Headlines

இந்த இழப்பை எவ்வாறு சீர் செய்யப் போகின்றோம்?

-சுஐப் எம்.காசிம் – மல்வானை பிரதேசத்தில் உள்ள மல்வானை, லக்சபான, விதானகொடை, தோட்டம், காந்தியாவள, பள்ளம் ஆகிய பிரதேசங்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று மாலை(22/05/2016) விஜயம் செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தாழ்நிலப் பிரதேசங்களையும் பார்வையிட்டார். அத்துடன் நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினார். லக்சபான ஜும்மா பள்ளியில் இடம்பெற்ற நிவாரண ஒருங்கிணைப்புப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர், அங்கு குழுமியிருந்த ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுடனும் கலந்துரையாடினார். “வெள்ளம் வரும்போது இந்தப் பிரதேசம்…

Read More

வெள்ள அனர்த்தம்: யாப்பா – றிஷாத் பேச்சு

இன்று காலை (22/05/2016) அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, தான் அவதானித்த மக்கள் படும் கஷ்டங்களை அமைச்சரிடம் விவரித்தார். பாதிக்கப்பட்ட முகாம்களில் மற்றும் வீடுகளில் தங்கியிருக்கும் அகதிகள் பலருக்கு முறையான நிவாரணங்கள் கிடைக்காமை தொடர்பிலும் அமைச்சர் யாப்பாவிடம் சுட்டிக்காட்டினார். பிரதேச செயலகங்கள் இந்த மக்களின் விடயங்களில் நேரடிக் கவனம் செலுத்தும் வகையில் உரிய அதிகாரிகளையும், அலுவலர்களையும் அந்த இடங்களுக்கு அனுப்பிவைத்து நிவாரணப் பணிகளை சீர்படுத்துமாறு வேண்டினார்….

Read More

இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் அரசு புலமைப்பரிசில்!

இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் சென்று இலவசமாக படிப்பதற்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. குறித்த விண்ணப்பங்கள் 2016ஆம் ஆண்டுக்காக கோரப்பட்டுள்ளன. க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் கொழும்பிலுள்ள தனது உயர் ஸ்தானிகராலயத்தின் மூலம் இந்தப் புலமைப் பரிசில்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையிலிருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இந்தப் புலமைப் பரிசிலைப் பெற்று…

Read More

சேதமடைந்த சான்றிதழ்களை விரைவில் மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்த பரீட்சை சான்றிதழ் பத்திரங்களை விரைவில் மீண்டும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளருக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார். தமது பிரதேசத்தின் கிராம சேவர்கள் மூலம் இதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

அனைத்து சேவைகளையும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்வோம்!

அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நலன்புரி சேவைகளுக்காக நிறைவேற்றக் கூடிய அனைத்து செயற்பாடுகளையும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட வெல்லம்பிடிய, மீதொட்டமுல்லை மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிகளிலுள்ள மக்களின் நலன்கள் குறித்து ஆராய, இன்று பகல் ஜனாதிபதி அங்குள்ள தற்காலிக முகாம்களுக்கு விஜயம் செய்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இதேவேளை, இச் சந்தர்ப்பத்தில் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து மக்கள் ஜனாதிபதியிடம் கூறினர். விரைவாக இந்த விடயங்கள்…

Read More

நாளை விடுமுறை இல்லை

அரசாங்க ஊழியர்களுக்கு நாளை திங்கட்கிழமை விடுமுறை இல்லை என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. இதேவேளை, பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், இயற்றை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மாத்திரம் அந்தந்த கல்வி வலய பணிப்பாளரிடம் அனுமதி பெற்று விடுமுறை வழங்குவதற்கு பாடசாலை அதிபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Read More

ரூ.36 மில். உதவி வழங்கும் அமெரிக்கா

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக மேலும் 36 மில்லியனை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 7.2 மில்லியன் ரூபாயை அமெரிக்கா வழங்கியிருந்த நிலையில் மேலதிகமாக இந்த பணத்தை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்தத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது

Read More

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு, சுற்றலா போகாதீர்கள்..!

அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு ஒரு சிலர் சுற்றுலாக்களை மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட செல்லும் நபர்களினால் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அரநாயக்க பகுதிக்கு பலர் வெறுமனே ஒர் சுற்றலா செல்வதனைப் போன்று சென்று வருவதாகவும் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் எடுத்துச் செல்வதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நபர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெய்யாகவே நிவாரணங்களை வழங்குவோருக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More

கொழும்பில் தோற்றுநோய் ஏற்படும் ஆபத்து

கொழும்பு மாநகர் முழுவதும் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதோடு, பிரதான வீதிகள், வீடுகளுக்கருகில் துர்நாற்றம் வீசுகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மழை வெள்ளத்தாலும், மண்சரிவினாலும் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில் கொழும்பு மாநகர மக்கள் குப்பை மலைகளால் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். கொழும்பு மாநகர், ஒருகொடவத்தை, நவகம்புர, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, புதுக்கடை, தெமட்டகொடை, பொரளை உட்பட கொழும்பு மாநகரின் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.  இதனால் அப்…

Read More

பாதிக்கப்பட்ட மக்களிக் கண்ணீர் துடைக்க புறப்படுவோம்…

– ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி), இறக்காமம் –  உலக வாழ்வில் பல விதமான இன்னல்களையும், மகிழ்சிகளையும் இறைவன் எமக்கு வழங்கி அதில் பல விதமான படிப்பிணைகளையும்,சோதனைகளையும் ஏற்படுத்தி எமது உள்ளங்களின் ஈமானிய தரத்தினை மதிப்Pடு செய்து பல முடிவில்லா வெகுமதிகளை வழங்குவதற்காகத்தான் நாளாந்தம் உலகின் பல பாகங்களிலும் இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தி மனித புனிதர்களின் ஈமானிய வலுவினை இறைவன் வென்றெடுக்கிறான். இந்தவகையில் அன்மையில் எமது இலங்கைத் தாயகத்தின் தலைநகரின் சில பகுதிகள் உற்பட பல பிரதேசங்களிலும் வெள்ளம்,மண் சரிவு…

Read More