Headlines

தொழில் முயற்சியாளர்களை பலப்படுத்தும் பொறுப்பு என்னுடையதாகும் –

அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்களில் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாத்து தேசிய தொழின்முயற்சியாளர்களைப் பலப்படுத்தும் பொறுப்பை தனிப்பட்ட முறையில் தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தேசிய தொழின்முயற்சியாளர்களைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு கொள்கையையும் அரசாங்கம் ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். அண்மையில் (11) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற இளம் தொழின்முயற்சியாளர்கள் சங்கத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஆயிரம் கருத்துக்கள் உருவாகும் இடத்தில் மிகவும் சரியான…

Read More

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் பேரணி

பல்கலைக்கழகத்திற்குள் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நாளை நடாத்தவுள்ளனர். பல்கலைக்கழகத்தினுள் காணப்படும் பல குறைப்பாடுகள் இதுவரை நிவர்த்தி செய்யப்படாமை,கல்வி தனியார் மயப்படுத்தல் மற்றும் பல்கலைக்கழக்திற்குள் பணம் வசூலித்தலை தடுத்தல் போன்ற பிரச்சினைகளை மையப்படுத்தி இந்தப் பேரணி நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் இதுவரை தீர்வினை பெற்றுக் கொடுக்காததாலேயே அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்று திரட்டி இந்த பேரணியை ஏற்பாடு செய்திருப்பதாக அனைத்து பல்கலைக்கழக…

Read More

சிறையில் கைபேசிப் பாவனைக்கு புதிய பாதுகாப்பு முறை

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது சில கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டமையை அடுத்து, சிறைச்சாலையை சூழவுள்ள பகுதியில் கையடக்கத் தொலைபேசிகளை பாவிக்க புதிய பாதுகாப்பு முறையொன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் கைபேசியைப் பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களை புரிய முயற்சிப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற சில கொலைகள், ஆட் கடத்தல்கள் மற்றும் கொள்ளை போன்ற பல குற்றங்கள் சிறைச்சாலைகளுக்குள் உள்ள கைதிகளாலேயே…

Read More

கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் பலி

இந்தோனேசியாவில் கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில், நேற்று (13) சிக்கன் சாப்பிடும் போட்டி ஒன்றை சிக்கன் உணவகமான கே.எப்.சி என்று அழைக்கப்படும் கெண்டகி பிரைட் சிக்கன் நடத்தியது. இந்த போட்டியில் பங்கேற்று கே.எப்.சி சிக்கனை அதிகமாக சாப்பிட்ட 3 நபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த நபர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது, இதையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 45 வயதான அவர் சிகிச்சை…

Read More

மின்சார சபை தலைவரின் இராஜினாமா கடித்ததை ஏற்க மறுப்பு

மின்சார சபையின் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக வழங்கிய கடிதத்தை உரிய அமைச்சர் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவும் ஏற்பட்ட மின்சாரத் தடையை பொறுப்பெற்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தனது பதவியை அநுர விஜயபால இராஜினாமா செய்வதாக அறிவித்தார். எனவே மின்சக்தி அமைச்சருக்கு குறித்த கடிதம் வழங்கிய போது அவர் அதனை மறுத்துள்ளார் தற்போது கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய, அந்த இராஜினாமா கடித்ததை ஏற்க மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More

நான் குற்­ற­வா­ளி­ என்றால், தண்­ட­னையை­ ஏற்­றுக்­கொள்­ளத்­ த­யா­ர் – றிஷாத்

வில்­பத்து பிர­தே­சத்தில் எமது மக்­களோ நானோ காடு­களை அழிக்­க­வில்லை. யானை­க­ளையோ மிரு­கங்­க­ளையோ கொல்­ல­வில்லை. ராவணா பலய அமைப்பின் செய­லாளர் என்னைத் தூக்­கி­லிட வேண்­டு­மென கருத்து வெளி­யிட்­டுள்­ளமை இன­வா­தத்தின் வெளிப்­பா­டாகும் என கைத்­தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார். ராவணா பலய அமைப்பின் செய­லாளர் இத்­தே­கந்த சத்­தா­திஸ்ஸ தேரர் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் வில்­பத்து வன பிர­தே­சத்­தி­லுள்ள காடு­களை அழித்து அங்­குள்ள யானை­களை அழிக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார் என குற்றம் சுமத்­தி­யுள்­ள­மைக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு…

