Headlines

23.2 கிலோகிராம் எடையுள்ள உலகின் மிகப் பெரிய கோவா

23.2 கிலோ­கிராம் (51 இறாத்தல்) எடை­யுள்ள பாரிய கோவா ஒன்று பிரிட்­டனில் அறு­வடை செய்­யப்­பட்­டுள்­ளது. இங்­கி­லாந்தின் தென்­மேற்குப் பிராந்­தி­ய­மான கோர்ன்­வெல்லைச் சேர்ந்த டேவிட் தோமஸ் என்­பவர் இந்த கோவாவை அறு­வடை செய்­துள்ளார். வோர்­செஸ்­ட­ஷயர் பிராந்­தி­யத்தில் கடந்த வாரம் நடை­பெற்ற பிரித்­தா­னிய தேசிய பாரிய மரக்­கறி போட்­டி­களில் இந்த கோவா காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது. உலகின் மிகப் பெரிய கோவா எனும் 90 வரு­ட­கால சாத­னையை இந்த கோவா முறி­ய­டித்­துள்­ளது. இதற்குமுன் 1925 ஆம் ஆண்டு அறு­வடை செய்­யப்­பட்ட 19.05 கிலோ…

Read More

அடையாள அட்டையை பெற்றுக்கொள்பவர்களுக்கு ஓர் அறிவித்தல்

நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தத்தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு அடையாள அட்டையைப்பெற்று கொள்ள வேண்டியது அவசியமானதாகும். அதே போன்று ஒருவர் கற்கும் வயதினில் பெற்றுக்கொண்ட, தொழில் தகைமை மாணவன் என்று குறிப்பிட்ட அடையாள அட்டையை இறக்கும் வரை பாவனை செய்து கொண்டு வருபவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான வழிகளும், விதிமுறைகளையும் அத்தோடு பலருக்கு தெரியாத விடயங்களை பார்க்கலாம். முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள். இலங்கையில் சட்ட ரீதியாக வசிக்கும் இலங்கைப்…

Read More

முகநூல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் முகநூல் தொடர்பில் 1589 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இவற்றில் போலியான கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், முகநூல் கணக்குகளினுள் அத்துமீறி பிரவேசித்து தகவல்களை மாற்றியமைத்தமை தொடர்பிலும் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இணையதளத்தின் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு மேலும்…

Read More

வரட்சியால் நாட்டில் மின்சாரம் தடைப்படாது

நாட்டின் நீர் மின் நிலையங்களை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது. எனினும் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியம் தற்போதைக்கு இல்லை எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் வாரங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வரட்சியான காலநிலை நிலவினால் இதனை எதிர்நோக்கத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளது. நீர் மின் நிலையங்களில் 100 வீத உற்பத்தி காணப்படும் போது செயற்படுத்தாது விடும் டீசல் மின் உற்பத்தி நிலையங்களை செயற்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த…

Read More

33 அடி நீளமான அனகொண்டா பிரேஸிலில் பிடிக்கப்பட்டது

பாரிய அன­கொண்டா பாம்­பொன்று பிரே­ஸிலில் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் நீளம் 33 அடி­க­ளாகும். பிரே­ஸிலின் வட பிர­ாந்தி­யத்­திலுள்ள பாரா மாநி­லத்தில் அணைக்­கட்டு நிர்­மாண நட­வ­டிக்­கை­யின்­போது இந்த அன­கொண்டா கண்­டு பி­டிக்­கப்­பட்­டது. அணைக்­கட்டை நிர்­மா­ணிப்­ப­தற்­காக குகை­யொன்றை நிர்­மாண ஊழி­யர்கள் வெடி­வைத்து தகர்த்த போது இப்­ பாம்பு வெளி­வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்த அன­கொண்டா 63 தொன் எடையைக் கொண்­டி­ருந்­தது. அதன் உடல் விட்டம் சுமார் 3 அடி­க­ளாகும். உலகில் இது­வரை பிடிக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய பாம்­பு­களில் ஒன்­றாக இது இருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. இப்­…

Read More

அம்பாறையில் வரட்சி: வற்றிய குளங்களிலிருந்து வெளிவரும் முதலைகள்!

