Headlines

யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் இஸ்லாத்தைத் தழுவிய விதம். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம். ‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம். மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே – அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும் ‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்)…

Read More

மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி

பதுளை, மடுல்சின்ன கல்வுல்ல மெட்டிகாத்தன்னை பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (10) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 49 வயதான இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். கணவனும் மனைவியும் வீட்டில் இருந்த போது மின்னல் தாக்குதலுக்கு இழக்காகி மனைவி இறந்துள்ளதாகவும் கணவனுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன்…

Read More

உயிருடன் பிடிக்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு!

– க.கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து நேற்று (10) உயிருடன் மீட்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்ட சிறுத்தைக் குட்டியொன்று உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று காலை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தைக் குட்டியொன்று தேயிலைச் செடிக்குள் பதுங்கி இருப்பதைக் கண்டு உயிருடன் பிடித்துள்ளனர். நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த சிறுத்தை குட்டியை…

Read More

பத்து இலங்கையர்கள் மலேசியாவில் கைது

போலி கடவுச் சீட்டுடன் பத்து இலங்கையர்கள் மலேசியாவில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஏனைய நாட்டைச் சேர்ந்த 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய நாட்டு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட் திடீர் சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் ஜெனிவாவிற்கு செல்ல இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கத்தின், ரமழான் மலிவு விற்பனை

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கம் ஏற்பாடு செய்துள்ள மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்யும் “ரமழான் மலிவு கஸானா சந்தை 2016”  இம்மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30மணி முதல் மாலை 5.00மணி வரை  தெஹிவலை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கத்தலைவி தேசமான்ய ஹாஜியானி மக்கியா முஸம்மில் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் இலங்கைக்கான மலேசிய தூதுவர் வொன் ஸெய்திஅப்துல்லாஹ்வும் அன்னாரின் பாரியாரும் பிரதம அதிதியாக…

Read More

பனாமா ஆவணங்கள் குறித்து தொடர்ந்தும் விசாரணை

பனாமா ஆவணங்களில் வௌியிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, ட்ரான்ஸ்பரன்ஸி இன்டநெசனல் அமைப்பு தெரிவித்துள்ளது. வரி செலுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, சர்ச்சைக்குரிய பனாமாவின் மொசெக் பொன்சேகா நிறுவனத்தில் பணப் பதுக்கலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் அண்மையில் தகவல் வௌியிடப்பட்டு சர்சையை ஏற்படுத்தியது. இதில், இலங்கையுடன் தொடர்புடைய மூன்று வௌிநாட்டு நிறுவனங்கள், 60க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும் 53 ஆவணங்கள் பற்றிய தகவல்களும் வௌியிடப்பட்டன. எதுஎவ்வாறு இருப்பினும் குறித்த பணம் சேமிக்கப்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வது…

Read More

கழிவுகளை புத்தளத்தில் கொட்டும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்- அமைச்சர் றிஷாத்

கொழும்பு நகர்ப் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை புத்தளத்திற்கு கொண்டு சென்று அங்கு கொட்டப்படுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை நிறுத்துமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, காலாகாலமாக இந்தக் குப்பைகள் கொழும்பின் மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் கொட்டப்பட்டு வருவதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை நாம் கண் கூடாக காண்கின்றோம். மீத்தோட்டமுல்ல பிரதேசத்தில் இந்தக் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்தப்பிரதேச மக்கள் படுகின்ற அசௌகரியங்களும் அவஸ்தைகளும் சொல்ல முடியாதவை. அதற்கு மாற்றுத்தீர்வு ஒன்று…

Read More

மலேசிய சர்வதேச பங்கோர் டயலொக் மாநாட்டுக்கு அமைச்சர் றிசாத்துக்கு அழைப்பு!

மனித சமுதாயத்தில் எதிர்நோக்கப்படும் சிக்கல்களுக்கும்,  பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து அவற்றை எவ்வாறு தீர்ப்பது? என்பது தொடர்பிலும், நிலைபேறான அபிவிருத்தி சம்பந்தமாகவும், மலேசியாவில் எதிர்வரும் செப்டம்பர் 05 – 07 வரை நடைபெறவுள்ள, பங்கோர் டயலொக் (Pangkor Dialogue) சர்வதேச மாநாட்டில், பிரதம விருந்தினராகப் பங்கேற்குமாறு கோரி, மலேசிய ஏற்பாட்டாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீனை சந்தித்து அழைப்பு விடுத்தனர். கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இன்று (11/05/2016) இடம்பெற்ற இந்த சந்திப்பில்,…

Read More

 சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

கடந்த வருடம் காலமான, மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தலைமையிலான ஐவரடங்கிய குழு, கொழும்பு பிரதான நீதவானினால் நியமிக்கப்பட்டுள்ளது. டொக்டர் அஜித் தென்னகோன், டொக்டர் குமுதினி ரணதுங்க, டொக்டர் நிமாலி பெர்னாண்டோ மற்றும் டொக்டர் இரேஷ் விஜயமன்ன ஆகியோரே ஏனைய உறுப்பினர்களாவர்.

Read More

லண்டனுக்கு பயணமானார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) காலை 10.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி பயணமானார். லண்டனில் நாளை ஆரம்பமாக உள்ள ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட குழுவினருடன் ஜனாதிபதி, எமிரேட்ஸ் விமானச் சேவைக்கு சொந்தமான நுமு651 என்ற விமானத்தில் பயணமானார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் இ-மோட்டர் சேவை

உலகில் பெரும்பாலான நாடுகளில் செயற்படுத்தப்படும் இ-மோட்டர் முறையை தற்போது இலங்கையிலும் அறிமுகம் செய்யவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் வீட்டில் இருந்தவாறே வாகன அனுமதிபத்திரத்தினை தொலைபேசியின் மூலம் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளும் முறையே இ-மோட்டர் ஆகும். திருகோணமலையில் மோட்டார் வாகன திணைக்களத்தின் காரியாலயம் ஒன்றை திறந்து வைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Read More

பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் யோஷித!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் வாக்கு மூலமொன்றினை வழங்க சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிலையம் தொடர்பில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்கு நேற்றும் பொலிஸ் நிதி குற்றப் பிரிவிற்கு யோஷித சென்றமை குறிப்பிடத்தக்கது.

Read More