Headlines

வகுப்பு தடையை நீக்கக் கோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

– ஏ.எம். றிகாஸ் – கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த 27 மாண­வர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள வகுப்­புத்­த­டையை உட­ன­டி­யாக நீக்­கு­மாறு கோரி கிழக்குப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் நேற்று ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். மட்­டக்­க­ளப்பு -வந்­தா­று­மூலை வளா­கத்­துக்கு முன்­பாக இந்த ஆர்ப்­பாட்டம் இடம்பெற்றது.

Read More

இஸ்தான்புல் கோர்ட்டுகளில் போலீசார் அதிரடி சோதனை

துருக்கி நாட்டில் அதிபர் எர்டோகன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் ராணுவ புரட்சியில் ஈடுபட முயன்றனர். எனினும் அதிபருக்கு ஆதரவாக மக்கள் திரண்டு அதை முறியடித்தனர். இந்த புரட்சி முயற்சிக்கு பின்னணியாக செயல்பட்டவர் அமெரிக்காவில் வசிக்கும் துருக்கிய மத போதகரான பெதுல்லா குலென் என்று துருக்கி அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதைத்தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் என்று கருதப்படும் ராணுவத்தினர், போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள், வக்கீல்கள் ஆகியோரை அதிபர் எர்டோகன் அரசு தீவிரமாக…

Read More

காஷ்மீர் பிரச்சினை: பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு

காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். பாகிஸ்தான் வெளியுறவு ஆலோசகர் கடந்த வாரம், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, பாகிஸ்தான் தூதர்கள் மாநாடு ஒப்புக்கொண்டதாக கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த இந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்…

Read More

பிரதமரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிக்கிறது: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

பிரதமரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் ஏராளமான நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் வேண்டுகோள் விடுத்து வந்தார். மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக கொலீஜியத்தின் முடிவை செயல்படுத்தாதது குறித்து மத்திய அரசு வக்கீலிடமும்…

Read More

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும்!

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், காணாமல் போனவர்கள் பற்றி கண்டறியும் அலுவலகம் மட்டும் போதுமானதல்ல.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றும் அவசியமாகின்றது. ராஜபக்ச கோட்பாடு போர் செய்வதாக கூறி திறைசேரியை காலியாக்கியதேயாகும். பயங்கரவாதத்தை ஒழிப்பதனைப் போன்றே திருடர்களிடமிருந்து நாட்டை மீட்க வேண்டுமென நாம் அந்தக் காலத்தில் கூறியிருந்தோம். போர் இடம்பெற்ற காலத்தில்…

Read More

இலங்கையிலுள்ள விஞ்ஞானிகளை சந்திக்கும் யுனெஸ்கோ பணிப்பாளர்

இலங்கை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள யுனேஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி எரினா பொக்கோ பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகிறார். திருமதி எரினா பொக்கோவுக்கும் இலங்கையின் ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று (16) நடைபெறவுள்ளது. அமைச்சர் சுசில் பிறேம ஜயந்த தலைமையில் தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் யுனெஸ்கோ அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் விஞ்ஞான ரீதியான செயற்றிட்டங்கள் குறித்து திருமதி எரினா பொக்கோவா…

Read More

இம்முறை ஹஜ் யாத்திரை செல்ல 2240 இலங்கையர்களுக்கு வாய்ப்பு

இம்முறை ஹஜ் யாத்திரைக்காக இலங்கையில் இருந்து முதற்கட்டமாக புறப்பட்டு சென்ற குழுவினர் சவுதி அரேபியாவின் ஜோடா நகரை அடைந்துள்ளனர். 62 யாத்திரிகர்கள் இவ்வாறு சவுதி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களை சவுதிக்கான இலங்கைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றுள்ளனர். இதேவேளை, ஹஜ் புனித யாத்திரைக்காக இலங்கையில் இருந்து இம்முறை 2240 பேர் செல்லவுள்ளனர். மக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திட்டம் காரணமாக, இந்த வருடம் யாத்திரிகர்களின் தொகை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

யோஷிதவின் மற்றொரு சொத்தும் அரசுடமை!

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால், கால்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக உரிமை கோர முடியாத மேலும் 572.8 மில்லியன் ரூபா சொத்துக்கள் இருப்பதை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். ஒளிப்பரப்பு உபகரணங்களுடன் கூடிய 80 மில்லியன் ரூபா பெறுமதியான நடமாடும் ஒளிப்பரப்பு ட்ரக் வாகனம், லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவத்தின் இலக்கம் 2200060234 என்ற கணக்கில் இருக்கும் 6 மில்லியன் ரூபா பணம், ஹம்பாந்தோட்டை சிறிபோபுர கிராமத்தில் இருக்கும் 4.8 மில்லியன் ரூபா…

Read More

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் 240 கோடி ரூபா வருமானம்

மீன்பிடி அமைச்சு அலங்கார மீன் ஏற்றுமதி வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைய மீன் குஞ்சு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். றுகுணு பல்கலைக்கழகத்தின் மீன் உயிரியல் பிரிவின் ஆதரவும் பெற்றுக் கொள்ளப்படும். மாத்தறை பொல்ஹேன, மடிக, ஹிக்கடுவ, உணவட்டுண ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளன. அலங்கார மீன்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் மத்தியில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் 240…

Read More

கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பரீட்சைக்கான அனுமதி அட்டை எதிர்வரும் திங்கட்கிழமை தபாலில் சேர்க்கப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இந்தப் பரீட்சை நாடு முழுவதிலும் 856 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. 01 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இந்தப் போட்டிப் பரீட்சையில் பெறப்படும் புள்ளிகளின் அடிப்படையில் கிராம உத்தியோகத்தர்கள் இரண்டாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த வருட…

Read More

துபாயில் முதன் முறையாக செயற்கை மழைக்காடு-கடற்கரையுடன் ஓட்டல்

வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாய் பாலைவன பிரதேசமாகும். இங்கு எண்ணெய் வளம் நிறைந்துள்ளது. அவை தவிர மற்ற வளங்கள் இல்லை. வனப் பகுதிகள் கிடையாது. எனவே, சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் கவரும் வகையில் அதிநவீன ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது. அதில் மழைக்காடுகள், கடற்கரை, மரங்கள், நீரை வாரியடிக்கும் நீச்சல் குளம், மூடுபனி போன்றவைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகின்றன. ஓட்டலுடன், குடியிருப்புகளும் அதில் கட்டப்பட உள்ளன. இந்த அதி நவீன ஓட்டல் ரூ. 2300 கோடி செலவில் கட்டப்பட்டு…

Read More

நாமலுக்கு விளக்கமறியல்

இன்று (15) காலை நிதி மோசடி  விசாரணைப் பிரிவில் வாக்குமூலமளிக்க ஆஜரான நாமல் ராஜபக்ஷவை நிதி மோசடி  விசாரணைப்பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் ஆஜபடுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நாமல்  நிதி மோசடி  விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More