Headlines

மாலைதீவு முன்னாள் அதிபர் இங்கிலாந்தில் தஞ்சம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நண்பரான, மாலைதீவு நாட்டின் முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத் இங்கிலாந்து நாட்டில் அகதியாக தஞ்சம் அடைந்துள்ளார். மாலைதீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (49), கடந்த 2008-ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார். 2012-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்த நஷீத், ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் பறிகொடுத்தார். அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத்…

Read More

ஜெயா ஆட்டம் ஆரம்பம் – 500 மதுபான சாலைகளுக்கு பூட்டு

தமிழக முதல்வராக 6 ஆவது முறையாக பதியேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தனது பதவி பிரமாணத்தின் பின்னர் புதிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். விவசாய கடன் தள்ளுபடி, மதுபான சாலைகள் குறைப்பு உள்ளிட்ட உத்தரவுகள் அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக முதல்வராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) ( நேற்று) பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில்…

Read More

மாவட்ட புற்றுநோய் சங்கத்திற்கு நன்கொடை

இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைச் சங்கத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நிர்மாணிப்பாளர்கள் நலன்புரிச் சங்கத்தினால் ரூபாய் ஒரு இலட்சம் நன்கொடையாக வழங்கும் நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை (23) மாமாங்கத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் வை. தர்மரட்ணம் கருத்து தெரிவிக்கும் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்று நோயின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் நோயாளர்களின் நலன் கருதி கொழும்பு மற்றும் மஹரகம புற்று நோய்…

Read More

வருடாந்த மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர்!

கொழும்பு மேல்மாகாண நுண்வரைகலை மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய சமாதான மன்றத்தின் (ஜாதிக சமகி சங்கமய) வருடாந்த மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வானது இலங்கை குடியரசு தினம் (மே 22), சர்வதேச உயிரியல் பல்வகைமை தினம் (மே 21), உலக கலாச்சார தினம் (மே, 22) ஆகிய தினங்களையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுக்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ரன்பண்டா ஜெயவர்தன, வரவேற்றார். இதேவேளை,…

Read More

மண்சரிவு பாதிப்பு பகுதி அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்

மண் சரிவுக்குள்ளான பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துமாறும், குடியிருப்புக்கு பொருத்தமற்றது என அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிட்ட இடங்களில் குடியிருக்க எவருக்கும் எவ்வித அனுமதியும் வழங்கப்படக் கூடாதெனவும் ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவு வழங்கியுள்ளார். எதிர்பாராமல் முகங்கொடுத்த அவசர அனர்த்த நிலைமையை முகாமைப்படுத்தி மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்ட அவசர அனர்த்த செயலணி ஜனாதிபதி தலைமையில் நேற்று(23) மாலை ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் விடயங்கள் தொடர்பான…

Read More

நள்ளிரவில் உடைந்த படகில் பயணித்து மல்வானை மக்களை றிஷாத் சந்திப்பு

-நாச்சியாதீவு பர்வீன்- பாதுகாப்பற்ற உடைந்த படகில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மள்வானை காந்திவளவ மற்றும் ஆட்டா மாவத்தை மக்களை சந்தித்து அந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுத்தீன். கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலையினாலும்,தொடர்மழையினாலும் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மல்வானையும் அடங்கும் மல்வானையில் ரக்‌ஷபான,காந்திவளவ,ஆட்டா மாவத்தை,சக்கீனாபுர போன்ற பிரதேசங்கள் முற்றாக நீரினால் சூழப்பட்டிருந்தது.அதிலும் சக்கீனாபுர மற்றும் ஆட்டா மாவத்தை போன்ற பிரதேசங்கள் நூறு விகிதம் வெள்ளத்தினால் மூழ்கிய பிரதேசமாகும். இந்தப்பிரதேசத்திற்கு எந்த…

Read More

கருங்கல் வெடிப்பு: 30 குடும்பங்கள் இடம்பெயர்வு

குருநாகல், வெவகெதரப் மலையிலுள்ள பாரிய கருங்கல் வெடித்ததால் அப்பதியிலுள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதகாரிகள் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை (23) இரவு, பெரிய சத்தம் கேட்டதையடுத்து பிரதேச வாசிகள் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் அறிவித்திருந்தனர். அதன் பின்னரே, அப்பதியிலுள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்தவர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Read More

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு முஸ்லிம் மகளிர் பாடசாலை பரிசளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாத காரணத்தினால் மட்டும் உயர் கல்வியைத் தொடரக்கூடிய சந்தர்ப்பத்தை முடக்கிவிடக் கூடாது. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் பின்னரும் அனைத்து மாணவ மாணவியரும் பாடசாலையில் தொடர்ந்தும்…

Read More

சட்டவிரோத குடியிருப்புக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி அதிரடி!

இனிவரும் காலங்களில் இலங்கையின் எந்தவொரு இடத்திலும் சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். அண்மையில் கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் உள்ள வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்களில் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் ஆக்கிரமித்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் நீர் வழிந்தோடுவதற்கான எந்தவொரு வழியும் அங்கு விட்டு வைக்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் வெள்ள சேதம் அதிகரித்திருந்தது. இதனைக் கருத்திற் கொண்டு இனிவரும் காலங்களில் எந்தவொரு இடத்திலும் யாருக்கும்…

Read More

இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகள் வரிசையில் துருக்கியும் இணைவு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களுக்கு பல உலக நாடுகள் நிவாரணங்களை வழங்கி வருகின்றன. மேலும் பல நாடுகள் நிவாரணங்களை வழங்க முன்வந்துள்ளன. இந்த நிலையில் துருக்கியின் செஞ்சிலுவை சங்கம் அவசர உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் கோரிக்கைக்கு அமையவே இந்த நிவாரண உதவிகளை வழங்க துருக்கி அரசாங்கமும் முன்வந்துள்ளது. துருக்கியின் மனிதாபிமான அமைப்பாக திகழும் செஞ்சிலுவைச் சங்கமானது இலங்கைக்கு கூடாரங்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் துருக்கியின் இந்த உதவிக்கு…

Read More

அநுராதபுரம் திசா வாவியில் குளிப்பதற்கு தடை!

அநுராதபுரத்திலுள்ள திசா வாவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் டீ.பீ.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார். குறித்த வாவியில் பொதுமக்கள் குளிப்பதால் நீரானது அசுத்தமடைவதாக திசா வாவியை பாதுகாக்கும் அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக நன்றாக ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக டீ.பீ.ஜி.குமாரசிறி மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த அறிவிப்பினால் வாவியை அண்மித்து வசிப்போர் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனினும் அவர்களுக்கு மாற்று திட்டம் ஒன்று ஏற்படுத்திக்…

Read More

கொழும்பில் சேதவிபரங்கள் குறித்த கணக்கெடுப்பு ஆரம்பம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் இன்றும் நாளையும் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்போது வீட்டின் குடியிருப்பாளர்கள் தத்தமது வீடுகளில் தங்கியிருப்பதுடன், இழப்புகள் குறித்த சரியான விபரங்களை கணக்கெடுப்பாளர்களிடம் வழங்குமாறும் கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்போது சேகரிக்கப்படும் விபரங்களைக்கொண்டே வீடுகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளது. எனினும் கொலன்னாவை , வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் இராணுவத்தினர் இன்று சுத்திகரிப்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர். இதனை முன்னிட்டு எந்தவொரு குடியிருப்பாளரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப…

Read More