மக்கள் மத்தியில் குழப்பம்
நாடளாவிய ரீதியில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையினால் அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை சில மணிநேரங்களில் மின் வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சு நிராகரித்தது. இதனால் நேற்று மாலை நாட்டு மக்களிடையே குழப்பகரமான நிலை ஏற்பட்டது. மின்வெட்டு அமுலாகுமா அமுலுக்கு வராதா என்ற கேள்விகளுடன் மக்கள் குழப்பத்துடன் காணப்பட்டனர். நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு மின்துண்டிப்பு முன்னெடுக்கப்படும் என நேற்று மாலை இலங்கை மின்சார சபையினால் விஷேட மின் வெட்டு பட்டியல்…
