Headlines

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடி கணனி

நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் 80,000 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மடி கணனிகளை வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டம் (26) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் மாணவர்களுக்கு மடிகணனிகள் பிரதமரால் கையளிக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்ட வாக்குறுதிக்கமைய இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மடிகணனியைப் பல்கலைக்கழக மாணவர்கள் பெற்றுக் கொள்வதற்காக 75,000 ரூபா நிதி இலகு கடனாக வழங்கப்படுகிறது. நாடளாவிய…

Read More

அனைத்து வகுப்புகளுக்கும் தடை.!

மத்திய மாகாணத்தில் ஞாயிறுக்கிழமை காலையில் நடைபெறும் அனைத்து வகுப்புகளுக்கும் எதிர்வரும் பொசன் போயா தினத்திலிருந்து தடை விதிக்கப்போவதாக மத்திய மாகாண ஆளுநர் நிலூகா ஏகநாயக்க தெரிவித்துள்ளார். சமய கல்வி நடவடிக்கைகளில் சிறுவர்கள் அதிக நாட்டத்துடன் ஈடுபடுவதற்காகவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தின் மத நல்லிணக்கம் தொடர்பான சிறப்பு ஆலோசனைக்குழு மற்றும் மத்திய மாகாணத்தின் ஒத்துழைப்புடனும் இந்நடவடிக்கையானது மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, மத தலைவர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கையின் பேரிலேயே குறித்த…

Read More

நான் செய்த, மிகப்பெரும் தவறு

ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டமையே தான் செய்த பெரிய தவறென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கவலை தெரிவித்துள்ளார். நேற்று -28-  கதிர்காமத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேபோல் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் தனக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களில் கடமையாற்றும் போது, கடமையாற்ற முடியாத அமைச்சான மக்கள் தொடர்பாடல் அமைச்சை தனக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ருஹனு பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் நிதி…

Read More

ஐந்தே நிமிடங்களில் டெல்லியை தாக்கும் ஆற்றல் பாகிஸ்தானுக்கு உண்டு

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரின் அருகேயுள்ள கவுட்டா பகுதியில் அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் தலைமை ஆராய்ச்சியாளராக முன்னர் பொறுப்புவகித்த அப்துல் காதீர் கான்(80) பாகிஸ்தானின் அணு ஆயுதங்களின் பிதாமகன் என கருதப்படுகிறார். பாகிஸ்தான் முதன்முறையாக கடந்த 28-5-1988 அன்று ஐந்து அணுகுண்டுகளை பூமிக்கு அடியில் வெடிக்கவைத்து பரிசோதனை நடத்தியது. இந்த பரிசோதனைகளின் பாகிஸ்தான் பெரிய அளவில் வெற்றியை காட்டியது. உலகின் வல்லரசு நாடுகளுக்கு இணையான ஆயுதபலம் தன்னிடம் இருப்பதாக…

Read More

ஜப்பான் ராடாரில் அரநாயக்கவின் படங்கள்

அரநாயக்கவில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவை, ஜப்பானின் ராடார் செயற்கைக் கோள் புகைப்படமெடுத்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி மண்சரிவு இடம்பெற்றவுள்ள மலைப்பகுதி எவ்வாறு காட்சியளித்தது என்றும் கடந்த 25ஆம் திகதி எந்தப்பகுதி மண்சரிவால் பாதிக்கப்பட்டது என்றும் அந்தப் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

Read More

அரசியலில் ஈடுபடுவது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை! திஸ்ஸ

அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக இன்னும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலில் இருந்து தான் தற்போது ஒதுங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வெலிகம்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது, ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும்…

Read More

இலங்கையில் போலியோவை ஒழிக்க முடிந்தது எவ்வாறு? பிரதமர் உரை

இலங்கையில் போலியோ நோய் அச்சுறுத்தல் இல்லை எனவும், இரண்டு தசாப்தங்களாகவே நாட்டில் போலியோ நோயாளிகள் பதிவாகவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய போதும் நாட்டில் போலியோவை ஒழிக்க முடிந்துள்ளதாகவும், இதற்கு ரொடரி அமைப்பின் உதவியே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 107வது ரொடரி இன்டநெசனல் மாநாட்டில் (Rotary International Convention) கலந்து கொண்ட போதே பிரதமர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் இதன்போது மேலும் கூறியதாவது, 1995ம் ஆண்டு…

Read More

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு வௌியிடப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துரை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி, இன்று பிற்பகல் 02.00 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, இலவசமாக மின்சாரம்

இலங்கை மின்சார சபையும் தனிநபர் மின் உற்பத்தியாளர்களும் இணைந்து 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்க தீர்மானித்துள்ளனர். மின்வலு மின்சக்தி அமைச்சர் ரன்ஜித் சியம்பளாபிட்டியவின் பணிப்பின் பேரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள வீடுகளின் சேதங்கள் தொடர்பாக கணிப்பீடுகள் நடைபெற்று வருவதுடன் மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கு இலங்கை தனியார் மின் உற்பத்தியாளர் நிறுவனம் 7 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட…

Read More

வெளிநாட்டிலிருந்து வரும், இறைச்சிகளுக்கு வரிச் சலுகை

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி வகைகளுக்கு வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல இறைச்சி வகைகளுக்கான வரிகளை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் மிருக வதை மிருகக்கொலைகளை வரையறுக்கும் நோக்கில் இந்த வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது. சர்வதேச வர்த்தக விவகார அமைச்சின் பரிந்துரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எதிர்வரும் வாரங்களில் இந்த வரிச் சலுகை பற்றி அறிவிக்கப்பட உள்ளது. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, செம்மறியாட்டு இறைச்சி மற்றும் வாத்து இறைச்சி…

Read More