Headlines

பூமியை போன்று புதிய 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் “நாசா” மையம் விண்வெளியில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டறிய ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். அதில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அவை புதிய கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அதுபோன்று இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த ஆய்வுகளை நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவைகளில் உயிரினங்கள் வாழ தகுதியுள்ளதாக 216 கிரகங்கள் இருப்பது தெரிய…

Read More

மியான்மரில் மர்ம நோய்க்கு

மியான்மர் நாட்டில் பரவிவரும் பரவிவரும் மர்ம நோய்க்கு 30 குழந்தைகள் பலியானதாக தெரியவந்துள்ளது. மியான்மர் நாட்டின் வடமேற்கில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஒருவகையான மர்ம நோய் பரவி வருகிறது. குறிப்பாக, நாகா பகுதியில் வேகமாக பரவிவரும் இந்த மர்ம நோய்க்கு கடந்த இரு மாதங்களில் 30 குழந்தைகள் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் 5 வயதுக்கு குறைந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பக்கவிளைவுகளை உண்டாக்கும் இந்த மர்ம நோய்க்கு இந்தியாவின் நாகலாந்தை ஒட்டியுள்ள…

Read More

புகையிலைக்கான வரியை 90 வீதமான உயர்த்த முடிவு

புகையிலைக்கான (tobacco) வரியை 90 சதவீதமாக உயர்த்துவது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அவ்வாறே வைத்திருக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2016இன் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய கொள்ளை பிரகடனத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் காலத்திலேயே புகையிலைக்கான வரி 90 சதவீதமாக காணப்பட்டதாக, அமைச்சர்…

Read More

ஒலுவில் அணைக்கட்டுக்கு துறைமுக அதிகார சபை ஒப்புதல்

-சுஐப் எம்.காசிம் – ஒலுவில் கடலரிப்புக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு ஏதுவாக, உடனடியாக அந்தக் கிராமத்தைப் பாதுகாக்கும் வகையில் மண் அணைக்கட்டு ஒன்றை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள, முன்கூட்டிய ஒப்புதலை ( Pending Approval) துறைமுக அதிகார பணிப்பாளர் சபை வழங்கியுள்ளதாக, அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். எதிர்வரும் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் ஒலுவில் கடலரிப்புப் பிரதேசத்துக்கு விஜயம் செய்யவுள்ள துறைமுக அதிகார சபையின் நிபுணர்களும், கரையோர முகாமைத்துவ திணைக்களத்தின் உயரதிகாரிகளும் அந்தப்…

Read More

மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை திறக்க ஏற்பாடு

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை அவுஸ்திரேலிய – இலங்கை தொடரின் போது திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குறித்த உள்ளக கிரிக்கெட் மையத்தின் கட்டுமான வேலைகளை, இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, ஐ.சி.சி.யின் பிரதம நிறைவேற்றதிகாரி டேவிட் ரிச்சட்சன் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவுடன் விஜயம் செய்து பார்வையிட்டனர். குறித்த உள்ளக கிரிக்கெட்…

Read More

நிர்க்கதியான இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர்

நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து படகில் எற்பட்ட இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான 3 இந்திய மீனவர்களை மீட்டு இந்திய கடலோர காவற்படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தின் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான குறித்த மீனவர்களை மீட்டதுடன், குறித்த தகவலை இந்திய கடலோர காவற்படையினரிடம் அறிவித்து, குறித்த மீனவர்களையும் அவர்களுடைய படகையும் சர்வதேச கடல் எல்லையில் வைத்து ஒப்படைத்தள்ளனர்.

Read More

ரியோ 2016 ஒலிம்பிக் விழா இன்று ஆரம்பம்

சர்­வ­தேச விளை­யாட்டு அரங்கில் உய­ரி­யதும் உன்­னதம் வாய்ந்­த­து­மான கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவின் 31 ஆவது அத்­தி­யாயம் பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் கோலா­கல ஆரம்ப வைப­வத்­துடன் இன்று தொடங்­கு­கின்­றது. நான்கு வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை லீப் வரு­டத்தில் நடை­பெறும் நவீன கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா, அதன் 120 வருட வர­லாற்றில் தென் அமெ­ரிக்க நாடொன்றில் அரங்­கேற்­றப்­ப­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும். ஒற்­றுமை, நட்­பு­றவு, சகோ­த­ரத்­துவம், புரிந்­து­ணர்வு ஆகி­ய­வற்றின் சின்­ன­மாக ஒலிம்பிக் விளை­யாட்டு…

