நிபந்தனையின்றி கடன்வழங்க, சர்வதேச நாணய நிதியம் இணக்கம்
நிபந்தனைகள் இன்றி இலங்கைக்கு கடன் மற்றும் நிவாரணங்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதி அதிகாரிகள் ஆகியோரிடையே பெரு நாட்டின் தலைநகர் லீமாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பினை வழங்கும் என பெரு நாட்டிலிருந்து தெரிவித்த நிதியமைச்சர் நியூஸ்பெஸ்ட்டுக்கு கருத்து தெரிவித்தார். இலங்கையின் அரசியலில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றத்தின் மூலம் சர்வதேச நாணய நிதியம்…
