Headlines

ஹிருணிகா பிணை பெறுவதில் கின்னஸ் சாதனை

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறுகிய கால இடைவௌியில் பினையில் விடுவிக்கப்பட்டமையானது, புதிய கின்னஸ் சாதனை என, உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். “ஹிருணிகா விரைவாக சிறை சென்று விரைவாக வௌியே வருவார்” என தான் முன்னரே கூறியதாகவும், அது தற்போது நடைபெற்றுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், பேராசிரியர் நாலக கோடஹேன பல நாட்களாக சிறையில் இருக்கையில், ஹிருணிகா குறுகிய காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டமை கின்னஸ் சாதனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (11)…

Read More

மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

– ஜவ்பர்கான் – மண் ஏற்றுவதற்கான அனுமதி பத்திரத்தை வழங்குமாறு கோரி இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்கள் இடம்பெற்றன. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் அரசடியில் இப்போராட்டம் இடம்பெற்றது. மாவட்ட எம்.பீ.வியாழேந்திரனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெளிவிவகார செயலர் நாளை இலங்கை வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் ஜெயசங்கர் நாளை இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி வாகீஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பல முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

Read More

வித்தியா படுகொலை: சந்தேகநபர்கள் குற்றவாளிகள் இல்லையாம்!

நாங்கள் குற்றவாளிகள் இல்லை. எங்களைப் பழிவாங்கும் நோக்குடன் ஊர்காவற்றுறை பொலிஸார் எங்களை கைது செய்துள்ளனர் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான வழக்கு நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அறிக்கைகள் இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், சந்தேகநபர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். வழக்கு முடிந்து சிறைச்சாலை வாகனத்தில் சந்தேகநபர்கள் ஏறியபோது, ஊடகவியலாளர்களை தமது அருகில்…

Read More

குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி – மைத்திரி

புதிய அரசியலமைப்பு தொடர்பாக தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஸ்ரீ போதிராஜா விகாரையில் ஆரம்பமான நிகழ்வு ஒன்றில் பங்கு பற்றிய பொழுதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

Read More

இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய உயர்குழு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நிலை அதிகாரிகள், இலங்கை வரவுள்ளனர். எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இவர்களின் இலங்கை விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் சலுகை உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் ஆராயும் முகமாகவே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இலங்கையில் வர்த்தக சமூகத்தினரை மையமாகக் கொண்டு ஜீஎஸ்பி பிளஸ் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளனர். இதன்போது இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிசலுகையை பெற்றுக்கொள்வதற்கான ஏதுக்கள்…

Read More

மாணவன் தாக்கியதில் ஆசிரியர் வைத்தியசாலையில்!

காலி பிரதேச பாடசாலையொன்றில் இந்தத் தாக்குதல் சம்பவம் இன்று (11) முற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. காலி பிரதேசத்தில் காணப்படும் பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவனாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலினைத் தொடர்ந்து படுகாயமடைந்த ஆசிரியர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியர், குறித்த மாணவனிடம் முடி வெட்டும் படி தெரிவித்து விட்டு, வேறு பணிகளைச் செய்து கொண்டிருந்த வேளையே மாணவர் அவரைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பிலான விசாரணைகளை அக்மீமன பொலிஸார்…

Read More

மிஹின் லங்கா விமானம் பறப்பதை 6 மணிநேரம் தாமதப்படுத்திய எலி!

– ஆர்.கிறிஷ்­ணகாந் – கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து நேற்று முன்­தினம் (9) காலை மதுரை நோக்கி புறப்­ப­ட­வி­ருந்த மிஹின் லங்கா விமான சேவைக்கு சொந்­த­மான என் 3001 என்ற விமானம் புறப்­ப­டு­வ­தற்கு 6 மணித்­தி­யா­லங்கள் தாமதம் ஏற்­பட்­டுள்­ளது. விமா­னத்­திற்குள் எலி­யொன்று புகுந்­துள்­ள­தாக பய­ணி­யொ­ருவர் விமானப் பணி­யா­ளர்­க­ளுக்கு அறி­வித்­த­த­னை­ய­டுத்து விமா­னத்­தி­லி­ருந்த பய­ணிகள் அனை­வரும் உட­ன­டி­யாக வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். விமான நிலைய பொறுப்­பா­ளர்கள் எலியை விமா­னத்­தி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்கு ஏறத்­தாழ 6 மணித்­தி­யா­லங்கள் வரை சென்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன் பின்னர் முற்­பகல் 7.30 மணிக்கு…

Read More

ஒபாமாவின் செல்ல நாயை கடத்த திட்டமிட்டவர் கைது

தன்னை இயேசு கிறிஸ்து என கூறிக்­கொண்ட ஒருவர் ஒபா­மாவின் நாய்­களில் ஒன்றைக் கடத்திச் செல்ல முயற்­சித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு பின்னர் விடுக்­கப்­பட்­டுள்ளார். 49 வயது  ஸ்கொட் ஸ்டோக்கட் என்­ப­வரே வொஷிங்டன் ஹோட்­டலில் இரக­சிய பாது­காப்புப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டார். அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபா­மாவின் செல்ல நாய்­களில் ஒன்­றான போவை ஸ்கொட் கடத்­து­வ­தற்­கான திட்டம் குறித்து இர­க­சிய தகவல் மூலம் தெரிய வந்ததாக பாது­காப்பு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். அந்த நபரின் வாக­னத்தில் சில ஆயு­தங்கள் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக அதி­கா­ரிகள்…

Read More

மாவோ சேதுங்கின் 120 அடி உயரமான சிலை தகர்க்கப்பட்டது

சீனாவில் அண்மையில் திறக்கப்பட்ட மாவோ சேதுங்கின் பிரமாண்ட சிலை தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசை ஸ்தாபித்து 1976 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்த மாவோ சேதுங்கின் பிரமாண்ட சிலை, ஹெனான் மாகாணத்தின் ஸுஷிகாங் நகரில் கடந்த  மாதம் திறந்துவைக்கப்பட்டது.   120 அடி (36.6 மீற்றர்) உயரமுடையதாக இச்சிலை அமைந்திருந்தது. 9 மாத காலமாக இச்சிலையின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.   சுமார்…

Read More

போதையில் வாகனம் செலுத்திய புதுமைப் பெண்கள்

மது போதையில் மோட்டார் சைக்கிளை வீதி முழுவதும் அங்கும் இங்குமாக செலுத்தி வந்த இரு இளம் பெண்கள் களுத்துறை, வடியமண்கட சந்தியில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமண நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு அங்கு மது அருந்திவிட்டு வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்தப் பெண்கள் பாணந்துறையிலுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் எனவும் வாதுவை நகரில் ஒரு விடுதியில் தங்கியிருப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். எனினும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெண், கடும் போதையில் நிற்க முடியாது…

Read More

2030–ம் ஆண்டிற்குள் சந்திரனில் கிராமங்கள் உருவாக்கப்படும்

பூமியை தொடர்ந்து செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக சந்திரனில் மக்களை குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. ஏற்கனவே, சந்திரனுக்கு மனிதர்கள் சென்று கால் பதித்து விட்டனர். அதன் அடிப்படையில் அங்கு புதிய கிராமங்களை உருவாக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் ஏஜென்சி சந்திரன் 2020–2030 என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தியது. அதில் விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வல்லுனர்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய…

Read More