Headlines

ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனையொன்றை

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த பொது எதிரணியினர் இன்று வியாழக்கிழமை சபாநாயகர் கருஜயசூரியவிடம் நம்பிக்கையில்லாப் பிரேரனையொன்றை கையளித்தனர்.

Read More

ஜோனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

காணி, சுற்றுலாவளத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

Read More

75 இலட்சம் ரூபா நாணயத்தாள்களுடன் இந்திய பிரஜை கைது

75 இலட்சம் ரூபா இலங்கை நாணயத் தாள்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று அதிகாலை 4.10 மணியளவில்  சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய், சார்ஜாவிற்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 44 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரணமான வெப்ப நிலை தொடர்பில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் டாக்டர் ருவான் சில்வா கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்ப்பிணி பெண்களின் உடல் வெப்பநிலை 38 பாகை செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயர்வடைந்தால் கரு கலையக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் கர்ப்பிணிகள் 4 மணித்தியாலத்திற்கு மேல் இருந்தால் அது கருவில் இருக்கும் சிசுவைப் போன்றே தாய்மாரையும் பாதிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனவே, அதிக வெப்ப நிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களை…

Read More

மைத்திரி சிங்­கள மக்­களை கவ­னிப்­ப­தில்லை.!

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது தமிழ் உற­வி­னர்­களை பார்க்க மாதம் ஒரு­முறை யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொண்டு வரு­கின்றார்.வடக்கு மக்கள் மீதான நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கவ­னிப்பும் அமோ­க­மா­க­வுள்­ளது. ஆனால் நாட்டில் வாழும் முஸ்லிம், சிங்­கள மக்கள் தொட ர்பில் அவர் சிறிதும் அக்­கறை கொள்­ளா­தி­ருக்­கின்­றா­ரென பொது பல சேனா அமை ப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்….

Read More