Headlines

அஷோக் லேலண்ட் நிறுவனத்தை புதிய தலைவர் வெற்றிகரமாக இட்டுச் செல்வார்- அமைச்சர் றிசாத்  

அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய தலைவராகத் தனது கடமைகளைப்  பொறுப்பேற்றிருக்கும் ஸிராஸ் மீரா சாஹிப் இந்த நிறுவனத்தை வெற்றிகரமானதாக முன்னெடுத்து கைத்தொழில் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று (20/10/2016) தெரிவித்தார். அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவராக ஸிராஸ் மீரா சாஹிப் பதவியேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது, இலங்கை – இந்திய நாடுகளுக்கிடையிலே இடம்பெற்ற உடன்படிக்கையின் விளைவாக அஷோக் லேலண்ட்…

Read More

சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு சிறப்புக்  காப்பீடுகள் தேவை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் இவ்வேளை இலங்கையிலுள்ள தேசிய சிறுபான்மையினரான இலங்கைத் தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர் மற்றும் மலாயர், பறங்கியர் , ஆதிவாசிகள் , மேமன், போரா உட்பட மற்றும் சகல சிறுபான்மையினங்களினதும்  உரிமைகளையும் சட்டபூர்வமாகப் பாதுகாக்கக் கூடிய  சிறப்பு விதிகள் உத்தேச அரசியல் யாப்பில் இடம்பெற  வேண்டும். அத்துடன் அவர்களின் மொழி, மதம், கலாச்சார தனித்துவங்களும்  பாதுகாக்கப்படுவதோடு அவற்றின் வளர்ச்சிக்கான அவசர உதவிகளும்  உறுதிசெய்யப்பட வேண்டும் 1947 இல் அறிமுகஞ் செய்யப்பட்ட சோல்பரி யாப்பில்…

Read More

எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட றிப்கான் பதியுதீன்

எருக்கலம்பிட்டி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களை சந்திப்பதற்கு நேற்று முன் தினம்(18) திடீர் விஜயமொன்றை மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மேற்கொண்டார். எதிர்வரும் 23ம் திகதி நடைபெற இருக்கும் நிகழ்வினை பற்றியும் அன்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைய இருக்கும் சகோதரர்கள் பற்றியும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்காகவே இன்றைய விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.   

Read More

சாய்ந்தமருதில் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபன திறப்பு விழா

சாய்ந்தமருதில் புதிதாக அமையப் பெற்றுள்ள இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபன திறப்பு விழா நாளை, (2016.10.21) வெள்ளிக்கிழமை பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவருமாகிய ஏ.எம். ஜெமில் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவில்; கட்சியின் தலைவரும், அமைச்சருமான அல்ஹாஜ் றிஷாத் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

Read More

புத்தளத்திலுள்ள 08 பாடசாலைகளுக்கு 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – நவவி

புத்தளத்தில் உள்ள 08 பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களை அமைப்பதற்கு 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளதாக புத்தளம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவருமான M.H.M.நவவி அவர்கள் தெரிவித்துள்ளார். “புத்தளம் தொகுதிக்குள் 39 பாடசாலைகளுக்கு போதிய கட்டட வசதிகள் இல்லை . இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் முதல்கட்டமாக எட்டு கட்டட்டங்களுக்கே மேற்கூறப்பட்ட நிதியான 120 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளோம். மாணவர்களின் கணினி அறிவை வளர்க்கும் வகையில் அதற்கான எட்டு நிலையங்களை ஆரம்பிக்கவும்…

Read More

பாடசாலை வகுப்பறை நிர்மாணப்பணிக்காக நிதி ஒதுக்கீடு

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் பெற்றோர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தின் இரண்டாம் மாடிக் கட்டடத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மியின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த இரண்டாம் மாடி வகுப்பறைக் கட்டடத்திற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பித்து வைத்தார். குறித்த வகுப்பறைக் கட்டட நிர்மாணப்பணிகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக ஏழு இலட்சம் ரூபாவை…

Read More

காவத்தமுனை பிரதேசத்தில் முப்பெரும் விழா (வீடியோ)

கடந்த 17.10.2016 காவத்தமுனை பிரதேசத்தில் முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்ட வீடியோ பதிவு…..

Read More

தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

புத்தளம் மாவட்டத்தின் தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், இன்று (20) கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றுக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உயரதிகாரிகள், தும்புத் தொழிலாளர்கள் மற்றும் அந்தப் பிரதேசத்தில் தும்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Read More

சிராஸ் மீராசாஹிப் (லங்கா அசோக் லேலன்ட் நிறுவனத்தின் தலைவராக) இன்று பதவியேற்பு

லங்கா அசோக் லேலன்ட் (Lanka Ashok Layland) நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் டாக்டர் சிராஸ் மீராசாஹிப், தமது கடமைகளை இன்று (20) வியாழக்கிழமை பொறுப்பேற்கவுள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு, கொழும்பு – 02, கொம்பனித் தொரு, சதோச கட்டிடத்தில் அமைந்துள்ள மேற்படி அலுவலகத்தில் இவ்வைபவம் இடம்பெறவுள்ளது.

Read More

முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாதென்பதை விஷேட அறிக்கையில் சுட்டிக்காட்டுங்கள் – ரீட்டாவிடம் அமைச்சர் றிஷாத்

அரசாங்கத்தின் எந்த ஓர் அரசியல் தீர்வு முயற்சியிலும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதோடு அவர்கள் கடந்த காலங்களில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உரிய தீர்வு கிடைக்கச்செய்ய வழி வகுக்குமாறு விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடேயிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். இலங்கை வந்துள்ள மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சிறுபான்மைச்சமூகங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கான விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக்…

Read More