Headlines

ஜனாதிபதியின் தன்சலின் போது தீப்பற்றிக்கொண்ட முச்சக்கர வண்டி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்சலை ஆரம்பித்த போது முச்சக்கர வண்டி தீப்பற்றிக்கொண்டுள்ளது. பொசோன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பராக்கிரம சமுத்திரத்திற்கு அருகாமையில் இந்த தன்சல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதேச மக்கள் இணைந்து தீயை அனைத்துள்ளனர். முச்சக்கர வண்டி முற்று முழுதாக தீப்பற்றிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தன்சலுக்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருகை தந்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

Read More

எகிப்து முன்னாள் அதிபர் மோர்சி மரண தண்டனையில் 16-ம் தேதி இறுதி தீர்ப்பு

எகிப்து முன்னாள் அதிபர் முகம்மது மோர்சி மீது 2011ம் ஆண்டு சிறைக்கைதிகள் தப்பிச் செல்வதற்கு உதவியாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை இறுதி தீர்ப்பு வரும் 16-ம் தேதி அறிவிக்கப்படும் என கெய்ரோ கோர்ட் தெரிவித்துள்ளது. எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி(63). முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைப் பிடித்த மோர்சியால் ஓராண்டுக்கு மேல்…

Read More

கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களுக்கு சீ.சீ.டி.வி கமெரா

கொழும்பில் உள்ள பள்ளிவாசல்களில் சீ.சீ.டி.வி கமெரா வசதிகள் இல்லாத பள்ளிவாசல்களுக்கு கமெராக்களை பொருத்துவதற்கும் றமழான் மாதத்தில் இரவு நேரங்களில் பள்ளிவாசல்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று முஸ்லிம் விவகாரங்கள் மற்றும் தபால் அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. முஸ்லிம் விவகாரங்கள் மற்றும் தபால்துறை அமைச்சர் அப்துல் ஹலீம் மொஹமட் ஹசிமினின் பணிப்பில் அமைச்சரின் அந்தரங்க செயலாளர் பாஹிம் ஹாஷிம் தலைமையில் பொரளை பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது. கொழும்பை சேர்ந்த பள்ளிவாசல்களின்…

Read More

பள்ளிவாயல் நிர்மாணிப்பதற்கு உங்கள் 100 ரூபாவையாவது தந்து உதவுங்கள். மூடப்பட்ட மபாஸா பள்ளிவாயலின் தலைவர் வேண்டுகோள்…

இர்ஸாத் ஜமால் பொத்துவில் கிராம சேவகர் பிரவு -05ல் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பமாஸா பள்ளிவாயல் கடந்த மாதம் 28ம் திகதி தொடக்கம் மூடப்பட்டிருப்பது வாசகர்கள் அறிந்த விடயமாகும். குறித்த பள்ளிவாயல் முறையற்ற வகையில் தனக்குச் சொந்தமான காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாக கொண்டு  நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டது. குறித்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் வழக்கை தொடுத்தவரான அக்கறைப்பற்றை பிறப்பிடமாகவும் தலைநகரை அண்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தாஹீர் என்பவருக்கே காணி சொந்தமானது என தீர்ப்பு வழங்கியது….

Read More

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கைவிடுங்கள்: மியான்மருக்கு ஒபாமா எச்சரிக்கை!

பல ஆண்டுகளாக ராணுவத்தின் பிடியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு முன்னேறிச் செல்லும் மியான்மர், சிறுபான்மையின ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ராணுவ அடக்குமுறையால பல ஆண்டுகளாக ஆட்சி செய்யப்பட்டு வந்த மியான்மரில், 2011-ம் ஆண்டு நிகழ்ந்த மாற்றத்திலும் ஜனநாயக போக்குக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு அளித்து வந்தார். இந்த நிலையில் தற்போது ஜனநாயகத்துக்கு எதிராக ரோஹிங்கிய முஸ்லிம் மக்களிடம் மியான்மர் அரசு காட்டும் போக்கை அமெரிக்க…

Read More

உலக புகைபிடித்தல் எதிா்ப்பு தினத்தையொட்டி பிரதமருக்கு மாணவா்கள் கொடி அணிவிப்பு

அஸ்ரப் ஏ சமத் உலக புகைபிடித்தல் எதிா்ப்பு தினத்தையொட்டி பிரதமா் ரணில் விக்கிரகசிங்கவுக்கு பாடாசலை மாணவா்கள் கொடியொன்றை அணிவித்தனா். இது அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் இந் கொடி விற்பனை தினத்தை சமுாத்தி அதிகரிகள் ஊடகா அமுல் படுத்தபட உள்ளது. படத்தில் சமுா்த்தி வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதியமைச்சா் அமீர் அலியும் காணப்படுகின்றனா்.

