Headlines

இலங்கையிலுள்ள தமிழ் பெயர்கள் அகற்றப்படும்: இராவணாபலய ஆவேசம் (2ம் இணைப்பு)

யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீப என்ற பெயரை நைனாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் ஊர்களின் பெயர்களையும் தாம் அகற்றுவதாக இராவணாபலய அமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்கும் வகையில் இராவணாபலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு இன்று சென்றிருந்தது. எனினும், ஜனாதிபதியை இன்று சந்திக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 2.30க்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் இராவணாபலய அமைப்புக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து…

Read More

பொலநறுவை ஹோட்டல் ஒன்றில் நெதர்தலாந்து பிரஜை மரணம்

பொலநறுவையில் வெளிநாட்டவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 65 வயதான நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழுந்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலநறுவை புதிய நகர் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

ஒபாமாவுக்கு சீனா எச்சரிக்கை!

சீனா – ஜப்பான் இடையே பல தீவு கூட்டங்கள் உள்ளன. இவை ஜப்பானுக்கு சொந்தமானவை. ஆனால், அவற்றுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் சீனாவின் தெற்கு கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ், கொரியா நாடுகளுக்கு சொந்தமான இடங்களையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் அந்த நாடுகள் இடையே பதட்டமன நிலை நிலவி வருகிறது. ஜப்பான், பிலிப்பைன்ஸ், கொரியா நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. இதனால் அமெரிக்கா– சீனா இடையே பனிப் போர் நிலவி வருகிறது. இந்த…

Read More

திலக் மாரப்பனவின் பதவி விலகல் மிகச்சிறந்த முன்னுதாரணம்: மங்கள சமரவீர

முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பனவின் பதவி விலகல் அரசியலில் மிகச்சிறந்த முன்னுதாரணம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, அவண்ட் கார்ட் விவகாரத்தில் அரசாங்கம் கடும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ள இருந்தது. அக்கட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாரப்பனவின் ராஜினாமா அரசாங்கம் மீது அழுந்திக் கொண்டிருந்த நெருக்கடியைத்தணிக்க உதவியது. அந்த வகையில் அவரது செயற்பாடு பாராட்டத்தக்க ஒரு முன்மாதிரியாகும். நாட்டுக்கு நல்லதோர் முன்மாதிரியை வழங்குவதற்கு…

Read More

அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்த்து இராவணா பலய ஆர்ப்பாட்டம்

– அலுவலக செய்தியாளர் –  அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராவணாபலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்துள்ள இராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகள், ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார். தமிழ் அரசியல் கைதிகள் என கூறப்படுவோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும், அவர்களை விடுதலை செய்வது தவறு எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலி அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்வதன்…

Read More

மட்டு.மாவட்­டத்தில் மூன்று தினங்கள் மின்­வெட்டு

இலங்கை மின்­சார சபையின் திருத்­தப்­ப­ணிகள் கார­ண­மாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இன்று முதல் மூன்று தினங்கள் 9 மணி­நேர மின்­வெட்டு அமுல்­ப­டுத்தப் பட­வுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட மின்­அத்­தி­யட்­சகர் பணி­மனை தெரிவித்­துள்­ளது. இன்று 19.11.2015ஆம் திகதி திரு­மலை வீதி (பொலிஸ் நிலைய பகுதி) , அரு­ண­கிரி வீதி, பூம்­புகார், லொயிட்ஸ் அவன்யூ, ஒலிவ் லேன், டயஸ் வீதி, சின்­ன­ஊ­றணி, பெரி­ய­ ஊ­றணி, இரு­த­ய­புரம், கொக்­குவில், ஞானசூரியம் சதுக்கம், சவுக்­கடி, தளவாய், புண்­ணை­குடா ஆகிய இடங்­க­ளிலும் நாளை 20.11.2015ஆம் திகதி மண்டூர், கணே­ச­புரம்,…

Read More

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை : மங்கள ​

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது 116 அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய முடி­யு­மாயின் ஏன் மீத­முள்­ள­வர்­களை விடு­தலை செய்­ய­மு­டி­யாது. அர­சியல் கைதி­களை விடு­விப்­பதில் தவறில்லை. அவர்­களை சமூ­க­ம­யப்­ப­டுத்த வேண்டும் என வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். அத்­துடன் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை இன்னும் வைத்­தி­ருப்­பதில் அர்த்தம் கிடை­யாது. குறித்த தடைச்­சட்­டத்தை நீக்­கி­விட்டு சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு ஏற்றால் போல் புதிய சட்டம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய தேசிய கட்­சியின்…

Read More

வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவளிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாளை வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார். இந்த வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவளிப்பது என சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நிறைவேற்றுக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்படும். தேசிய ரீதியில் முக்கியமான தீர்மானங்களை…

Read More

பிரதமர் பதவிக்காகக் களமிறங்கமாட்டேன்! ஜனாதிபதி

ரதமர் பதவிக்காக தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி பதவிக்காக மீண்டும் நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன். ஒரு தடவை மாத்திரமே அந்தப் பதவியை வகிப்பேன். அத்துடன், ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் நான் பிரதமர் பதவிக்காக தேர்தலில் போட்டியிடுவேன் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறானதொரு எண்ணம் எனக்குக் கிடையாது. மக்களுக்கு…

Read More

விசாரணையில் இன்று பங்கேற்க முடியாது! மஹிந்த

ஐடிஎன் பணநிலுவை தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். தமது 70வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கண்டிக்கு வழிபடுகளுக்காக செல்லவேண்டியுள்ளமையால் இந்த விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று அவர் அறிவித்துள்ளார். தேர்தல் காலத்தின்போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல மில்லியன் ரூபா நிலுவை செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் மஹிந்த கடந்த நான்கு தடவைகளாக பாரிய ஊழல் எதிர் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டார். எனினும் இன்று அவரின் சார்பில்…

Read More

இலங்கையுடன் உறவு தொடரும்: அவுஸ்திரேலியா

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜூலியா பிஸப் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையும் அவுஸ்திரேலியாவும் புரிந்துணர்வுடன் கூடிய உறவைக் கொண்டிருக்கின்றன. அவுஸ்திரேலியாவில் சுமார் 130, 000 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவின் அபிவிருத்திக்கு உறுதுணையாக செயற்பட்டு வருகின்றனர் என்றும் பிஸப் குறிப்பிட்டுள்ளார்’

Read More

தமயந்தி ஜயரத்னவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைப்பு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன இன்று பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை எவன்கார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்று கொள்வதற்காகவே அழைப்பட்டுள்ளார்.இதற்கிடையில் எவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாளைய தினம் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக ஆணைக்குவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read More