Headlines

கல்பிட்டி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையைபோக்க அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

கல்பிட்டி பிரதேசத்தி்ல் ஏற்பட்டுள்ள அச்ச நிலையினை தொடர்ந்து இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்கள் பொலீஸ் மா அதிபரிடம் வேண்டியுள்ளார். கல்பிட்டி பிரதேசத்தில் கடந்த இரு தினங்களாக மீன் பிடி தொடர்பில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையால் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,பிரதான பாதையினை மறித்து பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளதையடுத்து கல்பிட்டி புத்தளத்துக்கான போக்குவரத்து இன்மையால் அப்பாவி பொதுமக்களும்,ஏனைய தேவையுடையவர்களும் சிரமங்களை எதிர்கொள்வதால் இது தொடர்பில்…

Read More

ரன்பத்விலவில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியில் இஸ்ஹாக் ரஹுமான் MP

அண்மையில் இடம்பெற்ற, ரன்பத்விலவில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில்   பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டபோது.

Read More

மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல்வாதிகளே தேவை – பா.உ. நவவி

குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் சொகுசாக இல்லாமல் மக்கள் பிரச்சினைகளை கேட்டு தீர்க்கும் அரசியல்வாதிகளே இன்றைய தேவை என்று பாராளுமன்ற உறுப்பினர் M.H.M.நவவி தெரிவித்துள்ளார்.

Read More

கிரிக்கட் சுற்றுப்போட்டியை ஆரம்பித்துவைத்த றிப்கான் பதியுதீன்

நேற்று (20) அல்பதாஹ் விளையாட்டு கழகத்தினர் நடத்திய AF கிண்ண மின்னொளியிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியை வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்கள் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

Read More

புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரி வகுப்பறை கட்ட வேலைத்திட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரியில் வகுப்பறை கட்ட வேலைத்திட்டங்களை நிறைவு பெறச்செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

Read More

கல்விக்காக இந்த அரசாங்கம் பாரிய உதவிகளை செய்கிறது – நவவி

புத்தளம் தொகுதியில் காணப்பட்ட 2200 ஆசிரியர் வெற்றிடங்களில் 1200 வெற்றிடங்கள் நல்லாட்சி அரசாங்கத்தினால் உடனடியாக நிரப்பட்டுள்ளன. கல்விக்காக இந்த அரசாங்கம் பாரிய உதவிகளை நல்கி வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். நவவி தெரிவித்தார். புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் புதன்கிழமை (19) காலை நடைபெற்ற 2015 ம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அதிக ஏ (A) சித்திகளை பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக…

Read More

அஷோக் லேலண்ட் நிறுவனத்தை புதிய தலைவர் வெற்றிகரமாக இட்டுச் செல்வார்- அமைச்சர் றிசாத்  

அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய தலைவராகத் தனது கடமைகளைப்  பொறுப்பேற்றிருக்கும் ஸிராஸ் மீரா சாஹிப் இந்த நிறுவனத்தை வெற்றிகரமானதாக முன்னெடுத்து கைத்தொழில் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று (20/10/2016) தெரிவித்தார். அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவராக ஸிராஸ் மீரா சாஹிப் பதவியேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது, இலங்கை – இந்திய நாடுகளுக்கிடையிலே இடம்பெற்ற உடன்படிக்கையின் விளைவாக அஷோக் லேலண்ட்…

Read More

சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு சிறப்புக்  காப்பீடுகள் தேவை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் இவ்வேளை இலங்கையிலுள்ள தேசிய சிறுபான்மையினரான இலங்கைத் தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர் மற்றும் மலாயர், பறங்கியர் , ஆதிவாசிகள் , மேமன், போரா உட்பட மற்றும் சகல சிறுபான்மையினங்களினதும்  உரிமைகளையும் சட்டபூர்வமாகப் பாதுகாக்கக் கூடிய  சிறப்பு விதிகள் உத்தேச அரசியல் யாப்பில் இடம்பெற  வேண்டும். அத்துடன் அவர்களின் மொழி, மதம், கலாச்சார தனித்துவங்களும்  பாதுகாக்கப்படுவதோடு அவற்றின் வளர்ச்சிக்கான அவசர உதவிகளும்  உறுதிசெய்யப்பட வேண்டும் 1947 இல் அறிமுகஞ் செய்யப்பட்ட சோல்பரி யாப்பில்…

Read More

எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட றிப்கான் பதியுதீன்

எருக்கலம்பிட்டி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களை சந்திப்பதற்கு நேற்று முன் தினம்(18) திடீர் விஜயமொன்றை மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மேற்கொண்டார். எதிர்வரும் 23ம் திகதி நடைபெற இருக்கும் நிகழ்வினை பற்றியும் அன்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைய இருக்கும் சகோதரர்கள் பற்றியும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்காகவே இன்றைய விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.   

Read More

சாய்ந்தமருதில் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபன திறப்பு விழா

சாய்ந்தமருதில் புதிதாக அமையப் பெற்றுள்ள இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபன திறப்பு விழா நாளை, (2016.10.21) வெள்ளிக்கிழமை பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவருமாகிய ஏ.எம். ஜெமில் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவில்; கட்சியின் தலைவரும், அமைச்சருமான அல்ஹாஜ் றிஷாத் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

Read More