Read More

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2 எண்ணெய் கிணறுகள் – விலைமனு கோர திட்டம்

நாட்டில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு எண்ணெய் கிணறுகளில் எண்ணெய் படலத்தை பெற்றுக்கொள்வதற்கு விலைமனு கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 02 மாதங்களுக்குள் விலைமனு கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ் படகொட தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விலைமனு கோரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகளில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பீ.எம்.எஸ் படகொட மேலும் கூறினார்.

Read More

சவூதியில் மூன்று மணி நேர பிரச்சாரத்தின் பலனாய் 15 நபர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்!

மௌலவி செய்யது அலி ஃபைஜி ரப்ஹா என்பது சவுதி அரேபியவின் சிறு நகரங்களில் ஒன்றாகும். எல்லா நகரங்களையும் போல் இங்கும் இஸ்லாமிய பிரச்சார மையம் செயல் பட்டு வருகிறது. கடந்த சனி கிழமை இந்த பிரச்சார மையத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்காக ஒரு பிரத்தியோக வகுப்பு நடை பெற்றது. மூன்று மணி நேரம் நடைபெற்ற அந்த வகுப்பில் இஸ்லாத்தின் அடிப்படைகள் அங்கு வந்தவர்களுக்கு தெழிவாக விளக்க பட்டது. மூன்று மணி நேர உழைப்பின் பலன் உடனடியாக…

Read More

துருக்கியை மீண்டும் இஸ்லாமிய தேசமாக கட்டி எழுப்பும் முயற்சி துருக்கி அதிபரால் தொடக்கம்!

மௌலவி செய்யது அலி ஃபைஜி துருக்கி என்பது ஒரு இஸ்லாமிய தேசம் ஒரு காலத்தில் கிலாபத்தின் உறுதிமிக்க தலைமைபீடமாக திகழ்ந்த துருக்கி கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு வந்த ஆட்சியாளர் முஸ்லிம் விரோதிகளாகவே மாறி மத சார்பின்மை என்ற பெயரில் துருக்கியில் இருந்து இஸ்லாமிய அடையாளங்களையே அழிக்க முனைந்தனர். அண்மைகாலம்வரை இந்த இழி நிலையே துருக்கியில் நீடித்து வந்தது. தர்போதைய துருக்கி அதிபர் ரஜப் எர்துாகான் அவர்களின் ஆட்சியில் மீண்டு ஒரு உண்மையான இஸ்லாமிய தேசமாக துருக்கி உருவெடுப்பதர்கு…

Read More

உலகிலேயே முதன் முதலாக முகத்தை அடையாளம் கண்டு பணம் கொடுக்கும் ஏடிஎம்: சீனாவில் புது கண்டுபிடிப்பு!

உலகிலேயே முதன் முதலாக, முகம் பார்த்து பணம் கொடுக்கும் ஏடிஎம் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு செல்லாமலேயே ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுப்பது வசதியாகவும், எளிதாகவும் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு நேரடியாக செல்வதை விட ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கின்றனர். டெபிட்கார்டு மூலமான பரிவர்த்தனையும் அதிகமாக உள்ளது. அதேநேரத்தில், டெபிட்கார்டு ரகசிய எண்களை தெரிந்து கொண்டு பணம் திருடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சிப் உடன் கூடிய கார்டுகள், ஆன்லைன் பரிவர்த்தனைக்காக…

Read More

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை : ஜனாதிபதி

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மரணதண்டனை கொண்டுவரப்பட வேண்டும் என்ற பொதுப் பேச்சுக்கான முன்னெடுப்பொன்றை யோசனையாக முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் அவர்களின் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மரணதண்டனையைக் கொண்டு வருவது தொடர்பில் தீர்மான மொன்றுக்கு வரவிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக புகைத்தல் ஒழிப்பு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். “மரணதண்டனையை மீளக்கொண்டு வருவதற்கு சர்வதேச மனித…

Read More

மலையக தமிழ் மொழி மூல முஸ்லிம் பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனங்கள்

அப்துல் வாஹித் குத்தூஸ்  கடந்த அரசாங்கத்தின் கல்வியமைச்சின் 2014/08/08 ந் திகதி இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலில் மலையகத்தின் பதினொரு மாவட்டங்களின் அனைத்து கல்வி வலயங்களிளுமுள்ள தமிழ் பாடசாலைகளில் கற்பிப்பதற்காக 3௦14 ஆசிரிய வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன . இதற்கமைய மலையக தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்களில் முஸ்லிம் பாடசாலைகள் முற்றாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளமை தொடர்பாக மலையக முஸ்லிம் கவுன்சில் மூலம் கடந்த 2015/03/25 ந் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்…

Read More