Headlines

பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு பிரிவு அவதானம்!

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பங்களாதேஷ் தாக்குதலில் ஈடுபடுவதற்கு முன்னரே நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக இந்நாட்டின் புலனாய்வுப் பிரிவினர் வெகு அவதானத்துடன் செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார். எமது நாட்டின் பாதுகாப்பு குறித்து புலனாய்வு பிரிவினர் வெகு அவதானத்துடன் செயற்படுகின்றனர். நேற்று முந்தினம்(02) பங்களாதேஷ் டாக்கா உணவகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

ஊடகவியலாளர்களுக்கு உரிய பயிற்சி கிடையாது

இலங்கை ஊடகவியலாளர்களுக்கு போதியளவு பயிற்சி கிடையாது என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். காலி அலோசியஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பிரதம விருந்தினராக பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஊடகத்துறை தொடர்பில் பாடசாலை மாணவர்கள் காண்பித்து வரும் அக்கறை எதிர்காலத்தை சிறந்த வகையில் அமைக்கும். ஊடகத்துறையில் காணப்படும் பிரதான பிரச்சினைகளில் ஒன்று போதியளவு பயிற்சி இன்மையாகும். சில வேளைகளில் நாம் உரையயொன்றை ஆற்றினால் மறுநாள் காலையில் முற்றிலும் மாறுப்பட்ட…

Read More

போராட்டம் வெற்றியாம்!

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடாத்திய போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது. இன்று (4) காலை 08.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரச சேவையில் உள்ளீர்க்க கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் இன்றையதினம் அரை நாள் பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையிலேயே தமது போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த வேலை நிறுத்தம்…

Read More

விண்ணப்பங்கள் கோரல்

இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபைக்குட்பட்ட காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வீட்டு மின்னிணைப்பு, தையல், மோட்டார் சைக்கிள் திருத்துனர், முச்சக்கர வண்டி திருத்துநர், மரவேலை, காய்ச்சி இணைப்பவர், கட்டடவினைஞர், அலுமினியம் பொருத்துனர், சமையலாளர், வெதுப்பாளர், அறை பராமரிப்பாளர், குடிபானம், பரிமாறுவோர் ஆகிய தொழிற்பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன.  இப்பயிற்சி நெறிகளைப் பயில விரும்புவோர், தமது விண்ணப்பங்களை ‘பொறுப்பதிகாரி, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, தொழிற்பயிற்சி நிலையம், வலந்தலைச் சந்தி, காரைநகர்’…

Read More

எட்டாக்கனியாகிப் போன நுரைச்சோலை வீடுகளும்; வயிற்றில் பால் வார்க்கும் அமைச்சர் றிஷாதின் அறிவிப்பும்

-சுஐப் எம்.காசிம், அஷ்ரப் ஏ சமத் – “நுரைச்சோலை” – நமக்கு உடன் ஞாபகத்துக்கு வருவது புத்தளம் அனல்மின் நிலையமே. இற்றைக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை மக்களின் பேசுபொருளாக அம்பாறையில் அமைந்துள்ள நுரைச்சோலை இருந்தது. 200௪பூ டிசம்பர் 25 ஆம் திகதி இலங்கையை உலுக்கிய சுனாமிப் பேரழிவு பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், பல பில்லியன் பெறுமதியான சொத்துக்களையும், வீடுகளையும் அழித்தது. “சுனாமி” எனும் கடற்பேரலை அம்பாறைக் கரையோரப் பிரதேசங்களிலும் தனது மூர்க்கத்தனத்தைக் காட்டியது. கொடூரமான இந்த…

Read More

நாட்டின் நலன் கருதி எவருடனும் இணையத் தயார்-பிரதமர்

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எந்தக்கட்சியுடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை அதிகரிக்கும் நோக்கில் பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே  இந்தக் கருத்தை வெளியிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது ஜே.வி.பி என்று எந்தக்கட்சி முன்வந்தாலும் அந்த கட்சிகளுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது. மற்றவர்கள் அனைவரும் எதிர்ப்பை வெளியிடும்போது அரசாங்கம் மாத்திரமே திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை…

