Headlines

காஷ்மீர் குறித்து, ஜம்மியத்துல் உலமா அமைதி




நரேந்திர மோடியின் மதவாத அரசினாலும், இந்தியாவின் ஏவல் நாய்களான இராணுவத்தினராலும் காஷ்மீர் முஸ்லிம்கள் தினமும் கொல்லப்படுகிறார்கள். கற்பழிக்கப்படுகிறார்கள். தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் அவர்களுக்கு எதிராக தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன.
இத்தனை அநியாயங்களும் நடைபெறுவது அவர்கள் கலீமாச் சொன்ன ஒரே காரணத்திற்காகத்தான்.
எமது அயல் நாடான இந்தியாவில் – காஷ்மீரில் நடைபெறும் இந்த இன அழிப்புக்கு எதிராக அமெரிக்கா, கனடா, பெல்ஜியம், அவுஸ்திரேலியா, லண்டன், நியூசிலாந்து என பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
எனினும் தற்போது வரை இலங்கையில் காஷ்மிர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக எந்த ஆர்ப்பாட்டமும் நடந்ததாக தகவல் வெளியாகவில்லை.
முன்னர் முஜீபுர் ரஹ்மான் எம்.பி. போன்றவர்களும் சமூக ஆர்வலர்களும் இவ்வாறான பலஸ்தீன, ஈராக், சார்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.
எனினும் அயல்நாட்டில் அல்லற்படும் காஷ்மீர் முஸ்லீம்களுக்காக இதுவரை இலங்கை முஸ்லிம்கள் மௌனம் கடைபிடித்து வருகின்றமை பெரும் ஆச்சரியமாகவே நோக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *