Headlines

கைவிலங்குடன் தப்பி சென்றவர் மடக்கிப்பிடிப்பு

பொலிஸாரின் பாதுகாப்பிலிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவரை கலஹா நகரில் வைத்து கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கம்பளை பொலிஸார் கட்டுகஸ்தோட்டை வத்துவல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவரை கைது செய்து கைவிலங்கிட்டிருந்தனர். இந்நிலையில் சந்தேக நபர் திடீரென தலைமறைவாகியுள்ளார். இது குறித்து சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது. சந்தேக நபர் கைவிலங்குடன் வாகனம் ஒன்றினை கலஹா நகரின் ஊடாக செலுத்திச் சென்ற…

Read More

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மா ஒரு கிலோவின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 87 ரூபாவாக இருந்த கோதுமைவின் விலை 89 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ் அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாகிஸ்தான் செய்த உதவிகளை மறக்கமாட்டோம் – மைத்திரி

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் வருகை தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) முற்பகல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார். மேலும், யுத்தத்தின் போது இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்ய பாகிஸ்தான் அதிகளவான உதவிகளை வழங்கியதாக நினைவூட்டிய ஜனாதிபதி அதை தாமும் தமது நாட்டு மக்களும் மறக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் மனித உரிமைகள்…

Read More

மஞ்சள் பாதையைக் கடப்பதற்கான, மின்சார இயந்திர தொழிட்ப ரோபோ கண்டுபிடிப்பு

-இக்பால் அலி- மாவத்தகம பிரின்ஸ்  சந்திரசேன குளிர்சாதனப் பெட்டி திருத்தும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒருவர். இவர் சிறு பராயம் முதல் இன்று வரை புதிய கண்டு பிடிப்புக்களைச் செய்து பல  முதல் தர விருதுகளைப் பெற்றவர்.   சர்வதேச  மட்டத்தில் வருடாந்தம் நடத்தும் புதிய கண்டு பிடிப்பாளர் போட்டியில் பங்கு கொண்டு முதல் பரிசினையும் கூட பெற்றுள்ளார்.  கைகளை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மவுசு பயன்படுத்தும் நவீன முறை கருவியை கண்டு பித்தமைக்காக சுவிஸ்லாந்து நாட்டில்…

Read More

வசீம் தாஜூதின் கொலை, சர்வதேச உதவியை நாடவேண்டும் – கொழும்பு பல்கலைகழகம்

வசீம் தாஜூதினின் கொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டும் என கொழும்பு பல்கலைகழகம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. வசீம் தாஜூதினின் உயிரிழப்பு தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரால் திரட்டப்பட்ட சீ.சீ.டி.வி காணொளிகள் ஆய்விற்காக கொழும்பு பல்கலைக்கழக கணனி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டடிருந்தது. எனினும் சீ.சீ.டி.வி காணொளிகளில் தெளிவின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அந்த வாகனங்களின் இலக்கங்களையும் அதில் காணப்படும் நபர்களையும் அடையாளம் காணமுடியாத நிலை காணணப்படுவதாக பல்கலைகழகத்தினர் நீதிமன்றில் குறிப்பிட்டள்ளனர்.

Read More

நினைவு சின்னம் வழங்கி வைப்பு

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வருகைத்தந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் பாரியார் திருமதி கன்சுல் நவாஸ் ஷரீப் இன்று கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சின் கிழ் இயங்கும் லக்ஷல காட்சி அறைக்கு விஜயம் செய்தார். இதன் போது லக்ஷல நிறுவனத்தின் தலைவரும்,முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின உபவேந்தருமான எம்.எஸ்.இஸ்மாயில் பிரதமரின் பாரியாருக்க நினைவு சின்னம் ஒன்றினை வசழங்குவதை படத்தில் காணலாம்.

Read More

சாரதி உறக்கம்: விமானத்துடன் மோதிய பஸ்

நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த விமா­ன­மொன்­றுடன் பஸ் ஒன்று மோதிய சம்­பவம் கொல்­கத்­தாவில் நேற்று இடம்­பெற்­றது. கொல்­கத்­தா­வி­லுள்ள நேதாஜி சுபாஸ் சந்­தி­ரபோஸ் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த எயார் இந்­தியா நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான விமானம் ஒன்றின் மீது, விமான நிலை­யத்­திற்குள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த ஜெட் எயார் வேஸ் நிறு­வ­னத்தின் பஸ் ஒன்று மோதி­யது. நேற்று (4) அதி­காலை 5.25 மணி­ய­ளவில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. அஸாம் மாநி­லத்­தி­லுள்ள சில்சார் நக­ருக்குப் புறப்­ப­ட­வி­ருந்த விமா­னமே இவ்­வாறு சேத­ம­டைந்­ததுள்ளது. மேற்­படி பஸ்ஸின் சாரதி அதி­கா­ரி­களால் விசா­ரிக்­கப்­பட்­ட­போது,…

