Headlines

மாலி நாட்டை பாதுகாக்க தயாராகும் இலங்கை இராணுவத்தினர்

இலங்கை இராணுவத்தினர் ஐக்கிய நாடுகள் அமைதி பணிகளுக்காக விரைவில் மாலிக்கு அனுப்பப்படவுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார் இந்தநிலையில் இலங்கை படையினருக்கு நவீன ரக ஆயுத பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று ராஜாங்க அமைச்சர் விடுத்த வேண்டுகோளை, ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பு பாதுகாப்பு அமைச்சர் மட்டக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. லண்டனில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்தக்கோரிக்கையும் இணக்கமும் வெளியிடப்பட்டுள்ளன. இந்தநிலையில் இது இலங்கைக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு என்று ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த நோயாளி பலி

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் 3ஆவது மாடியிலிருந்து விழுந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இவ்வாறு உயிரிழந்தவர் 80 வயதானவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் மனநோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இவரது இறப்பு தற்கொலையா? அல்லது தவறி விழுந்தமையினாலா என்பது தெரியவரவில்லை எனவும் ஹம்பாந்தோட்டை பொலிஸார் கூறியுள்ளார். மேலும், மரண பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இனங்களுக்கிடையே சுமுகமான நல்லுறுவு ஏற்பட்டு சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழும் சூழல் நிலைத்து நிற்கவேண்டுமென, இந்த தியாகத் திருநாளில் முஸ்லிம்கள் ஏக இறைவனைப் பிராத்திக்க வேண்டும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்துள்ள பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்கள் தியாகத் திருநாளை, தியாக உணர்வோடு கொண்டாடி வருகின்றனர். இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து புனித மக்கமா நகரில் நமது சகோதரர்கள் ஒன்றுகூடி அழுது,தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தித்து வருகின்றனர். நமக்கு அந்த பாக்கியம்…

Read More

தமிழ் மொழியில் பொலிஸ் அவசர சேவைப் பிரிவு

வட மாகாணத்தில் பொலிஸ் அவசர சேவைப் பிரிவினை தமிழ் மொழியில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர தெரிவித்தார். வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், இதன்போது  மக்களுக்கு இடையில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப மொழி பற்றிய விழிப்புணர்வு அவசியம் எனவும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

ஏறாவூரில் தாயும் மகளும் அடித்துக் கொலை!

மட்டக்களப்பு – ஏறாவூர் முகாந்திரம் வீதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 56 வயதுடைய பெண்ணும் அவரது மகளும் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று  சனிக்கிழமை இரவு வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். நூறுமுகம்மது ஹ{சைரா மற்றும் அவரது திருமணமான மகளான 30 வயதுடைய முகம்மது யூசுப் ஜெனீரா பாணு ஆகியோரே கொல்லப்பட்டவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளது. பாரிய ஆயுதம் ஒன்றினால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகி;க்கின்றனர். கொலையாளிகள் வீட்டின் சமயலறையின் கூரை ஓடுகளைக் கழற்றி உள்ளே நுழைந்து…

Read More

மருத்துவ பீட மாணவர் விடுதியில் சடலம் மீட்பு

கொழும்பு, நொரிஸ் கெனல் வீதியிலுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கான விடுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் 27 வயதுடைய மாணவன் ஒருவரின் சடலமே மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும் பணிகள் தீவிரம்

எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான  நல்லாட்சி அரசாங்கத்தின்   வரவு, செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அளவில் முன்வைக்கப்படவுள்ள நிலையில்  வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கான   தீவிரமான முயற்சிகளில்   நிதி அமைச்சும் திறைசேரியும்   ஈடுபட்டுள்ளன. புதிய வரவு, செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்ச்சியாக பல்வேறு   ஆலோசனைகளை நடத்தி வருகிறார். நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள்   நிதித்துறை சார்ந்த நிபுணர்கள்,  அமைச்சுக்களின்…

Read More

504 கோடி ரூபா நட்டத்தில் தபால் திணைக்களம்

கடந்த வருடம் தபால் திணைக்களமானது 504 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்திற்கான தபால் திணைக்களத்தின் அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை 2014ஆம் வருடம் 298 கோடி ரூபா நட்டமும்,கடந்த வருடம் 504 கோடி ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திறமையற்ற நிர்வாகமே இந்த நட்டத்திற்கு காரணம் என்றும், தபால் திணைக்களத்தை கட்டியெழுப்ப நல்லாட்சி உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தபால் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய திறமையான…

Read More

இந்தியாவிற்குச் சென்று திரும்பிய இருவருக்கு மலேரியா

உலக சுகாதார அமைப்பினால் மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு வாரத்தில் தங்கல்ல-பெலியத்த பிரதேசத்தில் மலேரியா நோயாளிகள் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கு புனித யாத்திரையை மேற்கொண்ட இருவருக்கே இந்த மலேரியா தொற்றியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு யாத்திரை சென்ற ஆண் ஒருவருக்கும், பெண்ணொருவருக்குமே மலேரியா தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வைத்து காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குறித்த இருவரினதும் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போதே இவர்களுக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மலேரியாவால் பாதிக்கப்பட்ட குறித்த இருவருடனும்…

Read More

அறபா தினத்தின் முக்கியத்துவம்!

சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு அனுப்பப்பட்ட ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் முதல் முதலாக சந்தித்த இடம் அறபா. இதனால்தான் இந்த இடத்திற்கு அறபா என்று பெயர் சொல்லப்படுகின்றது. வேறு பல கருத்துக்கள் இருந்த போதும் இக்கருத்தே பிரபல்யமாக கூறப்படுகின்றது. அறபா நாள் என்பது சங்கையான நான்கு மாதங்களில் உள்ள துல் ஹிஜ்ஜா மாதமாகிய ஒன்பதாம் நாளைக் குறிக்கும். இஸ்லாமிய வரலாற்றில் மிகச் சிறந்த நாளாகிய இந்நாள்தான் அறபா தினமாகும். அன்றைய நாளில்தான் ஹாஜிகள் அறபா எனும்…

Read More

உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல்: பாதாள உலகக்குழு உதவி

பாதாள உலகக்குழுவின் உதவியுடன் இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது அண்மையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் வழிநடத்தியதாகவும் அந்நாட்டு பாதாள உலகக்குழுவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பினாங் மாநிலத்தின் முதலமைச்சர் பீ.ராமசாமியின் ஆதரவாளர்களான ஸீரோ தெர்டீன்ஸ் என்னும் பாதாள உலகக்குழுவினரின்…

Read More

மஹிந்தவை மீண்டும் வீழ்த்திய மைத்திரி!

இலங்கையில் அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசியல்வாதிகள் கடும் போட்டி போடுகின்றனர். இந்நிலையில் இலங்கையில் முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகளுக்கு இடையில் பேஸ்புக்கில் தமது ஆதிக்கத்தை செலுத்துவதில் பாரிய போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்கள் வரை பிரதான சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆதிக்கம் செலுத்திய மஹிந்தவை பின்தள்ளி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலை பெற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இலங்கையில் அதிகமான மக்கள் விரும்பம் வெளியிட்டுள்ள…

Read More