அம்­பாறை மாவட்டத்தில் நிலவும் வெப்­ப­மான கால நி­லை­யினால்  நீர்த் ­தட்­டுப்­பாடு நில­வு­கி­றது.   கடந்த இரண்டு மாத ­கா­ல­மாக மழை­வீழ்ச்சி கிடைக்­காதன் கார­ண­மாக மலைப்­ பி­ர­தேச காடுகள் வரண்டு காணப்­ப­டு­வ­தினால் வன ஜீவரா­சிகள் நீர் உணவு தேடி மக்கள் குடி­யி­ருப்பு பிர­தே­சங்­களில் அலைந்து திரி­கின்­றன. நீர்­நி­லைகள் வற்­றி­யதால் முத­லை­களும் வெளியே வந்துள்ளன.

Read More

வனப்பகுதியில் தீ பரவல்

மஹியங்கனை கண்டி வீதியில் 18 வளைவுகள் உள்ள பிரசித்தமான இடத்திற்கு அண்மையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் தீபரவியுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி காட்டுத்தீ 18 வளைவுகளைக் கொண்ட இடத்தில் உள்ள 17 வது வளைவிற்கு சமீபமாக இடம்பெற்றுள்ளதாக ஹஸலக்க வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். குருலுபொத்த என்ற இடத்திலிருந்து பிட்டதுன்ன என்ற இடத்தை நோக்கிச் செல்லும் பாதையில் தீபரவியுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. முப்படைகளில் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

எங்களைப் பூட்டிட்டு ராம்குமாரை முடிச்சிட்டாங்க! புழல் கைதியின் பகீர் வாக்குமூலம்

இது தற்கொலை அல்ல என்று ஸ்வாதி கொலை வழக்கு சிறைக்கைதி ராம்குமாரின் மர்ம மரணம் குறித்து சட்ட வல்லுநர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அடுக்கும் காரணங்களை தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிறையிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுவரும் வழியில் ராம்குமார் இறந்தார் என்பது பொய். சிறையிலேயே இறந்துவிட்டார் என்று நம்மிடம் பகீர் வாக்குமூலம் கொடுக்கிறார் புழல் சிறைக் கைதி ஒருவர். சுவாதி கொலையின் போது கிட்டத்தட்ட 2000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதால் புழல் சிறை நிரம்பி வழிந்தது. ராம்குமாரால்…

Read More

விசர் நாய் கடி: மரணிப்பவர்களின் எண்ணிக்கை குறைப்பு

விசர் நாய் கடி நோய் (ரேபிஸ்) மூலம் மரணிப்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கால்நடை சேவைகளின் பணிப்பாளர் வைத்தியர் பி.ஏ்.எல்.ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இந்த நோய் காரணமாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலக விசர் நாய் கடி நோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று (28) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வைத்தியர் பி.ஏ்.எல்.ஹரிச்சந்திர இதனை தெரிவித்துள்ளார். விசர் நாய் கடி மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கையை…

Read More

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் மீண்டும் ஒருமனதாக தேர்வு

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் இன்று மீண்டும் இந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக வங்கியின் தலைவர்களை அவ்வங்கியில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் அமெரிக்காதான் தொடர்ந்து அறிவித்தும் நியமித்தும் வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு இப்பதவிக்கான போட்டியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ந்கோஸி ஓக்கோஞோ-ல்வேலா என்பவர் அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட தலைவரை எதிர்த்துப் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். இந்நிலையில், உலக வங்கியின் தலைவராக தென்கொரியா நாட்டை சேர்ந்த ஜிம் யாங்…

Read More

பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல் – ஜேர்மனியில் சம்பவம்

ஜேர்­ம­னியின் கிழக்கு நக­ரான ட்ரெஸ்­டனில் பள்­ளி­வாசல் ஒன்றின் மீதும்  சர்­வ­தேச மாநாட்டு மையம் ஒன்றின் மீதும் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. நேற்று முன்தினம் (26) நடந்த இந்த குண்டு தாக்குதல் சம்­ப­வங்­களில் எவரும் காய­ம­டை­ய­வில்லை. இந்த தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக இது வரை யாரும் உரிமை கோர­வில்லை. எனினும் இன­வா­தமே இந்த தாக்­கு­தல்­களின் நோக்­க­மாக தெரி­கி­றது என்று அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இத் தாக்­கு­தலைத் தொடர்ந்து ஜேர்­மனியின் ட்ரெஸ்­டனில் உள்ள பள்­ளி­வா­சல்­களின் முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

 யோஷிதவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு, அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒரு மாத கால அனுமதி வழங்கியுள்ளது.

Read More