Headlines

பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தற்போதைக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்த நிகழ்ச்சி நிரல்கள் எதுவும் கிடையாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் இலங்கை விஜயத்தின் பின்னர் பான் கீ மூன் இலங்கை விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைக்கு பான் கீ மூன்…

Read More

தென்பகுதி மீனவர்களுக்குத் தடை

முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடும் புதிய தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று மீன்பிடி அமைச்சர் மஹிந்த சமரவீர நேற்று முல்லைத்தீவிலுள்ள மீன்பிடி திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த சமரவீர நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார். அப்போது வன்னி மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு கடற்பரப்பில் தென் பகுதி மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் முல்லைத்தீவைச்…

Read More

போதைப் பொருள் வலையமைப்பின் உள் நாட்டு முகவர்களைத் தேடி வேட்டை

இலங்கையின் தென் கடல் பிராந்தியத்தில் ஈரான் கப்பலொன்றிலிருந்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் ஒன்றிணைந்த நடவடிக்கையினால் கைப்பற்றப்பட்ட 110 கோடி ரூபா பெறுமதியான 110 கிலோ ஹெரோயின் தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் போதைப் பொருள் கடத்தலானது இலங்கை – பாகிஸ்தான் போதைப் பொருள் வலையமைப்பொன்றினுடையது என தற்போதைய விசாரணைகளில் உறுதியாகியுள்ள நிலையில் இந்த சட்ட விரோத வர்த்தகத்தின் இலங்கை முகவர்களைத் தேடி தற்சமயம் இரகசிய விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

Read More

வற் வரி மறு அறி­வித்தல் வரை நிறுத்­தி­வைப்பு.!

ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் 15 சதவீத­மாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வி­ருந்த பெறு­மதி சேர் வரி மறு அறி­வித்தல் வரை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில், உள்­நாட்டு இறை­வரித் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் கல்­யாணி தஹ­நா­யக்க வெள்­ளிக்­கி­ழமை வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் இந்த வரி அதி­க­ரிப்பு நிறுத்­தப்­பட்­டுள்ள விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய, மறு அறி­வித்தல் வரை முன்னர் இருந்­தது போன்று 11 சதவீத­மான பெறு­மதி சேர் வரியே நடை­மு­றையில் இருக்கும் என்றும், யாரும் 15 சதவீத­மாக வரியை அறி­விடக் கூடாது…

Read More

பிரதமர் சீனாவுக்கு விஜயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 6 ஆம் திகதி புறப்பட்டுச் செல்கின்றார். சீனப் பிரதமர் லீ கேக்கியாங்கின் அழைப்பை ஏற்று சீனா செல்லும் பிரதமர் 9 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார். இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்தல் வர்த்தக முதலீடுகள் உட்பட பல விடயங்கள் தொடர்பான பேச்சுவார்ததைகளில் பிரதமர் கலந்து கொள்வார்.

Read More

குமார் குணரட்னத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

முன்னிலை சோசலிசக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதோடு அரசியல் பழிவாங்கள் அடிபடையில் திட்டமிட்டே அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதா முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. எவ்வாறாயின் அரசாங்கமானது குமார் குணரட்னத்தின் குடியுரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுருத்தியுள்ளது. முன்னிலை சோசலிச கட்சியினரினால் இன்றைய தினம் கொழும்பில்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் ஏற்பாட்டாளர் புபுது ஜெயகொட மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read More