Headlines

தலதா மாளிகையின் முன்னால் மோதல்

கண்டி – தலதா மாளிகையின் முன்னால் உள்ள வீதியை திறக்குமாறு கோரி இரு தரப்பினருக்கு இடையில் மோதல் இடம் பெற்றுள்ளது. வீதியை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவிற்கும் மற்றும் வீதியை மூடி வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவுக்கும் இடையிலேயே குறித்த மோதல் இடம் பெற்றுள்ளது.

Read More

எம்பிலிபிட்டிய இளைஞனின் மரண அறிக்கை வெளியீடு

எம்பிலிபிட்டிய தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரண அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இரத்தினபுரி வைத்தியசாலையின் மருத்துவ உத்தியோகத்தர் டி.பி.குணதிலகவால் தயாரிக்கப்பட்ட சட்ட மருத்துவ அறிக்கையை எம்பிலிபிட்டிய மேலதிக் நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டார். பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் வெட்டு காயத்திலிருந்து அதிகளவு இரத்தம் வெயியேறியதால் மரணம் ஏற்பட்டதென கூறப்பட்டுள்ளது.

Read More

நிஷாந்தவின் விண்ணப்பம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது

முன்னாள் சி.எஸ்.என். பணிப்பாளர் நிஷாந்த ரணதுங்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்திய பிணை விண்ணப்பத்தை மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என் ரணவக்க விசாரணைக்காக இன்று (19) எடுத்துக்கொண்டார். திருத்தப்பட்ட பிணை மனுவில் ரணதுங்கவின் வழக்கறிஞர் சளினிவட்டுவஹெட்டடி, சட்டமா அதிபரையும் நிதிக்குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் இருவரையும் பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருந்தார். பிரதிவாதிகளை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்துக்கு வருமாறு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

வீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து (படங்கள்)

– பா.திருஞானம் – பூண்டுலோயா துனுக்கேதெனிய பிரதேசத்தில் அரச பேரூந்து ஒன்று இன்று (19) காலை சேவையை ஆரபிக்கும் போது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதியதில் பேரூந்தும் வீடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான இந்த பேரூந்து இரவு வேளையில் இப்பிரதேசத்திலேயே நிறுத்தி வைக்கப்படும். காலையில் பூண்டுலோயா நகரத்திலிருந்து ஹட்டனுக்கு தனது சேவையை தொடர்ந்து வந்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே…

Read More

டொனால்ட் டிரம்ப் கிறிஸ்துவரே அல்ல: போப் பிரான்சிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் டொனால்ட் டிரம்ப் ஒரு கிறிஸ்துவரே அல்ல என உலகம் முழுவதும் வாழும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை குருவான போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என கூறி சர்ச்சையில் சிக்கினார் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா-மெக்சிகோ இடையில் மதில் சுவர் கட்டவேண்டும் எனவும் யோசனை தெரிவித்தார். அந்த கருத்திற்காக அமெரிக்காவில் மட்டும் அல்ல உலக முழுவதும் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில்…

Read More

வீடுகளை அகற்றியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

பாலத்­துறை கஜுமா தோட்­டத்தில் சட்­ட­வி­ரோத குடி­யிருப்புக்கள் உடைக்­கப்­பட்­டுள்­ள­மை­யி­னை­ய­டுத்து அங்கு வசித்த மக்­க­ளுக்கு தமது வதி­விடம் தொடர்பில் மாற்று நட­வ­டிக்கை ஒன்றை முன்னெ­டுக்க சம்­பந்­தப்­பட்ட அமைச்சு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதற்­கான அனைத்து ஒத்­து­ழைப்­பு­களை வழங்க தயா­ராக இருக்­கின்றோம் என்று கல்வி அமைச்­சரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பிரதி செய­லா­ள­ரு­மா­கிய அக்­கி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்­துள்ளார். இவ்­வி­ட­யத்தை அடி­ப­டை­யாக கொண்டு ஒரு சிலர் அர­சியல் இலாபம் தேட முனை­வ­தா­கவும் அவர் சுட்­டி­காட்­டி­யுள்ளார். பாலத்­துறை கஜுமா தோட்­டத்தில் வீடுகள் அகற்­றப்­பட்­டமை தொடர்­பிலும் அதற்கு…

