Headlines

இலங்கை வருகிறார் பான் கீ மூன்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இவ்வருடம் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நேற்றைய தினம் உரையாற்றிய வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த தகவலை வெ ளியிட்டார். அதாவது இவ்வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்வார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் நேற்று ஜெனிவாவில் கூறினார்.

Read More

“அதிகாரபூர்வ நடமாடும் சேவை – 2016” பொலன்னறுவையில்!

பொதுமக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் சென்று தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் இணைந்து மாவட்ட மட்டத்தில் “அதிகாரபூர்வ நடமாடும் சேவை – 2016” ஒன்றினை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வகையில், “அதிகாரபூர்வ நடமாடும் சேவை – 2016” என பெயரிடப்பட்டுள்ள இச்சேவையின் ஆரம்ப நிகழ்வு பொலன்னறுவை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையில் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை வார…

Read More

அமைச்சர் றிஷாத் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டம்

-சுஐப் எம்.காசிம்- நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் உபதலைவர், பேராசிரியர் மொஹான் டி சில்வா ஆகியோர் பங்கேற்றிருந்த உயர்மட்டக் கூட்டத்தில் இன்று (30/06/2016) தீர்வு எட்டப்பட்டது. அமைச்சர் றிசாத் பதியுதீனின் வேண்டுகோளுக்கும் ஏற்பாட்டுக்கும் அமைய அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் இந்தக் கூட்டம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் நடைபெற்றது. கடந்த…

Read More

சம்பிக்கவுக்கு எதிராக போதுமான சாட்சிகள் இல்லை!

அண்மையில் இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான சாட்சிகள் இல்லை என, கொழும்பு மோட்டார் வாகன நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக, நீதவான் சந்தன கலங்சூரிய இன்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விபத்து இடம்பெற்ற வேளை வாகனத்தை செலுத்தியது, துஷித கெலும் குமார என்பவரே என பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read More

வற் வரி சீரமைக்கப்படும்

பொருளாதாரம் தொடர்பான வல்லுனர்களுடன் கலந்துரையாடி எதிர்வரும் திங்கட்கிழமை (04) அளவில் வற் (VAT) வரியை சீரமைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (29) கிராந்துருகோட்டை, மஹாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்ற பதுளை மாவட்ட சிறுநீரக நோயாளர்களுக்கு உதவியளிக்கும் தேசிய வேலைத்திட்டத்தில் பங்குபற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். அதேபோன்று, வரிச் சலுகை கொண்ட வாகன கொள்வனவு அனுமதிப்பத்திரத்தை (Permit) பெறத் தகுதியான சகல அரச ஊழியர்களுக்கும் புதிதாக வாகன கொள்வனவுப் பத்திரம் வழங்கப்படும் என ஜனாதிபதி இதன்போது…

Read More

யானை தாக்கி கிண்ணியா அப்துல் மஜீத் ரகீப் வபாத்

திருகோணமலை, கிண்ணியாப் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி அப்பிரதேசத்தைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான அப்துல் மஜீத் ரகீப் (வயது 36) என்பவர் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். மேற்படி பிரதேசத்தில் உள்ள மணியரசன்குளத்தில் மீன்பிடித்துக்கொண்டு 03 பேர் நேற்று (29) புதன்கிழமை இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன்போது, வழியில் மேற்படி நபரை யானை தாக்கிய வேளையில் ஏனைய 02 பேரும் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

பிள்ளையானுக்கு பிணை மறுப்பு

முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 21.7.2016 ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கம் கொலை தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்க கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்காக…

Read More

கடும் காற்று! மக்கள் அவதானம்

மலையகத்தின் பல பிரதேசங்களில் கடும் காற்று வீசுவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலநிலைக்கு மாறாக திடீரென கடும் காற்று தொடர்ந்து வீசி வருகின்றது. இதனால் பாதுகாப்பற்ற மற்றும் உயரமான மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ள அதேவேளை, தொடர்ந்தும் பலமான காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாமலுக்கு எதிராக வழக்குத்தாக்கல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளது.tm

Read More

அஞ்­ச­வில்­லை :ஜெனி­வாவில் மங்­க­ள

இலங்­கை­யா­னது நீதிப்­பொ­றி­முறை விட­யத்தில் சர்­ வ­தேச பங்­க­ளிப்பை பெற்றுக் கொள்­வ­தற்கு அஞ்­ச­வில்லை. கடந்­த­கா­லங்­களில் பல விட­யங்­களில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பினை பெற்­றுள்ளோம். சர்­வ­தேச பங்­க­ளிப்பில் பல தன்­மைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் இவை குறித்து ஆலோ­சனை செயற்­பாட்­டி­லேயே தீர்­மா­னிக்க முடியும் என்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று ஜெனி­வாவில் தெரி­வித்தார். எவ்­வா­றெ­னினும் நீதிப்­பொ­றி­மு­றை­யா­னது பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் நம்­பிக்கை கொள்ளும் வகையில் அமையும். இதற்­கான பாதை சவா­லா­க­வுள்­ளது. ஆனால் அது நல்­லி­ணக்­கத்­தையும் இலக்­கையும் கொண்­ட­தா­க­வுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார். ஜெனி­வாவில்…

Read More

ஐ.தே.கட்சியுடன் இணைந்தார் சரத் பொன்சேகா

முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார். இதன்பிரகாரம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளார். சிறிகொத்தாவையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா, ஜனநாயக கட்சியை களைக்கப்பட போவதில்லை எனவும் அவரது கட்சியில் இருந்தபடியே வேறொரு…

Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை

“சத்தோச” பணியாளர்கள் சிலரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூன்று பேரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

Read More