Headlines

ராணுவத்துடன் பேச்சு: ஆங்கான்–சூகி மியான்மர் அதிபராகும் வாய்ப்பு

மியான்மரில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஜனநாயகத்துக்காக போராடி சுமார் 19 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுக் காவலில் இருந்த ஆங்கான்–சூகியின் குடியரசுக்கான தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தேசிய லீக் கட்சி மியான்மரில் புதிய ஆட்சி அமைக்கிறது. தற்போதைய அரசின் பதவிக்காலம் வருகிற மார்ச் 31–ந் தேதி வரை உள்ளது. அதன் பின்னர் புதிய ஆட்சி அமையும். எனவே, தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய லீக் கட்சியை சேர்ந்தவர் புதிய…

Read More

யோஷிதவின் முன்னாள் காதலி புறக்கோட்டையில்!

கைது செய்யப்படுவார் என பரவலாக நேற்றைய தினம் ஊடகங்களில் பேசப்பட்ட யசாரா வெளிநாடு சென்றிருப்பதாக வெளியாகிய தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தெரியவந்துள்ளது. இந்த விடயத்தை யசாராவே தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுத்துவரும் நிலையிலேயே அவர் கைது செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த விசாரணைகளில் கடந்த வாரம் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட மேலும் ஐவர் கைது…

Read More

50ஆயிரம் வழங்குமாறு ஐஜிபிக்கு உத்தரவு

ரயில் பயணியின் மண்டையை பிளந்த குற்றத்துக்காக அப்பயணிக்கு 50 ஆயிரம் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு கொழும்பு மாவட்ட நீதவான் அமாலி ரணவீர,பொலிஸ் மா அதிபருக்கு (ஐ.ஜி.பி) உத்தரவிட்டார். ரயில் சேவையாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது, கோட்டை ரயில் நிலையத்தின் வைத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ரயில் பயணியொருவரின் மண்டை பிளந்துவிட்டது. 2014ஆம் ஆண்டு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த பயணி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர், பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்தார்….

Read More

லலித் கொத்தலாவலயின் மனைவிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலயை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சிசிலியா கொத்தலாவல கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செலின்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். லண்டனிலிருந்து டுபாய் ஊடாக…

Read More

ஹுஸைன்- மைத்திரி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுகொண்டிருக்கின்றது.

Read More

ஞானசார தேரர், நீதிமன்றில் ஆஜர்படுத்த தயார்

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். நீதிமன்றத்துக்கு அண்மையில் உள்ள இரண்டு வீதிகள், இரும்பு கம்பிகளான தடைகள் போட்டு மறிக்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணைக்களுக்கு வருகைதந்தவர்களை தவிர, வேறு எவரும் நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம் தயாராக வைக்கப்பட்டுள்ளதுடன்  கலகம் அடக்கும் பொலிஸாரும் உஷாராக வைக்கப்பட்டுள்ளனர். பட உதவி: லங்காதீப

Read More

ஹுஸைன்-ரணில் சந்தித்துப்பேச்சு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று(9)  இடம்பெற்ற சந்திப்பின் பொது எடுக்கப் பட்ட படங்கள்.

Read More

45 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிவு

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாவட்டத்தில் அறக்கொட்டித் தாக்கத்தால் 45 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிந்து நாசமாகியுள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார். இம்மாவட்டத்தில் வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, கிரான், செங்கலடி உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக நெற்செய்கையே இவ்வாறு அழிவடைந்துள்ளன. இம்மாவட்டத்தில் இம்முறை ஒரு இலட்சத்து 60ஆயிரம் ஏக்கரில் பெரும்போகம் செய்கை பண்ணப்பட்டுள்ளது. மேலும், நல்லாட்சி அரசாங்கம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள்…

Read More

பிரதமருக்கு நன்றி தெரிவித்தார் சரத் பொன்சேகா

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நன்றி தெரிவித்துள்ளார். மக்களுக்கு சேவையாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமைக்காக பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டு தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு சென்று, மக்களுக்கு சேவையாற்ற முடிந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் ஊடாக மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற திட்டமிட்டுள்ளதாக…

Read More

திருட்டு மின்­சாரம் தொடர்பில் நட­வ­டிக்கை

அம்­பாறை மாவட்­டத்தில் திருட்டு மின் ­சாரம் பெறுவோர் மீது இலங்­கை மின்சாரசபை சட்ட நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது. சமீ­ப­கா­ல­மாக அம்­பாறை மாவட்­டத்தில் திருட்டு மின்­சாரம் பெறு­வோர் தொடர்பில் இலங்கை மின்­சார சபைக்கு முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றதன் ஊடாக அம்­பாறை மாவட்­டத்தில் பல பிர­தே­சங்­க­ளிலும் சட்­ட­வி­ரோ­த­மாக மின்­சாரம் பெறு­வோர்கள் சுற்றி வளைக்­கப்­பட்டு கைது செய்­யப்­பட்டு வரு­கின்­றனர். கொழும்­பி­லி­ருந்து வருகை தரும் விசேட மின்­சார சபை குழு­வினர், பிராந்­திய மின்­சார சபை ஊழி­யர்கள், பிர­தேச பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் ஆகியோர் இணைந்து…

Read More

ஜூனில் உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடைபெறும்

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான எல்லை மீள் நிர்­ணய பணிகள் நிறை­வ­டை­ய­வுள்­ளன. இது குறித்­தான குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதம் கைய­ளிக்­கப்­பட உள்­ளது. இதன்­படி ஜூன் மாதம் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­யாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல் பிற்­போ­டப்­ப­ட்டமைக்கு அமைச்சின் மீது குற்றம் சுமத்­தப்­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் பைஸர் முஸ்­தபா ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள…

Read More

நேபாள முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம்

நேபாளி காங்கிரஸ் கட்சி தலைவரும், நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் இன்று (9) காலமானார். அவருக்கு வயது 79. சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் பனாரஸ் நகரில் பிறந்த கொய்ராலா, நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக அரசியலில் ஈடுபட்டு சுமார் 16 ஆண்டுகாலம் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்தார். விமான கடத்தல் தொடர்பாக இந்தியாவில் உள்ள சிறைகளில் 3 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த இவர், கடந்த 10-2-2014 அன்று நேபாள நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார். நேபாளத்தில் கடந்த ஆண்டு அறிமுகம்…

Read More