Headlines

நீதிமன்றில் முன்னிலையாகும் பிள்ளையான்




கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசன்துறை சந்திரகாந்தன் இன்று நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராக உள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் முன்னிலையாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 அம் திகதி கொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு தொடர்பில் பிள்ளையான் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *