Headlines

ரயிலில் மோதி இரு இளைஞர்கள் பலி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு கல்வியங்காட்டைச் சேர்ந்த மோகனராசா நிசாந்தன் (வயது 17), திருநெல்வேலியைச் சேர்ந்த பரமநாதன் ரெஜராம் (18)  ஆகிய  இரு இளைஞர்கள், இன்று சனிக்கிழமை (07) உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகாமையில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இரு இளைஞர்களும் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நிலையிலே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.  இச்சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு…

Read More

செல்லப்பிராணி நாய்களை பதிவு செய்யாவிட்டால் 10ஆயிரம் ரூபா தண்டம்

கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியில் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்ப்படவுள்ளது. அதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது. குறித்த வேலைத்திட்டம் மாகண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின்கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நாய்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்யத் தவறின் 10ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் மாகண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் வினவியபோது, கட்டாக்காலி நாய்களின்…

Read More

மஹிந்த அணியில் எனக்கு எதிராக சூழ்ச்சி: சஜின்வாஸ்

எனக்கு எதி­ராக பாரிய சதித்திட்டம் ஒன்று கூட்டு எதிர்க்கட்சி பக்கம் இருந்து முன்­னெடுக்­கப்­ப­டு­கிறது. அரச சாட்சியா­க மாறுவதற்கு நான் குற்­ற­வா­ளியல்ல. பாம்பின் கால் பாம்­ப­றி­வது போன்று மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சியில் கட­மையை தவிர வேறு ஒன்றும் நான் செய்யவில்லை என்று முன்னாள் வெளிவிவகார கண்­கா­ணிப்பு எம்.பி. சஜின் டி வாஸ் குண­வர்­த் தன தெரி­வித்தார். ஊட­கங்கள் எனக்கு எதி­ராக பாரிய குற்­றச்­சாட்­டுக்­களை எவ்­வி­த­மான அடிப்­படை தன்­மை­யு­மின்றி முன்­வைக்­கின்­றன. அவ்­வாறு பாரி­ய­ள­வி­லான குற்­றத்தை நான் செய்­தி­ருந்தால் என்னை…

Read More

நாய்களுக்கும் வரி

வெள்­ளைக்­காரன் ஆட்சி மீண்டும் நாட் டில் தலை­தூக்­கி­யுள்­ளது. நாய்­க­ளுக்­கான அனு­மதிப் பத்­தி­ரத்­திற்கும் 10000 ரூபா செலுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது எனத் தெரி­வித்த பொது எதிர்க்­கட்­சி­யினர். சிறு­நீ­ரக நோயா­ளர்­களின் இரத்தப் பரி­மாற்றம் செய்யும் கட்­ட­ணத்­திற்கும் புற்று நோயா­ளர்­களின் எக்ஸ்­ரேக்கும் 15 வீத வற்­வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்றும் குற்­றம்­சாட்­டி­யது. பாரா­ளு­மன்ற குழு அறையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற பொது எதி­ர­ணி யின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மாநாட்­டி­லேயே இக்கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டன. பொது எதி­ர­ணி­யினர் இங்கு மேலும் கருத்து வெளியி­டு­கையில்; இலங்­கை­யர்­க­ளிடம் அனைத்து…

Read More

பொது மன்னிப்புக் காலம்: 423 துப்பாக்கிகள் கிடைக்கப்பெற்றுள்ளன

பொதுமக்கள் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் முடிவடைந்துள்ளதாகவும் இதுவரை 423 துப்பாக்கிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயன்த ஜயவீர தெரிவித்தார். சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க கடந்த 25ஆம் திகதி வழங்கப்பட்ட கால எல்லை நேற்றுடன் முடிவடைந்துள்ளது. சட்டவிரோதமான முறையில் உரிய அனுமதி பத்திரம் எதுவுமின்றி ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்கள் அந்த ஆயுதங்களை பொலிஸ் நிலையங்கள் அல்லது பிரதேச செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என அமைச்சு அறிவித்திருந்தது….

