Headlines

பிரதமர் இன்று விசேட உரை

புதிய அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதார கொள்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரையாற்றவுள்ளார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சராகவே பிரதமர் உரையாற்றவுள்ளார். இந்த கொள்கைக்கமைய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நாட்டு நிலையான பொருளாதார வளர்ச்சி இலக்குகளை முழுமைபடுத்தும் தொழில்நுட்ப பாதைக்கு ஒரு ஆய்வாக இதனை கருத்திற்கொள்ள முடியும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

முஸ்­லிம்கள் உண்மையை உணர்வார்கள் – மஹிந்த

– A.R.A.பாரீல் – இஸ்ரேல் பலஸ்­தீன் மக்கள் மீது மேற்­கொள்ளும் அட்­டூ­ழி­யங்­க­ளையும் அல் அக்ஸா பள்­ளி­வாசல் முற்­று­கை­யையும் வன்­மை­யாக  கண்­டிப்­ப­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். இலங்கை இஸ்ரேல் இரா­ஜ­தந்­திர உற­வுகள் முஸ்­லிம்­களின் மனதைப் புண்­ப­டுத்­து­மாயின் அதனை தான் விரும்­ப­வில்லை எனவும் அவர் கூறினார். பலஸ்தீன் மீதான இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பு மற்றும் இலங்கை இஸ்ரேல் உறவு தொடர்பில் வின­வி­ய­ போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில், முஸ்லிம் நாடுகள் எப்­போதும் இலங்­கை­யுடன்…

Read More

1 கோடி ரூபா கோரும் கொட்டதெனியாவ மாணவன்

கொட்டதெனியாவ சிறுமி சேயா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மாணவன் சுரஞ்சன் பிரதீப் செனவிரட்ன, தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நேற்று (04) தாக்கல் செய்து குறித்த மனுவில், பொலிஸார், தன்மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, தன்னை கைது செய்து, கொடுமைப்படுத்தியதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூபா ஒரு கோடியினை நஷ்டஈடாக வழங்குமாறு கோரியுள்ளார். குறித்த மனு, வழக்கறிஞர் தீஷ்ய வேரகொடவின் ஊடாக உச்சநீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இம்மனுவின் பிரதிவாதிகளாக, கொட்டதெனியாவ…

Read More

பீ. ஜெ வந்தால் கலவரம் வெடிக்குமாம்

இந்திய மார்க்க அறிஞர் பி ஜெய்னுலாப்தீன் இலங்கை வரவுள்ள நிலையில் அவரை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என ஆசாத் சாலி வலியுருத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் கடந்த 2005ல் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களும் அப்போதைய பாதுகாப்பு செயலாலரும் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். இன்று ரனிலின் அரசு அவர் நாட்டுக்குள் வந்து மார்க்க சொற்பொழிவு நடத்த அனுமதி அளித்துள்ளது.இலங்கைக்குள் இஸ்ரேல் நட்பு உயிர்பெற்றுள்ள நிலையில் பி ஜெய்னுலாப்தீன் இஸ்ரேல்…

Read More

இஸ்ரேலுக்கு ஹமாஸ் கடும் எச்சரிக்கை

பலஸ்தீனர்கள் மீது உயிர்ப்பலி கொள்ளும் பலப்பிரயோகம் மேற்கொண்டு வரும் இஸ்ரேல் படையினர் மீது புது வகையான போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதாக ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போராட்ட அமைப்புகள் எச்சரித்துள்ளன. காசாவில் கடந்த செவ்வாயன்று பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ், ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து பலஸ்தீனர்களை படுகொலை செய்தால் தமது அமைப்பு இன்திபாழா போராட்டத்தில் இணை வதாக எச்சரித்தது. கிழக்கு ஜரூசலம் மற்றும் மேற்குக் கரையில் பலஸ்தீனர்களின் எழுச்சி போராட்டத்திற்கு ஆதரவளிக்கு வகையிலேயே இந்த…

