Headlines

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – விக்கிரமபாகு கருணாரட்ண

காரணமின்றி கைதுசெய்து வைத் திருக்கும் அரசியல் கைதிகளை உடன டியாக விடுதலைசெய்ய வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மைத்திரி ஆட்சி இருக்கும்வரை நீடிக்க அனுமதிக்க முடியும்.”  இவ்வாறு தெரி வித்தார் நவசமசமாஜக் கட்சியின் தலைவரும்,  தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரம பாகு  கருணாரட்ன. கொழும்பில் நேற்று நடைபெற்ற அதி காரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப் படுத்துவோம் அமைப்பின் ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத் துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “”காரணமின்றி கைதுசெய்து…

Read More

கல்குடா கல்வி வலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்த தடை

மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்தார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த தடை அமுலுக்கு வரவுள்ளது. இதற்கான சுற்றுநிருபங்கள் வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு மாணவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதேநேரம், இதனை மீறும் தனியார் கல்வி நிலைய முகாமையாளர்களுக்கெதிராக…

Read More

கடல் மாசுறுதல் தடை அதிகாரசபை நடத்தும் தமிழ் மொழி மூல கட்டுரைப் போட்டி

தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்களுக்கான வசன மற்றும் கவிதையடிப்படையிலான கட்டுரை போட்டியொன்றை நடத்த கடல் மாசுறுதல் தடை அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நீல நீரில் உருவாகும் பொருளாதாரத்திற்கு சமுத்திர சூழலை பாதுகாப்பது அவசியம் என்ற தொனிப்பொருளில் இக்கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த கடல் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் இந்த கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளது. கடல் எமது வளம்- கடல் பொருளாதாரத்திற்கான அடித்தளம்- சமுத்திரத்தைப் பாதுகாப்பது…

Read More

இலங்கை ராணுவத்தை விட்டு சட்ட விரோதமாக விலகியவர்களுக்கு ஒரு நல்ல செய்தி

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள படை வீரர்கள் சட்ட ரீதியாக இராணுவத்தை விட்டு விலகுவதற்கான பொது மன்னிப்பு காலம் இன்று தொடக்கம் எதிர்வரும் 16ம் திகதிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் படை வீரர்கள் தங்களது படைப் பிரிவு அலுவலகத்திற்குச் சென்று சட்ட ரீதியாக இராணுவத்தில் இருந்து விலகிச் செல்ல முடியும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கு அமைய இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கணினி தாக்குதல்களை நடத்துபவர்கள் மீது பொருளாதாரத் தடை: ஒபாமா

அமெரிக்க இலக்குகள் மீது சைபர் தாக்குதல்களை நடத்துபவர்கள் மீதும், அந்தத் தாக்குதல்களால் பலன் அடைபவர்களையும், தண்டிக்க உள்ள பொருளாதாரத் தடைகளை பிரயோகிப்பதை, அந்நாட்டின் அதிபர் ஒபாமா அங்கீகரித்துள்ளார். அதிகரித்துவரும் இத்தகைய சைபர் தாக்குதல்களை, தேசிய அவசர நிலையாக விவரித்துள்ளார். அமெரிக்கவை எதிர்நோக்கியிருக்கும் மிக மோசமான பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு சவால்களுள், இந்த சைபர் தாக்குதல்களும் அடங்கும் என அவர் கூறினார். வங்கி அமைப்புகள் போன்று மிகவும் நுட்பமான கணினி வலையமைப்பு கொண்ட அமைப்புகளின் மீது சைபர்…

Read More

குழந்தைகளின் கூச்சல் ஒலி மாசாகாது என்று ஜப்பானில் புதிய விதிமுறை

ஜப்பானிய தலைநகர் டோக்கியோ நகரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி சிறுவர்கள் விளையாடும் போது போடும் கூச்சல் சத்தம் , ஒலி மாசாக கருத்திற்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் 45 டெசிபலுக்கும் அதிகமான ஒலி எழுப்பப்படுவதை தடுக்கும் நடவடிக்கை இது வரை அமுலில் இருந்த்து. இதனால் பாலர் பள்ளிகளில் சத்தக் கட்டுப்பாடு சாதனங்கள் நிறுவப்பட்டன. வெளியிடங்களில் சிறுவர்கள் விளையாடுவது கூட சில நேரங்களில் தடை செய்யப்பட்டது. புதிய விதிமுறையின் காரணமாக டோக்யோவில் சிறார் நல நிலையங்கள் பல…

