Headlines

இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா!

-சுஐப் எம்.காசிம் – இலங்கையின் சரித்திரத்தில் இனச்சுத்திகரிப்பாய் அன்று வடபுல முஸ்லிம் மக்கள் எழுபத்தை யாயிரம் பேர் இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா பாசிசப் புலிகள் செய்த பயங்கர கொடுமை அந்தோ சொந்தமண் வீடிழந்தோம் சொகுசான வாழ்விழந்தோம் அந்தரித்தலைந்து சொத்து நகைபணம் தொழில் இழந்தோம் தங்கிய கல்வியோடு கடைகண்ணிப் பொருள் இழந்தோம் கப்பமும் பெற்றார் எம்மைக் கைதியாய்ப் பணயம் வைத்தார் புத்தளம் குருநாகலில் அனுபுரம் கொழும்பு மண்ணில் பித்தராய் அலைந்த எம்மைப் பேணினார் முஸ்லிம் சான்றோர் பசிக்குணவளித்தார்…

Read More

அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் துணைவியாரின் மரணம் குறித்த அனுதாபச் செய்தி

01.11.2016 அகில இலங்கை ஜமிய்யதுல் உலாமா சபையின் பிரதித் தலைவரும் ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் துணைவியாரின் அகால மரணம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமான என்னையும் எமது கட்சியின் உறுப்பினர்களையும் பெரும் வருத்தத்திற்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக இலங்கை திரு நாட்டிலே தஃவா பணியில் தன்னை அர்பணித்த அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் பின்னால் நின்று அவரின் தஃவா விருட்சத்தின் வேராக  இருந்து பெரும்…

Read More