Headlines

இன்னும் இரண்டு மாதங்களில் மினி பட்ஜெட்

நடப்பாண்டு வரவு செலவுத்திட்டத்தில் திருத்தம் செய்து மினி பட்ஜெட் இன்னும் இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தினால் எந்தநேரமும் சலுகைகளை வழங்க முடியாது. சலுகை வழங்குவது மாத்திரமே அரசாங்கத்தி வேலை கிடையாது. சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள தருவாயில் பல்வேறுபட்ட திருத்தம் செய்யவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read More

சாரதிகளே ஜாக்கிரதை : வருகிறது புதிய கருவி

போக்குவரத்து விதிகளை அலட்சியம் செய்யும் நீண்ட தூர பஸ் சாரதிகள், கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை நுகர்ந்துள்ளனரா எனக் கண்டுபிடிப்பதற்காக உடனடி போதைப்பொருள் சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வாகனப் போக்குவரத்துப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிரி சேனரத்ன கூறியுள்ளார். மதுபானம் அருந்தும் சாரதிகளை மட்டுமே உடனடியாக அறியக் கூடிய கருவிகள் தற்போது நாட்டில் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நளினி மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி உட்பட நால்வர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நளினி மத்திய பெண்கள் தனிச்சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி கணவன் – மனைவி இருவரும் 15 தினங்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசிக்கொள்வார்கள். இந்தநிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் நளினி அப்பா இறந்ததை தொடர்ந்து 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டு இறுதி அஞ்சலிக்கு சென்று வந்தார்….

Read More

G7 மாநாடு: இலங்கை ஜனாதிபதிக்கு முதன்முறையாக அழைப்பு

G7 மாநாட்டில் பங்கேற்பதற்கு இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு முதன்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேர்மனியில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளதாக பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (17) கொழும்பு அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே G7 மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

நடு வீதியில் திடீரென தடம்புரண்ட கண்டெய்னர்

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி  மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர், பதுளை போகாமடித்தை என்ற இடத்தில்  நடுவீதியில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் சாரதியும் நடத்துனரும் மட்டுமே பயணித்தனர். இருவரும் காயங்களுக்குள்ளாகிய போதிலும் சாரதி ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளை பொலிசார் விபத்து குறித்து  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More

குதிரை பந்தய திடலில் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா குதிரை பந்தய திடலில் பராமரிப்பை நடைமுறையில் உள்ள தனியார் கம்பனியிடம் இருந்து இதற்கு முன்னர் பராமரிப்பை மேற்கொண்ட குறித்த ஒரு நிறுவனத்தின் மேற்பார்வைக்கு ஒப்படைப்பதை எதிர்த்து இன்று 200ற்கும் மேற்பட்ட குதிரை பந்தய திடல் சேவையாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இவ் ஆர்ப்பாட்டம் நுவரெலியா குதிரை பந்தய திடலின் அருகில் உள்ள மத்திய வங்கி கட்டிடத்திற்கு முன்னால் இடம்பெற்றது. இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள ரோயல் தனியார் நிறுவனத்தின் கீழ் நிர்வகிக்க…

Read More

வெளிச்ச வீட்டில் ஏறி பார்வையிடுவதற்கு தடை

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாநகர சபையினால் பராமரிக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு வெளிச்ச வீட்டில் (லைட் ஹவுஸில்) சுற்றுலா பயணிகள், பொது மக்கள் ஏறி பார்வையிடுவதற்கு மட்டக்களப்பு மாநகர சபையினால் சுமார் கடந்த ஒரு வருடங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான காரணம் கடந்ந காலங்களில் மேற்படி வெளிச்ச வீட்டில் ஏறும் பொது மக்களில் சிலரும், இளைஞர்களும் வெளிச்ச வீட்டு உச்சியில் ஏறி கொண்டு தான் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டுவதாகவும், சிலர் குடிபோதையில் வெளிச்ச வீட்டில் ஏறி…

Read More

ஐ.ம.சு.முன்னணியை மகிந்த அமரவீர பலப்படுத்துவார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை சக்திமிக்க கட்சியாக மாற்றுவதற்கு செயலாளர் மகிந்த அமரவீர அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் மகிந்த அமரவீர, நேற்று (16) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்  தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்ததார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், எமது முன்னாள் செயலாளர் விஷ்வ வர்ணபால…

Read More

பாடசாலை மாணவர்களைக் குறிவைக்கும் பாபுல்கள் : சுகாதார அமைச்சு

பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பெருந்தொகை பாபுல்கள், கடந்த இரண்டு மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, கைப்பற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாலைதீவு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து இவை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பாபுல் தொகை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபாலவால் நேற்று பரிசீலனைக்குட்படுத்தப்பட்டது. குறித்த போதைப் பொருள் அடங்கிய பாபுல் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து…

Read More

வெளிநாடு செல்லும் பணிப்பெண்களின் வயதெல்லையில் திருத்தம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லும் இலங்கைப் பணிப்பெண்களின் வயதெல்லையில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வயதெல்லையானது மத்திய கிழக்கு நாடுகளுக்கும், மத்திய கிழக்கு நாடுகள் அல்லாத நாடுகளுக்கும் செல்லும் பணிப்பெண்களுக்காக நடைமுறைப்படுத்தபடவுள்ளது. இதேவேளை, சவுதி அரேபியாவிற்கு செல்லும் பணிப்பெண்களுக்கான வயதெல்லை 25  குவைட், ஜோர்தான், டுபாய், லெபனான், கட்டார், பஹரேன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கான வயதெல்லை 23 இவையே தற்போது நடைமுறையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய…

Read More

பேஸ்புக்கில் அவதூறு ஏற்படுத்தும் கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும்

அரசியல்வாதிகள் தொடர்பில் பேஸ்புக் மூலம் அவதூறு பரப்பும் கும்பல் தொடர்பில் இன்னும் சில நாட்களில் தகவல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (16) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த அமரவீர இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேஸ்புக் கும்பலில் 40 தொடக்கம் 50 வரையான நபர்கள் இருப்பதாகவும், இவர்களுக்கான பணம் வழங்குவதெற்கென சிலர் இருப்பதாகவும்…

Read More

கொழும்பு பங்குச் சந்தை 17 நிமிடங்களுக்கு ஸ்தம்பிதம்

கொழும்பு பங்குச் சந்தை 17 நிமிடங்களுக்கு ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மின்சாரத் தடை காரணமாக நேற்று 17 நிமிடங்களுக்கு கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதன்படி, நேற்று (16) காலை 9.58 முதல் 10.15 மணி வரையில் 17 நிமிடங்கள் பங்குச் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. இந்த 17 நிமிடங்களைத் தவிர்ந்த ஏனைய நேரங்களில் எவ்வித தடையும் இன்றி பங்குச் சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More