Read More

ஏறாவூர் மருந்தகத்தில் கொள்ளை; இரு இளைஞர்கள் கைது

ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள மருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மருந்தகத்தினுள் கூரை வழியாக நுழைந்த மர்ம நபர்கள், 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 21 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை என்பவற்றை திருடிச் சென்றதாக முறையிடப்பட்டது. இக் கொள்ளைச் சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்றிருந்தது. மேற்படி சம்பவம் தொடர்பில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட புலனாய்வு விசாரணைகளின்…

Read More

அமெரிக்கா: மஸ்ஜிதில் பன்றி இறைச்சியை வைத்துச் சென்ற நபர் கைது

இஸ்லாத்தில் பன்றி இறைச்சியை உண்பதும் விலக்கப்பட பாவச்செயலாகும் (ஹராம்) . இந்நிலையில், அமெரிக்காவில் சமீபகாலமாக மதவெறுப்புணர்வின் உச்சகட்டமாக இஸ்லாமியர்களால் விலக்கப்பட்ட பன்றி இறைச்சியை சிலர் மசூதிகளுக்குள் வீசிவிட்டு செல்வது அரங்கேறி வருகின்றது. இதில் ஒருகட்டமாக அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான புளோரிடாவின் டிட்டுஸ்வில்லி பகுதியில் உள்ள மஸ்ஜித் அல் முனின் என்ற மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை இதே சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த மசூதியின் பின்வாசல் வழியாக ஒற்றை ஆடையால் உடலை மறைத்தபடி, மொட்டைத் தலையுடன் நுழைந்த ஒரு மர்ம…

Read More

விசமிகள் போட்ட புதிய பூட்டினால் ஆர்ப்பாட்டம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலத்தில் இன்று முதலாம் ஆண்டிற்கான மாணவர்களை இணைக்கும் நிகழ்வுகள் நடைபெறவிருந்த நிலையில் பாடசாலை பூட்டை உடைத்தெறிந்து விட்டு இனந்தெரியாத விசமிகள் வேறு பூட்டை போட்டுவிட்டுச்சென்றதால் மாணவர்களும் பெற்றோரும் பாடசாலையினுள் செல்லமுடியாது வெளியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிஞ்சு மாணவர்கள் நீண்ட நேரம் வெயிலில் தவித்ததை அவதானிக்க முடிந்தது. நேற்று வழமை போன்று பாடசாலையை மூடிவிட்டுச்சென்று இன்று காலை பாடசாலை திறக்க வந்தபோது…

Read More

நாட்டில் இனவாத சக்திகள் தலைதூக்கியுள்ளன

நாட்டில் இனவாத சக்திகள் தலைதூக்கியுள்ளதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கறுப்பு கொடிகளை ஏற்றுவதற்காக முயற்சிக்கும் தரப்பினர் இனவாதத்தை தூண்டும் நோக்கில் அவ்வாறு செய்கின்றனர். அமைச்சுப் பதவிகளை எதிர்நோக்கும் சிலரும் இவ்வாறு இனவாதத்தை தூண்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை வெளியிட விரும்பவில்லை.இனவாத தரப்புக்கள் சிங்களத்தையும், பௌத்தத்தையும் பாதுகாக்கும் முனைப்புக்களில் ஈடுபடவில்லை எனவும், நாட்டை மீளவும் யுத்தம் நோக்கி நகர்த்துவதே அவர்களின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளர். அரசியல்வாதிகளே…

Read More

சுவர்களில் எழுதப்பட்டு வரும் சிங்ஹ லே – பொலிஸார் விசாரணை

கொழும்பின் புறநகரான நுகேகொட பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில வீடுகளின் மதில் சுவர்களின் மீது ‘சிங்ஹ லே’ என்ற சிங்கள வாசகங்களை எழுதியவர்களை கண்டுபிடிப்பதற்காக விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்த விசாரணைகள் நடப்பதாக காவல்துறை பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார். இனங்களுக்கு இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவர்களால் முன்னெடுக்கப்படும் விஷமத் தனமான நடவடிக்கை இது என்று அரசியல்வாதிகள் சிலரும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். தென்னிலங்கையில் அண்மைக்காலமாக ‘சிங்ஹ…

Read More