Read More

உயிருடன் பிடிக்கப்பட்ட மரை

பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்டப் பகுதியில் உயிருடன் மரை ஒன்றை  தோட்ட பொது மக்களும் பொலிஸாரும் இணைந்து பிடித்துள்ளனர்.  உணவு தேடிவந்த குறித்த மரையின் கால் ஒன்று உபாதைக்குள்ளாகியிருந்த நிலையிலேயே பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மரை தற்போது நல்லதன்னி வனலிலங்கு நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Read More

லண்டனின் நகர மேயராக முதல் இஸ்லாமியர்

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானைச் சேர்ந்த பஸ் சாரதி ஒருவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.லண்டனில் முஸ்லிம் ஒருவர் மேயராக தெரிவு செய்யப்படுகின்றனமை இதுவே முதல் முறையாகும். பிரதிநிதிகள் தேர்தல் மற்றும் சில நகரங்களுக்கான மேயர் பதவிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் லண்டன் நகர மேயர் பதவிக்கான தேர்தலில் பிரபல கோடீஸ்வரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெசிமாவின் சகோதரருமான ஸக் கோல்ட் ஸ்மித் போட்டியிட்டார்….

Read More

காற்று மாசடைதலில் கண்டி முதலிடம் – ஜனாதிபதி

கொழும்பு நகரத்தை தோல்வியடைய செய்து காற்று மாசடைதலில் கண்டி நகரம்  முதலிடத்துக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். இலங்கையின் காற்று மாசடைதல் தொடர்பிலான ஆறாவது தேசிய மாநாடு நேற்று  (5) மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. பத்தரமுல்லையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

Read More

தகவலறியும் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விரைவில்!

விரைவில் பாராளுமன்றில் தகவல் அறியும் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இடம்பெறவுள்ளது என்று  பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத் துறை பிரதி அமைச்சர்  கருணாரத்ன பரணவித்தார தெரிவித்தார். நேற்று முன்தினம்  (04) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பின்னர் குறித்த சட்ட மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அச்சட்ட மூலத்தில் கவனம் செலுத்தக்கூடிய…

Read More

எம்.பி. பதவியைத் துறக்கத் தயார் – பாலித

நாடாளுமன்றத்தின் கௌரவம் பாதுகாக்கப்படுமாக இருந்தால் ஆயுள் முழுமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கத் தயாராக இருப்பதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் பாலித, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து உண்மையான தகவல்களை அறிந்தவர் அமைச்சர் சரத் பொன்சேகா என்ற வகையில் அவரது உரையை கூட்டு எதிர்க்கட்சியினர் செவிமடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கெட்ட…

Read More

இணையக்குற்ற முறைப்பாடுகள்; நடவடிக்கை ஆரம்பம்

இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பேஸ்புக் சமூக வலைத்தளம் குறித்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கணனி அவசர நடவடிக்கை அணியின், பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார். போலி பேஸ்புக் கணக்குகள் மற்றும் தேவையற்ற முறையில் பேஸ்புக் கணக்குகளுக்குள் ஊடுருவுதல் குறித்தே பெரும்பாலும் முறையிடப்பட்டுள்ளன. இதேவேளை, போலி மின்னஞ்சல் தொடர்பிலும் சில முறைப்பாடுகள் குறித்த காலப் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, ரோஷான்…

Read More

ஹஜ் கட­மையை நிறை­வேற்ற விண்­ணப்­பித்துள்ளவர்களின் கவனத்திற்கு

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்ற விண்­ணப்­பித்­த­வர்­களில் 50 வீத­மானோர் கட­மையை நிறை­வேற்­று­வதில் அக்­க­றை­யின்­றியும் விருப்­ப­மின்­றியும் இருக்­கின்­றனர். ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தமது பய­ணத்தை எழுத்து மூலம் உறு­தி­செய்­யா­விட்டால் ஹஜ் பய­ணத்­துக்­கான வாய்ப்பு வழங்­கப்­ப­ட­மாட்­டா­தென ஹஜ் குழுவின் உறுப்­பி­னரும் முஸ்லிம் சம­ய­ வி­வ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரு­மான எம்.எச்.எம்.பாஹிம் தெரி­வித்தார். 2016 ஆம் வரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில், இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை…

Read More