Read More

எதிர்கால கட்டட நிர்மாணம் அனுமதி பெறப்படுவது கட்டாயம்

இனிவரும் காலங்களில் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கட்டிடங்களைஅமைக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அனுமதி கட்டாயம் பெறப்படவேண்டும் என்றுகொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இயற்கை அனர்த்தங்களின்போது அதிக பாதிப்புக்கான ஏதுக்களை குறைக்கும் நோக்கிலேயேஇந்த கொள்கை அமுல்செய்யப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்போதைக்கு 10 மாவட்டங்களில் இந்த நடைமுறை செயற்படுத்தப்படவுள்ளது. எனினும் அதனை நாடளாவிய ரீதியில் செயற்படுத்தவும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. நாடாளாவிய ரீதியில் தற்போது வருடம் ஒன்றுக்கு ஒருலட்சம் வீடுகள் வரை தேசிய கட்டிl ஆராய்ச்சி…

Read More

இலங்கைக்கு நிதியுதவி முன்னணியில் சீனா!

இலங்கைவுக்கு இந்த ஆண்டின் முதல் நான்கு மாத காலப் பகுதியில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 855.4 மில்லியன் டொலரை வழங்குவதாக வெளிநாட்டு கடன் வழங்குனர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமான நிதியை சீனாவே வழங்கவுள்ளதாக, இலங்கை நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

மிருகங்களை வேட்டையாடியோர் சரணடைந்தனர்

நக்கிள்ஸ் வனப்பகுதியில், பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளை வேட்டையாடியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர், இன்று (03) ஞாயிற்றுக்கிழமை, தமது சட்டத்தரணியுடன் பன்விலை பொலிஸில் சரணடைந்துள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் ஏற்கெனவே இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக வன விலங்குகளை வேட்டையாடிய சிலர் அவற்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இந்தப் புகைப்படங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில், இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் பிரதான சந்தேகநபர்…

Read More

தமிழ் மொழி கற்பிக்கும் விமலசார தேரர்

“பிற மொழி­யையும் தெரிந்து வைத்­தி­ருங்கள். அது பிற­ரோடு பழக உதவும். அடுத்­த­வரை அணுக உதவும். வெறும் மொழிப்­பித்து என்­பது உங்­களைக் கிணற்றுத் தவ­ளை­யாக்­கி­விடும். கிணற்றுத் தவ­ளையும் நீந்தும் உயிர்­வாழும். ஆனால், உல­கத்தின் அனு­ப­வமும் அளவும் அதற்குச் சிறி­ய­தாகத் தெரியும்” என முகம் கொள்­ளாத சிரிப்­புடன் எம்­மோடு பேசத் தொடங்­கினார் குட்­டிக்­கு­ளமே விம­ல­சார தேரர். “இந்த இனிப்­பான தரு­ணத்தில் சில விட­யங்­களை உங்­க­ளோடு பகிர்ந்து கொள்ள விரும்­பு­கிறேன்” என இலக்­கணத் தமி­ழில் தேன் சுவை­யாக கூறினார் 32 வய­தான…

Read More

அல்லாஹ் தொடர்பிலும், குர்ஆன் தொடர்பிலும் எவ்வேளையிலும் விவாதத்துக்கு தயார் – BBS

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோரை பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு பொதுபல சேனா அமைப்பு சவால் விடுத்துள்ளது. பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி (ஸல்) ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்புமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் அசாத் சாலி தெரிவித்த கருத்து மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா…

Read More

மொஹமட் முஸம்மிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கடந்த மாதம் 20ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளருக்கு விளக்கமறியல்நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 7ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனத்தை முறைகேடாகபயன்படுத்தியமை தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More