Read More

தென் கொரியாவை கைப்பற்றுவோம்: வட கொரியா மிரட்டல்

வடகொரியா நாடு தனது பக்கத்து நாடான தென் கொரியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதற்காக சமீபத்தில் அணுகுண்டு சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை போன்றவற்றை நடத்தியது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர் ஒத்திகையில் ஈடுபடுகின்றன. இதற்காக இரு நாட்டு படைகளும் கொரிய கடற்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. நாளை போர் ஒத்திகை முழு வீச்சில் தொடங்குகிறது. இந்த நிலையில் வட கொரியா ராணுவம்…

Read More

நிஷாந்தவுக்கு பிணை மறுப்பு

சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர், நிஷாந்த ரணதுங்கவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும், யோசித்த உள்ளிட்ட நால்வருக்கு ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி…

Read More

பாலஸ்தீனிய பெண்ணுக்கு உலகின் சிறந்த ஆசிரியை பரிசு

குழந்தைகளுக்கு விளையாட்டினூடே கற்றல்திறனையும் அதிகரிக்கும் வகையிலான புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக பாலஸ்தீனிய நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பத்து லட்சம் அமெரிக்க டாலர்களுடன் கூடிய உலகின் சிறந்த ஆசிரியை பரிசு வழங்கப்பட்டது. கேரளாவில் பிறந்து, துபாயை மையமாக கொண்டு உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை திறந்து நிர்வகித்துவரும் சன்னி வர்க்கி தனது சொத்துகளில் சரிபாதியை உலகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு உதவிடும் நோக்கில் தானமாக வழங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த (2015) ஆண்டில் உலகின்…

Read More

இலங்கையின் அரசியல் நடைமுறை குறித்து இந்தியா மகிழ்ச்சி

இலங்கையின் நடைமுறை அரசியல் நிலை குறித்து இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுடில்லி விஜயத்தின் போது பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளார். இதன்போது தாம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பிராந்தியத்தில் பலமிக்க நாடு என்ற வகையில் இந்தியா தமது அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துக்கொள்ள தயாராக உள்ளதாகவும் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். புதுடில்லியில் மார்ச் 11…

Read More

மின்சாரத் தடையில் நாச வேலை!

நாச வேலை காரணமாக நாட்டில் மின்சாரத் தடை ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என மீள் சுழற்சி சக்தி மற்றும் மின்வலு பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். மின்சாரம் தடைப்பட்டது தொடர்பில் வெளிப்படையாக தெரியும் காரணிகள் மிகவும் அசாதாரணமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொழில்நுட்பக்  கோளாறுகளுக்கு அப்பாலான காரணிகளின் அடிப்படையில் மின்சாரம் தடைப்பட்டதா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும்,இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவும்  இவ்வாறு மின்சாரம் தடைபட்டிருந்தமை, நாச வேலையாக இருக்குமோ என சந்தேகிக்க போதியளவு…

Read More

கப்பம் கோரியே வானுடன் எரிப்பு!

தங்கொட்டுவ பகுதியில் கடந்த 11ஆம் திகதி ஐந்து பேருடன் தீயில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வான் தொடர்பாக 5 சந்தேக நபர்களை கைது செய்திருப்பதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். தங்கொட்டுவ – புத்கம்பொல பகுதியில் பாழடைந்த வீதியில் எரிந்த நிலையில் இருந்த வான் தொடர்பாக 119 இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்த வானிற்குள் இருந்து 5 சடலங்களையும் மீட்டிருந்தன. குறித்த சம்பவத்திற்கு பணம் கப்பம் பெறுதலும் ஒரு…

Read More