Headlines

லக் சதொச நிறுவனத்தின் முகாமையாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்




கொழும்பு தெற்கு பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரேமலால் ரணகல லக் சதொச நிறுவனத்தின் அபிவிருத்தி முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக பிரதி பொலிஸ்மா அதிபருக்கு மாதாந்தம் 60,000 சம்பளம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மஹிந்தவின் ஆட்சியின் போது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு, பிரேமலால் ரணகல மிகவும் பங்குவகித்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டவராகும்.

மேலும் ரக்பி வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கிலும் இவரது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், ரோசி சேனாநாயக்கவின் கூட்டத்தை குழப்புவதற்கும் இவர் துணை நின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *