பீஃபா தலைவர் பதவிக்கு ஐவர் போட்டி: இன்று வாக்கெடுப்பு
நிதி மோசடி காரணமாக தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு தடைக்குள்ளான செப் பிளட்டருக்குப் பதிலாக சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத்திற்கு (ஃபீஃபா) புதிய தலைவர் ஒருவர் இன்று தெரிவு செய்யப்படவுள்ளார். சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள ஹோலென்ஸ்டியன் அரங்கில் நடைபெறவுள்ள ஃபீஃபாவின் அதிவிசேட பொதுக்கூட்டத்தின் போது இத் தேர்தல் நடைபெறவுள்ளது. செப் பிளட்டருக்கு எதிராக நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் ஆரம்பமானதை அடுத்து ஃபீஃபா செயற்பாடுகளில் பங்குகொள்ளமுடியாதவாறு அவருக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் எட்டு வருடத்தடை விதிக்கப்பட்டது….
