ISIS உடன் இணையச் சென்ற அவுஸ்திரேலிய சிறுவர்கள் விமான நிலையத்தில் தடுக்கப் பட்டனர்!
ISIS போராளிக் குழுவோடு இணைவதற்காக புறப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இரு பருவ வயதுச் சிறுவர்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளனர். 16 மற்றும் 17 வயதுச் சகோதரர்களான இவர்கள் இருவரும் பயணிகள் பரிசோதனைப் பிரிவைக் (customs) கடக்க முயன்ற போது சந்தேகத்தின் பேரில் தடுக்கப் பட்டதாக அவுஸ்திரேலிய குடியகழ்வுத் துறை அமைச்சர் பீட்டர் டுட்டொன் ஞாயிற்றுக் கிழமை தெரிவித்துள்ளார். இந்த சகோதரர்கள் பரிசோதிக்கப் பட்ட போது ஒரு பயண மூட்டையுடன்…
