Headlines

முன்னாள் ஜனாதிபதியிடம் சாட்சியங்கள் பதிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இன்று பாரிய குற்றச் செயல்கள் மற்றும் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவில் முன்னிலையாகினர். ஆணைக்குழுவின் செயலாளர் லெஸ்லி டி சில்வா இதனை செய்தி சேவைக்குத் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விளம்பரங்களுக்கான 200 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்படவில்லை. இது தொடர்பில் சாட்சியங்களை பதிவு செய்யும் நோக்கிலே அவர்கள் ஆணைக்குழுவிடம் முன்னிலையாகியுள்ளனர். இதேவேளை, பாரிய நிதி மோசடி…

Read More

சினிமா பாணியில் பெண் கடத்தல்: 8 மணி நேரத்தில் மீட்டது பொலிஸ்

வடமராட்சி கம்பர்மலைப் பகுதியில் இளம் பெண்ணொருவர் சினிமாப் பாணியில் கடத்திச் செல்லப்பட்டு எட்டு மணி நேரத்தினுள், பொலிஸாரின் அதிரடி முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்குப் பயன் படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வடமராட்சிப் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று வடமராட்சிப் பகுதிக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்…

Read More

அடுத்தாண்டு சுதந்திர நிகழ்வினை மாலை வேளையில் நடத்த யோசனை

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வு மாலை வேளையில் நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் ஆண்டு இலங்கையின் 68ம் தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மாலை வேளையில் நடாத்தப்படும் என உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது. பொதுவாக இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் முற்பகலில் நடாத்தப்படுவதே வழமையானதாகும். எனினும் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வு மாலையில் நடத்தப்பட உள்ளது. அடுத்த நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் பற்றிய…

Read More

ஓடையில் விழுந்த மாணவி பாத்திமா அஸ்ரா பலி

– J.M.Hafees – கட்டுகஸ்தோட்டை – நித்தவலை பகுதியில் நேற்று மாலை வீதி ஓரமான சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் ஓடை ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கல்விகற்கும் 16 வயதுடைய  பாத்திமா அஸ்ரா சகாப்தீன் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

Read More

மஹிந்தவின் ஆட்சேபனை நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா? என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனத்தை, பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நிராகரித்துள்ளது. இன்றைய தினம்  பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அவர் சார்ந்த தரப்பினருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா? என்பது குறித்து…

Read More

உரியவர்கள் மோ. சைக்கிள், சைக்கிளை பெறலாம்

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளை உரியவர்கள் பெற்றுக் கொள்ளுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று கேட்டுக் கொண்டுள்ளது. நெடுந்தீவுச் சந்தைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த லுமாலா சைக்கிள் ஒன்றை நெடுந்தீவுப் பொலிஸார் மீட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். அவ்வாறு கடந்த மே மாதம் ஊர்காவற்றுறைப் பொலிஸார் என்.பி.ஜே.கியூ இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டு நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். அவற்றை உரியவர்கள் பெற்றுக் கொள்ளுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றப் பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More

வெலே சுதா போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளார்

அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட போதைப் பொருள் வர்த்தகர் கம்பல விதானகே எனப்படும் வெலே சுதா கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலை மிகக் கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலே சுதாவுடன் கடந்த காலங்களில் இரகசியமாக பணம் பெற்றுக்கொண்ட 12 சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்ர்களின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வெலே சுதாவுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் எதிரான பாதாள உலகக் குழுக்களைச்…

Read More

பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றதும் சொந்த ஊருக்குச் சென்று விடுவேன்

பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றதும் சொந்த ஊரான பொலன்­ன­று­வைக்கு சென்று எனது வீட்டில் வசிப்­பேனே தவிர ஜனா­தி­ப­திக்­கான உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் வசிக்க மாட்டேன் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, கொழும்பு கோட்­டை­யி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கையின் நிலத்­துக்­க­டியில் உள்ள இரண்­டு­மாடிக் கட்­டட பரா­ம­ரிப்பு செலவை தவிர்க்க முடி­யா­துள்­ள­தா­கவும் தெரி­வித்­தார். இலங்கை பத்­தி­ரிகை நிறு­வனப் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்பின்போதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு தெரி­வித்­தார். ஜனா­தி­பதி மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, நான் ஓய்வு பெற்ற பின்­னரும் தற்­போது நான் பயன்­ப­டுத்தும் கொழும்பி­லுள்ள உத்­தி­யோ­க­பூர்வ…

Read More

4 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நுவரெலியா, பதுளை, கண்டி  மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Read More

வெளி­நா­டு­களின் வங்­கி­களில் பல பில்­லியன் ரூபா கணக்குகள்

இலங்­கையின் முன்னாள் ஆட்­சி­யா­ளர் களின் உற­வி­னர்­களின் பெயர்­களில் வெளி­நா­டு­களின் வங்­கி­களில் பல பில்­லியன் ரூபா கணக்குகள் உள்­ளன. அவற்றை முடக்கி அந்த பணத்தை இலங்­கைக்கு கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் தற்போது விசாரணை நடத்தப்படு கின்றது. அதன் முடிவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்றும் அவர் கூறினார். எவன்கார்ட் நிறு­வனம் தொடர்பில் விரை­வான சட்ட நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள் ளார். அதன்­படி…

Read More

அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண முதலமைச்சர்களும் பங்கேற்பர்

மாகாணசபைகளுக்கு உட்பட்ட விடயங்களை ஆராய்வதற்காக மாகாண முதலமைச்சர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அமைச்சரவை கூட்டத்துக்கு சமுகமளிக்கவுள்ளனர். மத்திய அரசாங்கத்தரப்பு இதனை தெரிவித்துள்ளது. அமைச்சரவை இணைப்பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் இது தொடர்பில் சமர்ப்பித்த யோசனையை ஜனாதிபதி ஏற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார் இதேவேளை நாடாளுமன்ற குழுக்களின் தலைவர்களும் மாதமொருமுறை அமைச்சரவைக் கூட்டத்துக்கு சமுகமளிக்கவுள்ளனர் இதற்கான யோசனையை பிரதமர் ரணில் முன்மொழிந்துள்ளதாகவும் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

Read More