மாதம்பை முஸ்லிம்களின் காணி அபகரிப்பு விவகாரம்
புனித பூமி என்ற போர்வையில் மாதம்பையில் சுவீகரிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் காணி உறுதிகளை பரிசீலனைக்காக மாதம்பை பிரதேச செயலாளரிடம் கையளிக்குமாறு பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க சம்பந்தப்பட்ட குடும்பங்களைக் கோரியிருக்கிறார். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் உத்தரவுக்கு அமைய இன்று செவ்வாய்க்கிழமை சுவீகரிக்கப்பட்டுள்ள 24 முஸ்லிம் குடும்பங்களின் பூர்வீக காணி உறுதிகள் மாதம்பை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன என பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பின் தலைவர் எஸ்.எம். கௌஸுல் அமீர் தெரிவித்தார். மாதம்பையில் முஸ்லிம்கள் பூர்வீகமாக…
