Headlines

காத்தான்குடியில் திடீரென முழைத்த பேரீத்தம் மரம்

– அபூ ஷஹ்மா – காத்தான்குடி முதலாம் குறிச்சி, பிரதான வீதி, அந் நாஸர் வித்தியாலயத்திற்கு அருகே நேற்றிரவு திடீரென நடப்பட்ட பேரீத்தமரம் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நகர சபையினால் அகற்றப்பட்டுள்ளது. இந்த மரம் திடீரென அவ்விடத்தில் முழைத்தது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன் இம்மரம் வீதிப் போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதாகவும் இதை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் கேட்டுகொண்டதற்கிணங்கவே எடனடியாக அது அகற்றப்பட்டது. கடந்த நோன்புப் பெருநாள் இரவில்…

Read More

“நபிகள் நாயகத்தின் அடக்கத்தலமருகிலும் விவாதத்திற்கு தயார்” – ஞானசார

பௌத்த சமயத்திற்கு ஏற்படும் அழுத்தங்களுக்கு எதிராக பாணந்துறை கொள்கை போன்ற வாத விவாதங்களுக்கு தயார் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி்ல் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பன்றி ஒற்றன் அண்மையில் எமக்கு விடுத்த கொலை அச்சுறுத்தல் பேச்சு காரணமாக மிகவும் சிறந்த வழி உருவாகியுள்ளது. அங்காங்கே இருந்து கொண்ட திருட்டு கல்லை பொறுக்கி கண்ணாடி மாளிகைகளுக்கு கல்லெறியாமல்,…

Read More

லஹிரு வீரசேகரவிற்கு விளக்கமறியல்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரான லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவினை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை: ஜனாதிபதி அதிரடி

ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த அறிவிப்பு ஜனாதிபதியால் இன்று (8) விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வட் வரி அதிகரிப்பு மற்றும் பல விடயங்களுக்காக மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு முகங்கொடுக்க வேண்டிய அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு அமைச்சர் உள்ளிட்டவர்கள் தயாராக இருக்க…

Read More

சென்னை அருகே 30,000 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த இடம்

சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்ட வகைகளும் கற்காலத்தைச்…

Read More

இந்த ஸ்மார்ட்போன் 250 ரூபாய்!

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், அதன் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், 250 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்ஃபோன், வெள்ளிக்கிழமை முதல் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று ரிங்கிங் பெல்ஸ் என்ற இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மோஹித் கோயல் செய்தியாளர்களிடம் அறிவித்தார். நான்கு அமெரிக்க டாலர் அல்லது மூன்று பிரிட்டன் பவுண்டுகளுக்குக் குறைவான விலையுள்ள இந்த ஸ்மார்ட் போன்கள், முதல் கட்டமாக 5 ஆயிரம்…

Read More

ஷீயா பிரதிநிதிகள் தெவட்டகஹ ஜூம்ஆப்பள்ளிவாசலுக்கு விஜயம்

ஈரானின் மறைந்த முன்னாள் ஆன்மீகத் தலைவர் கொமைனியின் பேரனான ஆயதுல்லா செய்யத் ஹஸன் கொமைனி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இவர் இன்று (08) ஜூம்ஆத் தொழுகைக்காக கொழும்பு 07 இல் உள்ள தெவட்டகஹ ஜூம்ஆப்பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட படம். குறிப்பு: ஷீயாக்களின் பரவல் இலங்கையில் அதிகரித்தள்ள நிலையில் ஈரான் பிரதிநிதிகளின் இலங்கை விஜயத்தை முஸ்லிம்கள் உன்னிப்பாக அவதானியுங்கள். இலவசக் கல்வி என்ற போர்வையில் இலவசமாக பணம் வழங்கப்பட்டு ஷீயாக்  கொள்கை இலங்கையில் பரப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது –…

Read More

ஜாகிர் நாயக் மீதான நெருக்குவாரம் – ஏற்படுத்தப்போகும் அதிர்வலைகள்

டாக்டர் ஜாகிர் நாயக் உரைகளை எல்லாம் மீளாய்வு செய்ய சொல்லுவதால் இது வரை இஸ்லாமை ஏற்ற மக்கள் விட இன்னும் பல மடங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமை வாழ்வியல் நெறியாக இந்தியாவில் ஏற்பதற்கு காரணமாக மாறப்போகின்றது . அறிவார்ந்த உழைப்பை தீவிரவாதம் என்ற சூழ்ச்சி வலையோடு சிக்க வைத்து உலக மக்களையும், டாக்டர் ஜாஹிர் நாயக்கயும் உளவியல் வதைக்கு சிக்க வைத்து சத்திய அழைப்பை தவிர்க்க வைக்கும் இது ஒரு ஷைத்தானிய வர்க்கத்தின் கூட்டு முயற்சி…

Read More

சதாம் ஹூசைன் நல்ல மனிதர் – ட்ரம்ப்

அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் அவர்கள், சதாம் ஹூசைனை ஒரு நல்ல மனிதர் அவர்கள் பயங்கரவாதிகளிற்கு எதிராகப் போரிட்டார் என்று தெரிவித்துள்ளார். சதாம் ஹூசைனும், லிபிய அதிபர் கடாபியும் இன்று உயிருடன் இருந்தால் உலகம் நன்றாக இருந்திருக்கும் என்று குறிப்பிடும் டொனால்ட் ட்ரம்ப் இப்போதும் முஸ்லிம்களை எதிர்க்கின்றார்.

Read More

ஜாகிர் நாயக் விவகாரம் – மோடிக்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

வங்கதேசத் தலைநகர் டாக்காவில், கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர் ஒருவர் உட்பட பலர் பலியானார்கள். இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன் இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக் பேச்சில் தான் கவரப்பட்டதாகக் கூறியுள்ளான் எனக்கூறி ஜாகிர் நாயக் தீவிரவாதத்தைத் தூண்டுவதாக அவர் மீது மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது…

Read More