Read More

தீவிரவாத இயக்கமாக சிவசேனாவை அறிவிக்க வேண்டும்: முஷாரப் 

சிவசேனாவை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார். இதுதொடர்பாக ‘சேனல்-92’ என்ற தனியார் தொலைகாட்சிக்கு சமீபத்தில் பேட்டியளித்த முஷாரப் கூறியதாவது: நான் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைமையிலான இந்திய அரசுகளுடன் பழகியுள்ளேன். என்னைப்பொருத்தவரை தற்போதைய கேள்வி கட்சிகளைப் பற்றியது அல்ல. ஆனால், தனிநபர் தொடர்பானது. இந்தியாவின் தற்போதைய புதிய பிரதமர் தொடர்பானது. வாஜ்பாய் மிகவும் நல்ல மனிதர். அவர் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். சோனியா காந்தியும் அப்படிதான். அதனால்தான், இந்தியா-பாகிஸ்தான்…

Read More

மாலைத்தீவில் அவசரநிலை பிரகடனம்

மாலைத்தீவு அதிபர் யாமீன் அப்துல் கய்யூம் சென்ற படகை வெடிகுண்டு வைத்து தகர்த்து அவரை கொல்ல உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் துணை அதிபர் அஹமத் அடிப் கடந்த அக்டோபர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டது, அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கருகே வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது ஆகிய சம்பவங்களால் அங்கு கடந்த சில நாட்களாக பதட்டமான சூழல் நிலவி வந்தது. சவூதி அரேபியாவில் உள்ள புனித மக்கா, மதினா நகரங்களுக்கு சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றிய மாலைத்தீவு அதிபர் அப்துல்லா…

Read More

தாய்லாந்து இளவரசியை சந்தித்த மைத்திரி

தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (04) முற்பகல் அந்நாட்டின் இளவரசி (Maha Chakri Sirindhorn) அவர்களை (Sra Pathum) மாளிகையில் சந்தித்தார்.

Read More

மத்திய மாகாண சபையில் அமளி

மத்திய மாகாண சபை உறுப்பினர்களில் ஒரு உறுப்பினருக்கு மாத்திரம் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு எப்படி வழங்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பிய ஏனைய உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். மத்திய மாகாண சபையின் அமர்வுகள் நேற்று பேரவை தலைவர் எல்.டி. நிமலசிறி தலைமையில் பல்லேகலவில் உள்ள மாகாண சபை அவையில் நடைபெற்றது. மத்திய மாகாண சபை உறுப்பினரான அசாத் சாலிக்கு மாத்திரம் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் ஏனைய உறுப்பினர்களுக்கு அந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்…

Read More

தென்னாபிரிக்க நாட்டவர் கைது

தென்னாபிரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர் தங்காலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. காலாவதியான கடவு சீட்டுடன் தங்காலையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தங்காலை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

ரஷ்யாவின் மற்றுமொரு விமானம் விழுந்து பலர் பலி

சென்றவாரம் நூற்றுக்கணக்கான மக்களை பலி கொண்ட ரஷ்ய விமான விபத்தை தொடர்ந்து சற்றுமுன்னர் ரஷ்யாவுக்கு விமானம் ஒன்று தென் சூடானில் விழுந்ததால் அதில் பயணம் செய்த சுமார் 40 பேர் உயிரிந்துள்ளனர் என தெரிவிக்கபடுகிறது. பொருட்களை ஏற்றிச் செல்லும் குறிபிட்ட விமானத்தில் பணியாளர்களுடன் 20 பேர் இருந்ததாக சூடான் ஜனாதிபதி பேச்சாளர் தெரிவித்து இருந்தாலும் நாற்பது பேரின் உடல்களை அங்கிருந்து அகற்றியதாக ராய்ட்டர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை இருவர் காயங்களுடன் உயிர்தப்பி உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கடுகிறது.

Read More