Headlines

புதையல் தோண்டிய ஒன்பது பேர் கைது

புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒன்பது பேரைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வண்ணாத்திவில்லு காட்டுப்புலியன்குளம் பிரதேசத்தில் டேற்கொண்ட சுற்றவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதோடு அங்கிருந்த மற்றொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

எரிபொருளுக்கான கேள்வி அதிகரிப்பு

புத்தாண்டு நிகழ்வுகள் இடம்பெற்ற கடந்த சில தினங்களில் வரலாற்றில் முதல் முறையாக அதிகமான எரிபொருள் கேள்வி நிலவியதாக பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் இருந்தமையை குறிப்பிடத்தக்கது.

Read More

ஒபாமாவை சந்திப்பார் மைத்திரி

ஜீ 7 மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜப்பான் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் இடையில்  சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ௪ப்பானின் ஷிமா நகரில், மே மாதம் 26, 27 ஆம் திகதிகளில், ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினர்களாக, பங்கேற்குமாறு ஜனாதிபதி…

Read More

தெற்கு அதிவேக பாதையின் மூலம் பாரிய வருமானம்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை மட்டும் பயணித்த 57,023 வாகனங்கள் மூலம் 17.7 ரூபா மில்லியன் பாரிய வருமானம் கிடைத்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read More

சாரதிகளுக்கு ஓர் எச்சரிக்கை.!

வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட சாரதிகளுக்கு புள்ளியிடும் நடைமுறை இந்த வருடம் முதல் அமுல்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த புள்ளியிடும் நடவடிக்கைக்கு ஏற்பட்ட நடைமுறை சிக்கல்கள் காரணமாகவே அதனை நடைமுறைப்படுத்த முடியாது போனதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த நடைமுறை சிக்கல்களை சரி செய்துக் கொண்டு இந்த ஆண்டு முதல் அதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். புள்ளியிடும் நடைமுறையின் ஊடாக சாரதிகளினால் இழைக்கப்படுகின்ற தவறுகளுக்கு புள்ளிகள் இடப்படுவதுடன், அந்த புள்ளி…

Read More

விரைவில் சுரங்கப்பாதை நிர்மாணம்.!

நீண்ட காலமாக கண்டி நகர பிரதேசங்களில் நிலவி வரும் வாகன நெருக்கடிகளைப் போக்குவதற்கு விரைவில் தென்னக்கும்பர பிரதேசத்திலிருந்து கெட்டம்பே வரையில் சுரங்கப்பாதை ஒன்றினை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்‑ ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

Read More

938 பேர் வைத்தியசாலையில்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் வெவ்வேறு விபத்து சம்பவங்களில் காயமடைந்த 938 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பயிற்சிப் பிரிவின் தாதி புஷ்பா ரம்யானி டி சொய்சா கூறினார். எவ்வாறாயினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அவர் கூறினார்.

Read More

கொழும்பு வருவதற்கு மேலதிக சேவை.!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களுக்கு மீண்டும் செல்வதற்காக மேலதிக பஸ் சேவையை இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், சொந்த இடங்களுக்கு சென்ற பொது மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்கு விசேட புகையிரத சேவை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. பஸ் சேவைகளில் எவ்வித பிரச்சினைகள் காணப்படுமாயின்  1955, 011 1333…

Read More

அமெரிக்கா கடற்படையுடன் இலங்கை கடற்படை கூட்டு பயிற்சி

இலங்கை கடற்படையினரும் அமெரிக்கா கடற்படையினரும் இணைந்து கூட்டு பயிற்சியிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப் கூட்டு பயிற்சியில் இலங்கை கடற்படையில் 20 பேர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் போது இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் ஆயுத உபகரணங்களை நீக்குவது தொடர்பாக பயிற்சி வழங்கப்படுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More