Headlines

கடன்தொகையை அதிகரித்தது ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கைக்கான கடன்தொகையை மேலும் அதிகரிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநயக்க தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் ஜேர்மனில் நடைபெற்ற 49ஆவது நிதி அமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு இன்யைதினம் (7) நாடுதிரும்பிய நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க குறித்த மாநாடு தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

மீண்டும் டெங்கு அபாயம்

காலி மாவட்டத்திகுட்பட்ட பிரதேசங்களில் டெங்கு தொற்றும் அச்சுறுத்தல் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அக்மீமன, பத்தேகம, அம்பலாங்கொட மற்றும் அமதுவ ஆகிய பிரதெச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தொற்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கட்சிக்குள் பிளவு இல்லை! அனுரகுமார

தமது கட்சிக்குள் பிளவு என்ற செய்தியை ஜே.வி.பி மறுத்துள்ளது. கட்சிக்குள் எவ்வித பிளவுகளும் இல்லை என்று கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில் இந்த கருத்தினை திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் கட்சியின் தலைமை பதவியில் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும் என்று கட்சியின் முன்னிலை தலைவர்களான டில்வின் சில்வா மற்றும் லால் காந்த கோரி வருவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை அனுரகுமார திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.

Read More

ரயிலில் மோதி இரு இளைஞர்கள் பலி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு கல்வியங்காட்டைச் சேர்ந்த மோகனராசா நிசாந்தன் (வயது 17), திருநெல்வேலியைச் சேர்ந்த பரமநாதன் ரெஜராம் (18)  ஆகிய  இரு இளைஞர்கள், இன்று சனிக்கிழமை (07) உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகாமையில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இரு இளைஞர்களும் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நிலையிலே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.  இச்சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு…

Read More

செல்லப்பிராணி நாய்களை பதிவு செய்யாவிட்டால் 10ஆயிரம் ரூபா தண்டம்

கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியில் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்ப்படவுள்ளது. அதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது. குறித்த வேலைத்திட்டம் மாகண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின்கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நாய்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்யத் தவறின் 10ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் மாகண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் வினவியபோது, கட்டாக்காலி நாய்களின்…

Read More

மஹிந்த அணியில் எனக்கு எதிராக சூழ்ச்சி: சஜின்வாஸ்

எனக்கு எதி­ராக பாரிய சதித்திட்டம் ஒன்று கூட்டு எதிர்க்கட்சி பக்கம் இருந்து முன்­னெடுக்­கப்­ப­டு­கிறது. அரச சாட்சியா­க மாறுவதற்கு நான் குற்­ற­வா­ளியல்ல. பாம்பின் கால் பாம்­ப­றி­வது போன்று மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சியில் கட­மையை தவிர வேறு ஒன்றும் நான் செய்யவில்லை என்று முன்னாள் வெளிவிவகார கண்­கா­ணிப்பு எம்.பி. சஜின் டி வாஸ் குண­வர்­த் தன தெரி­வித்தார். ஊட­கங்கள் எனக்கு எதி­ராக பாரிய குற்­றச்­சாட்­டுக்­களை எவ்­வி­த­மான அடிப்­படை தன்­மை­யு­மின்றி முன்­வைக்­கின்­றன. அவ்­வாறு பாரி­ய­ள­வி­லான குற்­றத்தை நான் செய்­தி­ருந்தால் என்னை…

Read More

நாய்களுக்கும் வரி

வெள்­ளைக்­காரன் ஆட்சி மீண்டும் நாட் டில் தலை­தூக்­கி­யுள்­ளது. நாய்­க­ளுக்­கான அனு­மதிப் பத்­தி­ரத்­திற்கும் 10000 ரூபா செலுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது எனத் தெரி­வித்த பொது எதிர்க்­கட்­சி­யினர். சிறு­நீ­ரக நோயா­ளர்­களின் இரத்தப் பரி­மாற்றம் செய்யும் கட்­ட­ணத்­திற்கும் புற்று நோயா­ளர்­களின் எக்ஸ்­ரேக்கும் 15 வீத வற்­வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்றும் குற்­றம்­சாட்­டி­யது. பாரா­ளு­மன்ற குழு அறையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற பொது எதி­ர­ணி யின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மாநாட்­டி­லேயே இக்கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டன. பொது எதி­ர­ணி­யினர் இங்கு மேலும் கருத்து வெளியி­டு­கையில்; இலங்­கை­யர்­க­ளிடம் அனைத்து…

Read More

பொது மன்னிப்புக் காலம்: 423 துப்பாக்கிகள் கிடைக்கப்பெற்றுள்ளன

பொதுமக்கள் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் முடிவடைந்துள்ளதாகவும் இதுவரை 423 துப்பாக்கிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயன்த ஜயவீர தெரிவித்தார். சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க கடந்த 25ஆம் திகதி வழங்கப்பட்ட கால எல்லை நேற்றுடன் முடிவடைந்துள்ளது. சட்டவிரோதமான முறையில் உரிய அனுமதி பத்திரம் எதுவுமின்றி ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்கள் அந்த ஆயுதங்களை பொலிஸ் நிலையங்கள் அல்லது பிரதேச செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என அமைச்சு அறிவித்திருந்தது….

Read More

உயிருடன் பிடிக்கப்பட்ட மரை

பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்டப் பகுதியில் உயிருடன் மரை ஒன்றை  தோட்ட பொது மக்களும் பொலிஸாரும் இணைந்து பிடித்துள்ளனர்.  உணவு தேடிவந்த குறித்த மரையின் கால் ஒன்று உபாதைக்குள்ளாகியிருந்த நிலையிலேயே பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மரை தற்போது நல்லதன்னி வனலிலங்கு நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Read More

லண்டனின் நகர மேயராக முதல் இஸ்லாமியர்

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானைச் சேர்ந்த பஸ் சாரதி ஒருவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.லண்டனில் முஸ்லிம் ஒருவர் மேயராக தெரிவு செய்யப்படுகின்றனமை இதுவே முதல் முறையாகும். பிரதிநிதிகள் தேர்தல் மற்றும் சில நகரங்களுக்கான மேயர் பதவிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் லண்டன் நகர மேயர் பதவிக்கான தேர்தலில் பிரபல கோடீஸ்வரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெசிமாவின் சகோதரருமான ஸக் கோல்ட் ஸ்மித் போட்டியிட்டார்….

Read More