Headlines

நிவாரணம் வழங்குதலை முறைமைப்படுத்த ஜனாதிபதியினால் விசேட குழு!

கொஸ்கம சாலாவ ஆயுதக் களஞ்சிய கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை முறைமைப்படுத்துவதற்கான ஒரு விசேட குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயன்த, ஆகியோரின் தலைமையில் இக்குழுவை நியமிப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் வரை அனைத்து நடவடிக்கைகளையும் இக்குழு ஒருங்கிணைப்புச் செய்வதற்கும்…

Read More

ஐரோப்பிய யூனியனில் தொடர்வதா, வேண்டாமா? இங்கிலாந்தில் வாக்கெடுப்பு நடப்பது சந்தேகம்

28 நாடுகளின் அரசியல், பொருளாதார கூட்டமைப்பாக ஐரோப்பிய யூனியன் செயல்படுகிறது. இந்த ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிப்பதா, வேண்டாமா என்ற சர்ச்சை அங்கு எழுந்தது. இதையடுத்து பிரதமர் டேவிட் கேமரூன் கருத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முடிவு செய்தார். இந்த கருத்து வாக்கெடுப்பு வருகிற 23-ந் தேதி அங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பிரசாரமும் நடைபெற்று வந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாகூட கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் வந்து, ‘ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து…

Read More

டிரம்பை வீழ்த்த ஹிலாரியுடன் கைகோர்க்கும் பெர்னீ சாண்டர்ஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும் (வயது 68), குடியரசு கட்சி தரப்பில் பெரும் கோடீசுவர தொழில் அதிபர் டொனால்டு டிரம்பும் (69) போட்டியிடுவது உறுதியாகி விட்டது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் ஹிலாரிக்கு கடும்போட்டியாக திகழ்ந்து வந்தவர், அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பெர்னீ சாண்டர்ஸ். இப்போது முதல் முறையாக அவர் ஹிலாரி கிளிண்டனுடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசினார்….

Read More

சுட்டுக் கொல்லப்பட்ட இங்கிலாந்து பெண் எம்.பி.யின் கணவருக்கு ஒபாமா ஆறுதல்

ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிக்க வேண்டுமா – வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்காக அந்நாட்டு மக்களிடம் வரும் 23-ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக, இங்கிலாந்தில் ஆளும் பழைமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியினரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிக்க வேண்டும் என்பது தொழிலாளர் கட்சியினரின் நிலைப்பாடாக உள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் நீடிக்கவேண்டும் என்று…

Read More

உதய கம்மன்பில கைது

தான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நுகேகொட, பூகொட வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் இன்று சனிக்கிழமை (18) காலை, தான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். tm

Read More

போர்ட் சிட்டிக்குப் பதிலாக பொருளாதார நகரம்!

கொழும்பில் அமைக்கப்பட இருந்த போர்ட்சிட்டிக்குப் பதிலாக பொருளாதார நகரமொன்றை அமைப்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் பிரகாரம் சீனாவின் சைனா ஹார்பர் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து வெறுமனே கேளிக்கை அம்சங்கள் மட்டும் கொண்ட துறைமுக நகரமொன்றுக்குப் பதிலாக பொருளாதார நகரம் ஒன்று காலிமுகத்திடல் அருகே அமைக்கப்படவுள்ளது. தற்போதைக்கு உலகின் சந்தைப்படுத்தல் மத்திய நிலையங்களாகவும், பொருளாதார நகரங்களாகவும் கருதப்படும் சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகியவற்றுக்கு…

Read More

சுசந்திகா ஜயசிங்க மீது தாக்குதல்

முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, தன்னுடைய கணவனால் தாக்கப்பட்ட நிலையில், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அவரது கணவனை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Read More

எமது பொறுமைக்கும் எல்லை உண்டு : அமைச்சர் கபிர் ஹாஷிம்

தேசிய அர­சாங்­கத்தின் கீழ் பல்­வேறு அபி­வி­ருத்தி செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்கும் தரு­ணத்தில் அதனை சீர்­கு­லைத்து எமது கட்­சி­யின்­பெ­ய­ருக்கு பங்கம் விளை­விக்கும் வகை­யில் செயற்­படும் பிரி­வினர் தொடர்பில் நாம் தொடர்ந்தும் பொறு­மை­யாக இருக்க முடி­யாது. எமது பொறு­மைக்கும் ஒரு எல்லை உள்­ளது என்று அமைச்சர் கபிர்­ஹாஷிம் தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது தேசிய அர­சாங்­கத்தின் ஒரு­மித்த செயற்­பா­டுகள் மூல­மாக மக்­க­ளுக்கு பல்­வேறு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அந்­த­வ­கையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அமைச்­சர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டு­கள் ­தொ­டர்­பில்­ ஒரு…

Read More

தனிப்பட்ட நோக்கங்களுக்காக ஆர்ப்பாட்டங்களை தொடர வேண்டாம்

துறைமுக அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டும் என்ற ஆர்பாட்டகாரர்களின் கோரிக்கை குற்றம் புரிந்தவரை பாதுகாக்கும் செயல் என துறைமுக அபிவிருத்தி அமைச்சின் செயளாளர் மஞ்சுல குணசேகர  தெரிவித்தார்.

Read More

யுனெஸ்கோ (UNESCO) பணிப்பாளர் – அமைச்சர் றிஷாத் சந்திப்பு

– ஊடகப் பிரிவு – இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள, புதுடெல்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும், இலங்கை, இந்தியா, பூட்டான், மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான யுனெஸ்கோ (UNESCO) பணிப்பாளரும், பிரதிநிதியுமான ஷிகேரு அஒயாகியை, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (17/06/2016) தனது அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில், கடந்த காலங்களில் யுனெஸ்கோ கல்வி, கலாச்சாரம் தொடர்பில் இலங்கைக்கு ஆற்றியுள்ள பணிகளுக்கு, அமைச்சர் றிசாத் நன்றிகளை வெளிப்படுத்தினார். அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின்…

Read More