Read More

வடக்கிற்கு செல்லும் பரணகம ஆணைக்குழு

காணமல்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரணை செய்யும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் முதலாம் திகதி வரையில் நான்கு நாள் அமர்வுகளை யாழ்ப்பாணத்தில்  நடத்தவுள்ளது. நான்கு தினங்களும் முற்பகல் 8.30முதல் மாலை 5.30 வரையில் அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 27ஆம்திகதி வலிகாமம் கிழக்கு(கோப்பாய்) வடமராட்சி வடக்கு(பருத்தித்துறை) வடமராட்சி தென்மேற்கு(கரவெட்டி) ஆகிய பிரதேச சபைளுக்காக வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலத்திலும் 28ஆம் திகதி தீவகம் தெற்கு(வேலணை), ஊர்காவற்துறை, காரைநகர், நெடுந்தீவு ஆகிய…

Read More

இலங்கையில் பறக்கும் படகு சேவை ஆரம்பம்

சுற்றுலா துறையில் முன்னேற்றம் காணும் முயற்சியில் முதல் தடவையாக இலங்கையில் பறக்கும் படகு சேவையை  17 ஆம் திகதி முதல் அறிமுகபடுத்தியுள்ளது. பரா மோட்டார் உதவியுடன் இயங்கும் இந்த பறக்கும் படகு சேவை வெலிகம கடற்கரை பகுதியில் ஆரம்பமாகியது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிபிடத்தக்கது.

Read More

கொழும்பில் 16 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

கலட்டுவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கொழும்பில் சில பகுதிகளில் 16 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஹங்வெல்ல, மீபே, பாதுக்க, ஹோமாகம, கொட்டாவ, கலு அக்கல, ருக்மல்கம, பெலவத்த, கொடகம, பன்னிப்பிட்டிய, மத்தேகொட ஆகிய பகுதிகளிலேயே நாளை (20) பிற்பகல் 01 மணி முதல் மறுநாள் 21 ஆம் திகதி வரையிலான 16 மணித்தியாலங்கள் குறித்த நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது….

Read More

ஜனாதிபதி இன்று ஆஸ்த்திரியா நோக்கி பயணம்

ஜேர்மனிக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துகொண்ட ஜனாதிபதி இன்று ஆஸ்த்திரியா நோக்கி பயணமாகவுள்ளார். இவ்விஜயத்தின் போது ஆஸ்த்திரியா ஜனாதிபதி ஹெய்ன் பிஷ்கர் உட்பட முன்னணி அரச பிரதிநிதிகளையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்தவுள்ளார். சிறந்த சமூக, சந்தைப் பொருளாதார வளர்ச்சி கொண்ட ஆஸ்த்திரியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்திக்கொள்ளும் முக்கிய நோக்கத்துடன் ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

என்னை இலகுவில் விரட்ட முடியாது – மஹிந்த

‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலேயே நான் இன்னுமிருக்கின்றேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைவிட்டு விரட்டுவதற்கு முயற்சித்தாலும், என்னை இலகுவில் விரட்டிவிட முடியாது’ என்று, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாக அறையில் நிறுவப்பட்டுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர், நேற்று ஆஜரானார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்காக சுயாதீன…

Read More

மூன்று வழக்குகளிலிருந்து ஷிராணி விடுதலை

3 வருடங்களாக, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தவில்லையெனக் குற்றஞ்சாட்டி, முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த 3 மனுக்களும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வைத்து, இன்று வெள்ளிக்கிழமை (19) வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டன. இதனையடுத்து அவர், அந்த 3 வழக்குகளியிருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டார்.

Read More