Headlines

புதிய பொலிஸ் மா அதிபர்..?

புதிய பொலிஸ் மா அதிபர் தெரிவுக்காக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மூவருடைய பெயர்கள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகிய மூவருமே இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களாவர்.

Read More

நாடளாவிய ரீதியில் “கூகுல் லூன்” இணைய வசதி..!

இலங்கையில் இணைய வசதியினை விஸ்தரிப்பதற்காக நாடுபூராகவும் கூகுல் இணைய பலூன் வசதியினை ஏறபடுத்தவுள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதோடு இலகு இணைய தரவிறக்கம் மற்றும் அதிவேக இணைய வசதியினை ஏற்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

அதிவேக பாதை போக்குவரத்து பாதிப்பு.!

தெற்கு அதிவேக பாதையின் கொடகம நுழைவுச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தின்போது, அதி சக்தி வாய்ந்த மின் கம்பம் ஒன்று பாதை நடுவில் உடைந்து விழுந்துள்ளது. அதிக வேகத்துடன் வந்த மோட்டார் வண்டி மின் கம்பத்தில் மோதியதனால் கம்பம் இரண்டாக உடைந்து பாதையில் விழுந்துள்ளது. இதனால், பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் ஒரு பக்கமாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இப்பிரதேசத்தின் மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Read More

இலங்கையில் மின்சார ரயில்..!

மின்சாரத்தின் உதவியால் பயணிக்கக் கூடிய ரயில் சேவையை இலங்கையில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்த திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். பாணந்துறை நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாடு திரும்பினார் பிரதமர்.!

சீனாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 12.15 மணியளவில் நாடு திரும்பியுள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பித்தமை, அதன் அருகில் விஷேட பொருளாதார வலயத்தை நிறுவுதல் போன்ற தீர்மானங்களுக்கு, சீனப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

150,000 ரூபா போனஸ் வழங்கினால் 1,400 மில்லியன் நட்டம்

சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைமுக அதிகாரசபை தொழிற்சங்கங்கள் கோரும் 150,000ரூபா போனஸ்தொகை வழங்கப்பட்டால் துறைமுக அதிகார சபைக்கு 1,400 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என்று மேற்படி அதிகார சபையின் நிர்வாக பணிப்பாளர் சரத் குமார தெரிவித்தார்.

Read More