைகளை நாட்டுதல், அவற்றைப் பராமரித்தல் மற்றும் அறுவடை செய்தல்…

Read More

12 தங்க பதக்கம்பெற்று, முஸ்லிம் மாணவி சாதனை!

லக்னோவிலுள்ள பல்கலைகழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவியான சானியா அஹமது பல்வேறு துறைகளில் வெற்றிப்பெற்று சாதனை படைத்து நேற்று(1)  12 தங்க பதக்கம் பெற்றுள்ளார். இஸ்லாம் உடலுக்கு மட்டுமே திரையிடுகிறது அறிவுக்கு அல்ல… சகோதரி சானியா இன்னும் பல்வேறு துறைகளில் சாதனை படைக்க இறைவன் அருள் செய்வானாக..

Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினர் ஒத்திகை

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினரின் ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ளது. காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள இவ்வைபவத்திற்கான முப்படையினரின் ஒத்திகைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், கொழும்பின் பிரதான மற்றும் குறுக்கு வீதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ராஜபக்சவிற்கு ஆதரவாக குரல் எழுப்ப தயார்: மேர்வின் சில்வா

ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தான் கவலையடைவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கிராமத்தில் பிறந்தவன் என்ற விதத்திலேயே தான் கவலையடைவதாக முன்னணி வானொலியொன்றின் நேர்காணலின் போது அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தனது கவலையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கவில்லை எனவும், தேர்தலுக்கு பின்னர் தான் இதுவரை அவருடன் கதைக்கவில்லை எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார். சட்ட விதிகளுக்கு முரணான வகையில் ராஜபக்ச குடும்பத்தாரை பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாக இருந்தால், தான் அதற்கு…

Read More

இலங்கை யுவதியால் விராட் கோஹ்லிக்கு அவமானம்

சர்வதேச கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலம் வாய்ந்த இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோஹ்லி கடந்த சில நாட்களுக்கு முன் மிகவும் இக்கட்டான நிலைமை ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்காக அந்த நாட்டில் இந்திய அணி தற்போது தங்கியிருக்கும் நிலையில் கோஹ்லி தனது முகாமையாளருடன் அவுஸ்திரேலியாவில் உள்ள உணவகம் ஒன்றிட்கு காலை உணவை உட்கொள்ளச் சென்றிருந்தார். அவ் வேளையில் அங்கு வருகை தந்திருந்த இலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவர் கோஹ்லியுடன்…

Read More

விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

இந்­திய கர்­நா­டக மாநி­லத்தை சேர்ந்த நப­ரொ­ருவர் திரு­ம­ணத்தில் ரசம் இல்­லா­ததால் தனது திரு­ம­ணத்தை நிறுத்­திய சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது. கர்­நா­டக மாநிலம் தும்கூர் மாவட்­டத்தைச் சேர்ந்த குனிக்கல் பகு­தியைச் சேர்ந்த பிர­காசம் – சௌபாக்­கி­யம்மா தம்­பதிகளின் மகள் சௌமியா. இவ­ருக்கும் ஸ்ரீரா­ம­புரம் திம்­மை­யம்மா மகன் ராஜு­வுக்கு குனிக்கல் கிரா­மத்தில் நேற்­று­முன்­தினம் திரு­மணம் நடப்­ப­தாக முடி­வா­னது. திரு­ம­ணத்­துக்கு முதல் நாள் இரவு திரு­மண வர­வேற்பு விருந்து இடம்­பெற்­றுள்­ளது. மண­மகன் ராஜு தனது குடும்­பத்­தி­ன­ருடன் மிக தாம­த­மாக மண்­ட­பத்­துக்கு வந்­துள்­ள­தை­ய­டுத்து உடனே…

Read More

தண்டனை அனுபவிக்கத்தயார் ;மஹிந்த

தவறு செய்­தி­ருந்தால் தண்­டனை அனு­ப­விக்கத் தயார் என்றும் மக்கள் அர­சாங்­கத்தின் மீது கொண்­டுள்ள வெறுப்பை தமது குடும்­பத்தார் மீது காண்­பிக்க வேண்டாம் என்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார் நேற்று காலை கண்டி தலதா மாளி­கைக்குச் சென்று வழி­பா­டு­களில் ஈடு­பட்­டதன் பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்கள் வின­விய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், இன்னும் சில நாட்­களில் என்­னையும் அழைப்பர். நாம­லையும் அழைப்பர். பஸில், மற்றும் கோத்தபாய ஆகி­யோ­ரையும் அழைப்பர். நல்­லாட்­சியை…

Read More

ஜனநாயகக் கட்சி, ஐ.தே.க.வுடன் நாளை இணையும்

பீல்ட் மார்ஷல்  பொன்சேகாவின் தலைமையின் கீழ் உள்ள ஜனநாயகக் கட்சி, நாளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் என்று வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

தேர்தல் கோரி நீதிமன்றம் செல்லும் மஹிந்த

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை விரைவில் நடத்தாவிட்டால், நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். உடனடியாக இந்த தேர்தலை நடத்துமாறு கோரப்படுகிறது. ஆனால் இது திட்டமிட்டே பிற்போடப்பட்டு வருகிறது. எனவே இந்த தேர்தல் விரைவில் நடத்தப்படவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடி அதனை நடத்த செய்யவிருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

Read More

கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் காலமானார்

கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளரும் மற்றும் பல சமூக அமைப்புக்களின் முன்னிலை உறுப்பினருமாகிய முத்தையா கதிர்காமநாதன் இன்று (2) காலை காலமானார். இறுதிச் சடங்கு வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.  

Read More

ராஜபக்ஸகளின் கண்ணீர் தொடர்பில் அப்சரா பொன்சேகாவின் கருத்து

எங்கள் குடும்பம் எப்படி துயரடைந்தோம், தாஜூடீனின் பெற்றோர் எவ்வாறு துயரடைந்திருப்பர், பிரகீத் குடும்பம் எவ்வாறு துயரடைந்திருக்கும் என்பதை நாமல் உணரட்டும், இந்த கணமே அவரது குடும்பத்தினர் அவர்களிற்கு துணிச்சலிருந்தால் கடந்த காலங்கள் குறித்து உணரும் தருணமாக அமையட்டும் என்று முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மகள் அப்சரா பொன்சேகா தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச தனது பெற்றோர்கள் கண்ணீர் விடுவதை…

Read More

மின்னஞ்சலை மையப்படுத்திய விசாரணையிலேயே யோஷித்த சிக்கினார்

சி.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்னெடுக்கப்பட்ட கறுப்புப் பணம் சுத்திகரித்தல் சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் லெப்டினன் யோஷித்த ராஜபக்ஷவை கைது செய்ய குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மின்னஞ்சல் ஆதாரங்களே பிரதானமாக இருந்ததாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார். சி.எஸ்.என். நிறுவனத்தின் தீர்மானங்கள் எடுக்கும் ஏக நபராகவும் தலைவராகவும் யோஷித்த ராஜபக்ஷவே செயற்பட்டுள்ளார் என்பதை அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மின்னஞ்சலை விஷேட ஆய்வுகளுக்கு உட்படுத்திய போதே…

Read More