Headlines

துருக்கி சிறைகளில் இருந்து 38 ஆயிரம் பேர் விடுதலை

துருக்கி நாட்டில் கடந்த மாதம் 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர். ஆனால் அந்த புரட்சியை அதிபர் எர்டோகன், மக்கள் துணையுடன் முறியடித்தார். அதைத் தொடர்ந்து புரட்சிக்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் 35 ஆயிரம் பேரை விசாரணைக்காக அந்த நாட்டு அரசு கைது செய்தது. இதன் காரணமாக துருக்கி சிறைகளில் கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த இட நெருக்கடியை குறைக்க துருக்கி அரசு அதிரடியாக முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில் நன்னடத்தையுடன் நடந்து…

Read More

இது அரசாங்கத்தின் தீர்மானம்

சுகாதார அமைச்சுக்கு மற்றுமொரு பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானமானது அரசாங்கத்தின் தீர்மானம் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறுகின்றார். நான்கு அமைச்சுக்களுக்கு இவ்வாறு பணிப்பாளர் நாயகம் பதவிக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார். சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலை ஆகிய அமைச்சுக்களுக்கு இவ்வாறு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார். அத்துடன் அந்த அமைச்சுக்கள் 100 பில்லியன்களுக்கு அதிகமான செலவுகளை மேற்கொள்வதனால் அதற்காக நிதி மற்றும் கணக்கியல் சம்பந்தமான பணிப்பாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்….

Read More

1000 பஸ்களை திருத்துவதற்கு 3000 மில்லியன் ரூபா

போக்குவரத்துக்கு உதவும் நிலையற்ற ஆயிரம் பஸ்களை மீள் திருத்தம் செய்து போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு அதிக பழமையான பஸ்களை இவ்வாறு திருத்தம் செய்ய உள்ளதாக அந்த சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பீ.கே. ஆரியரத்ன கூறினார். இதற்காக 3000 மில்லியன் ரூபா செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீள் திருத்தம் செய்தும் பயன்படுத்த முடியாத நிலையில் மேலும் 500 பஸ்கள் காணப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

Read More

சுதந்திர கட்சி மாநாட்டில் மஹிந்த கலந்துக்கொள்ளமாட்டார்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக்கொள்ள மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். இன்று (18) ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதால் குறித்த மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் கலந்துக்கொள்வார்…

Read More

புதிய கட்டளைத் தளபதிக்கு பொலிஸ் மா அதிபர் ஒப்புதல்

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை நியமிக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஒப்புதல் அளித்துள்ளார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை, பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு அண்மையில் பரிந்துரை செய்திருந்தது. கடந்த 09ஆம் திகதி முதல் இந்த நியமனம் வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும் பொலிஸ் மா அதிபரினால் அதற்கான அங்கிகாரம் வழங்கப்படாதிருந்து…

Read More

டொனால்ட் ட்ரம்பை விரட்ட வேண்டும் – வில் ஸ்மித்

சமீபத்தில் துபைக்கு சென்றிருந்த பிரபல முன்னனி ஹாலிவுட் நகடிர் வில் ஸ்மித் அவர்கள் இஸ்லாம் குறித்தான டொனால்ட் ட்ரம்ஸ் ன் வெறுக்கத்தக்க பேச்சு குறித்து வெளிப்படையாக விமர்சித்துள்ளார். ”அமெரிக்காவில் இஸ்லாத்திற்கு எதிராக பேசுபவர்கள் குறித்து நான் வெளிப்படையாக சொல்வது மிகவும் அவசியமானது. டொனால்ட் ட்ரம்ஸ் போன்றவர்களின் பேச்சை கேட்பது மிகவும் மன வேதனைக்குரிய விசயம் ஒரு அமெரிக்கனாக இருப்பதால் இதையெல்லாம் கேட்க வேண்டியது தலையெழுத்து. இப்படிப்பட்டவர்களை விரட்டி அடித்து நாட்டை முதலில் சுத்தப்படுத்த வேண்டும்” என வில்…

Read More

திருகோணமலையில் யுத்த ஆயுதங்கள் மீட்பு!

திருகோணமலை கிண்ணியா உப்புவெளி பிரதேச காட்டுப் பகுதியில் யுத்த ஆயுதங்கள் சிலதை இன்று (18) காலை திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். மோட்டார் குண்டுகள், கைக்குண்டுகள் மற்றும் மிதி வெடிகள் என்பனவே மீட்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு குறித்த ஆயுதங்களை திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றியதாகவும், அதனால் அவர்களுக்கு புற்றுநோய் சார்ந்த நோய்கள் ஏற்பட்டு அவர்கள் உயிரிழப்பதாகவும் வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். தெல்கொட ஸ்ரீ சம்போதி விகாரையில் வைத்து ஊடகவியாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மெற்கொண்டு அதற்கான நடவடிக்கைளை எடுத்து வருகின்றது. இந்நிலையில்  சில அரசியல்வாதிகள் மக்களிடத்தில் போலியான…

Read More

சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் பங்கேற்கும் மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது மாநாட்டில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார். மிரிஹானையிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று, கட்சியின் மூத்த உப தலைவரும் தொழில் அமைச்சருமான ஜோன் செனவிரத்ன இந்த அழைப்பிதழை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி குருநாகலில் நடைபெறவுள்ளது. இதேவேளை இந்த மாநாட்டில் பங்கேற்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…

Read More

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும்!

கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முனைபவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 40 புதிய அமைப்பாளர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிக்கும்   51 நாடாளுமன்ற உறுப்பினர்களும்,அமைப்பாளர் பதவிகளை மாத்திரமன்றி,  நாடாளுமன்ற ஆசனங்களையும் இழக்கும் நிலை ஏற்படும். இலங்கையில் , ஒரு…

Read More

பிரதமர் நாடு திரும்பினார்!

சீனாவுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். நேற்றிரவு 11.15 மணியளவில் பிரதமர் நாட்டை வந்தடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி பிரதமர் தலைமையிலான குழுவினர் சீனா நோக்கி பயணித்தனர். அமைச்சர்களான அனுரபிரியதர்ஷன யாப்பா, சம்பிக்க ரணவக்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் சரித்த ரத்வத்த ஆகியோர் பிரதமரின் சீன விஜயத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More