Headlines

மினாரா பூட்ஸ் நிறுவனத்துக்கென உலப்பனையில் புதிய தொழிற்சாலை திறந்துவைப்பு (வீடியோ)

மினாரா பூட்ஸ் நிறுவனத்துக்கென உலப்பனையில் புதிய தொழிற்சாலை திறந்துவைப்பு நிகழ்வின்போது.

Read More

“வடபுலமே எங்கள் தாயகம்”

(முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த நிலையில், அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும், கடந்த கால கசப்பான அனுபவங்கள் குறித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்,  அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்திருக்கும் செய்தி) வடமாகாணத்திலிருந்து புலிகளால் முஸ்லிம்கள் விரட்டப்பட்டு 26 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த கால்நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் முஸ்லிம் அகதிகள் பட்ட துன்பங்களும், துயரங்களும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. “அகதிகள்” என்றால் “கதியற்றவர்கள்” என்று பொருள்படுகின்றது. எல்லாவற்றையும் இழந்து, உடுத்த உடையுடன் நாம் தென்னிலங்கையில் நிர்க்கதியாகத்…

Read More

அமைச்சர் றிஷாத் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் முசலிப் பிரதேச செயலகப் பிரிவின் கீழான விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி உத்தரவிட்டுள்ளார். கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று மாலை (26/10/2016) பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைச் சந்தித்து, கடற்படையினர் பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், உதவிச் செயலாளர்கள், வனபரிபாலனத் திணைக்கள பிரதிப்…

Read More

லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ நிபுணராக முஹம்மட் மொய்னுதீன் நியமிப்பு

முஹம்மட் மொய்னுதீன் மொஹம்மட் அசார்தீன் லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் நேற்று 26 வழங்கி வைத்தார். குருநாகலை பிறப்பிடமாகக் கொண்ட அசார்தீன் பல்வேறு சமூக நிறுவனங்களில் பதவி வகிக்கின்றார். சமூக ஆர்வலரான அவர் குருநாகலையில் சிங்கள முஸ்லிம் நல்லுறவுக்காக பாடுபடுவர். குருநாகலைச் சேர்ந்த மொய்னுதீன் பேஹம் ஜான் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வர்.

Read More