Read More

45 ஆண்டுகளுக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கும் நரகத்தின் நுழைவு வாயில்

துர்க்மெனிஸ்தானின் அகால் மாகாணத்தில் தர்வாஷ் கிராமத்தில் பூமியின் மேற்பரப்பில் எப்போதும் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பெரிய துளை ஒன்று கண்டு பிடிக்கபட்டது. இந்த துளையை 1971 ஆம் ஆண்டு ரஷ்ய ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டு பிடித்தார். அந்த துளை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தீ ஜூவாலை வெளிப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இந்த் துளை 70 மீட்டர் அகலம் உள்ளது.இதன் ஆழம் 20 மீட்டர் ஆகும்.இந்த துளையில் இருந்து உயர ரக எரிவாயு…

Read More

கிழக்கிலங்கை அற­புக்­கல்­லூரி மாண­வர்­க­ளி­னது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்துக: அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி உத்தரவு

அட்­டா­ளைச்­சேனை, கிழக்­கி­லங்கை அற­புக்­கல்­லூரி மாண­வர்­க­ளி­னது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் மாடிக் ­கட்­டி­டத்­தி­ல் பாது­காப்பு முறை­மை­யினை மேற்­கொள்­ளு­மாறு அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­ப­தியும் நீதிவான் நீதி­மன்ற நீத­வா­னு­மா­கிய எச்.எம்.எம்.பஸீல் நேற்று கல்­லூரி நிரு­வா­கத்­திற்கு உத்­த­ரவு பிறப்­பித்தார். இக்­கல்­லூ­ரியின் 03ஆம் வரு­ட­ மா­ண­வ­னா­கிய ஜே.றவூஸ்டீன் வயது (16) கடந்த பெப்­ப­ர­வரி மாதம் 13ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை 03ஆவது மாடி­யி­லி­ருந்து விழுந்து மரணமடைந்தார். இத­னை­ய­டுத்து அக்­க­ரைப்­பற்று பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­யை­ய­டுத்து இக்­கல்­லூ­ரியின் மாடிக்­கட்­டிடத்தின் வெளிப்­ப­குதி அங்­கி­ருந்த மாண­வர்­களின் பாது­காப்­புக்கு உகந்­த­வை­யாக அமை­யா­தி­ருந்­தமை பற்றி…

Read More

விமானமொன்றேனும் சொந்தமில்லாத விமான சேவை நிறுவனத்தைக் கொண்ட நாடு இலங்கையாகும்: பிரதமர்

விமானம் ஒன்றேனும் சொந்தமில்லாத ஒரே விமான சேவை நிறுவனத்தைக் கொண்ட நாடு இலங்கையேயாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எங்கள் விமான சேவை நிறுவனங்களிடம் பஸ், லொறி உள்ளிட்ட ஏனைய வாகனங்களே உண்டு. ஸ்ரீலங்கன் விமான சேவை நாட்டுக்கு பெரும் சுமையாகவே காணப்படுகின்றது. விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து மூவர் அடங்கிய ஆணைக்குழு விசாரணை…

Read More

உங்கள் உறவுகளும் யேமனில் சிக்கியுள்ளனரா? உடன் அழைக்கவும்!

யேமனில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனால் யேமனில் உள்ள தங்கள் உறவினர்கள் குறித்து தகவல்களை0112323015 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. யேமனில் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் விமான நிலையங்கள் மூடப்பட்டு நாட்டில் குழப்ப நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

முழு முக தலைக்கவச தடை இன்று முதல் அமுலில்

முழு முகத்தையும் மறைத்து தலைக்கவசம் அணிய மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் அமுலுக்கு வருகிறது. எச்சரிக்கை சந்தர்ப்பமாகவே இத்தடை செயற்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய தமிழ் யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 14ஆம் திகதியன்று மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி, சீகிரிய ஓவியங்கள் மீது கிறுக்கியிருந்தார். இந்தக் குற்றத்துக்காக குறித்த யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய அகழ்வாராச்சி பொருட்களை பாதுகாக்கும்…

Read More