Headlines

இன்னும் பல உள்ளூராட்சி சபைகளை அமைக்குமாறு ரிஷாட் பாராளுமன்றில் கோரிக்கை

சாய்ந்தமருதுவை தனியான நகரசபையாக பிரகடனப்படுத்துமாறு நாம் விடுத்த கோரிக்கைக்கு செவிசாய்த்து அதற்கான வாக்குறுதியை தந்துள்ளமைக்கு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதோடு கல்முனை மாநகரசபை உள்ளடங்கிய பிரதேசங்களிலும் அதனை அண்டியுள்ள இடங்களிலும் எந்தவொரு சமூகத்திற்கும் எந்தவோர் ஊருக்கும் பாதிப்பு வந்திடாத வகையில் கருமங்களை மேற்கொள்ளுமாறும் அவர் வேண்டினார். குறிப்பாக மருதமுனைக்கென தனியான சபையொன்றையும் கல்முனையில் தமிழ் மக்கள் அதிகமாக வாழுமிடங்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கான ஒரு சபையொன்றினையும் உருவாக்குமாறும் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்…

Read More

வடக்கு, புத்தளம் மக்கள் நீரின்றிப்படும் அவஸ்தைக்கு பதவிக்காலத்தில் முடிவு கட்டுங்கள். ஹக்கீமிடம் ரிஷாட் கோரிக்கை

வட மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் புத்தளத்தின் சில பிரதேசங்களிலும் நீர் இல்லாமல் மக்கள் படுகின்ற கஷ்டங்களையும் அவதிகளையும் கவனத்திற்கெடுத்து, முறையான திட்டங்களை வகுத்து நீர்ப்பிரச்சினைக்கு முடிவு கட்டுமாறு, மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமிடம் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் கூறியதாவது, வவுனியா மாவட்டத்தில் சாளம்பைக்குளம், ஆண்டியாபுளியங்குளம், பாவற்குளம், மற்றும் வவுனியா தமிழ்க் கிராமங்கள்,…

Read More