Read More

தம்புள்ள பள்ளிக்கு காணியை விடுவிப்பதில் நகர அபிவிருத்தி அதிகார சபை தயக்கம்

தம்­புள்ள ஜும்மா பள்ளியை நிர்­மா­ணிக்கும் காணியை விடு­விப்­பதில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தயக்கம் காட்டிவருவதாக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் ஏ.எச்.எம்.இப்­றாஹிம் சுட்டிக்காட்டியுள்ளார். தம்­புள்ள பிர­தேச அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்டம், தம்­புள்ள தொகுதி அமைப்­பா­ளரும் பிர­தேச அபி­வி­ருத்திக் குழுவின் இணைத்­த­லை­வ­ரு­மான ப்ரியான் விஜே­ரத்ன தலை­மையில் நடை­பெற்ற போது தம்­புள்ள நகரில் முஸ்லிம் ஜும்ஆப் பள்­ளி­வாசல் நிர்­மா­ணிப்­ப­தற்­கென இனங்­கா­ணப்­பட்­டுள்ள காணியை விடு­விப்­பதில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினர் தொடர்ந்தும் கால­தா­மதம் செய்து வரு­வது தொடர்பில் மத்­திய…

Read More

காஷ்மீர் உயர்நீதிமன்றம் ராணுவத்திற்கு எச்சரிக்கை !

– அபூஷேக் முஹம்மத்- காஷ்மீர் உயர் நீதிமன்றம் CRPF மற்றும் ராணுவத்திடம் சரமாரியான கேள்விகளை எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.தலைமை நீதிபதி பவுல் வசந்தகுமார் மற்றும் நீதிபதி ஹுசைன் அக்தர் அடங்கிய பென்ச் இந்த வழக்கை விசாரிக்கின்றது . ஏன் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் முட்டிக்கு மேல் மற்றும் கண் பகுதிகள் தாக்கப்பட்டுள்ளது நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர் ? அவர்கள் நமது குடிமக்கள் ஆவர் .பெல்லட்களால் சுடுவதற்கு வானத்தில் இறங்கிய வேற்று கிரகவாசிகள் அல்ல .அவர்களை…

Read More

தென்கொரியா சென்றடைந்தார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தென் கொரியாவிற்கு இன்று (5) அதிகாலை 1.30 மணியளவில் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தென் கொரியாவிற்கு ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவர் தென் கொரியாவில் இடம் பெற உள்ள மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காகவும்அங்கு வாழ்கின்ற இலங்கையர்களை சந்திப்பதற்காகவும் தென் கொரியாவிற்கு விஜயம்மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் ஜ.எல்.பீரிஸ்,மகிந்தானந்த அலுத்கமகே,பந்துல்ல குணவர்தன மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோர் மகிந்தவுடன் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

களனி ஆற்றில் குப்பை : 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது!

களனி கங்கையை மாசுபடுத்திய குற்றச்சாட்டில் 7 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் 4 பெண்கள் மற்றும் 3 ஆண்களும் உள்ளடங்குவதாக தெரிவித்த பொலிஸ் கடற்படை பிரிவினர், கைது செய்யப்பட்டவர்கள் பேலியகொட மற்றும் வத்தளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

ஒலிம்பிக் கிராமத்தில் கைவரிசை: டென்மார்க் வீரர்களின் பொருட்கள் திருட்டு

ரியோ ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருந்த ஆஸ்திரேலிய அணி நிர்வாகி ஒருவரின் லேப்-டாப் மற்றும் வீரர்களின் சீருடைகள் சில தினங்களுக்கு முன்பு மாயமானது. இந்த நிலையில் டென்மார்க் அணியை சேர்ந்த வீரர்களின் செல்போன், ஐபேர்டு மற்றும் துணிகள் திருட்டு போய் இருக்கிறது. இதனை டென்மார்க் அணியின் தலைமை நிர்வாகி மொர்டென் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களின் உடமைக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More